search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicles parked"

    • அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்வதாகவும், மேலும் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறுகள் ஏற்படுத்தியும் வந்தனர்.

    இதனால் இந்த பகுதி களில் அடிக்கடி விபத்து க்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் இது குறித்து பொதுமக்கள் அந்தியூர் போக்குவரத்து போலீசாரி டம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வாகன உரி மையாளர்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களில் நிறுத்தி விட்டு வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நில வியது.

    • வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.
    • வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது.

    உடுமலை :

    உடுமலை நகரில் ராஜேந்திரா ரோடு, கல்பனா வீதி, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள் பிரதான பகுதியாக உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகின்றன.தினமும் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனி இடம் கிடையாது. பெரும்பாலான வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு, தங்கள் பணிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ரோடுகளில் தினமும் இடநெருக்கடி நீடிப்பதால், வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

    முறையற்ற போக்குவரத்து, வாகன நிறுத்தம் இல்லாமை போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கின்றனர். மத்திய பஸ் நிலையம் ஒட்டிய ரோடுகளில், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சிறு விபத்துக்களும் அதிகரிக்கின்றன. பிரதான பகுதிகளில், வாகன நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்தாவிடில், உரிமத்தை புதுப்பிக்க அனுமதிக்கக்கூடாது. விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது, போன்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே விதிமீறலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஈரோடு பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது.
    • இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளி மாவட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இதில் வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதியாக மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சத்தி ரோடு மற்றும் மினி பஸ் ரேக் கீழ் பகுதிகளில் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் தங்களது சைக்கிள், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களாகவே சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அதனை முறையாக சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் தங்கள் மனப்போக்கில் பஸ் நிலைய கடைப்பகுதியில் முன்புறமும், ஓரமாகவும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களை கள்ள சாவி போட்டு திருடி செல்கின்றனர். பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக போலீஸ் நிலையத்திலும் புகார்கள் வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து திடீர் சோதனை செய்தனர். அதில் முறையில்லாமல் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை சிலர் நிறுத்தி வைத்தி ருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் எடுத்து வைத்து ள்ளனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவித்து தங்களது சாவிகளை வாங்கிக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறியதாவது:

    ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு என்று மாநகராட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிலர் முறையாக வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள்.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தாமல் ஆங்காங்கே கடை முன்பும் ஓரமாகவும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். பின்பு மாலை வந்து வாகனங்களை எடுத்து விட்டு செல்கிறார்கள்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் கள்ள சாவிகளை போட்டு வாகனங்களை திருடும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.
    • பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினரும் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநாகராட்சி 54வது வார்டு ஆலங்காடு பகுதியில் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றார்கள்.இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. பலஆண்டுகளாக போராடி தற்பொழுதுதான் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆலங்காடு கடைசி வீதி மேடு பகுதியாக உள்ளதால் கழிவு நீர் செல்ல ஏதுவாக தனியார் இடத்தின் வழியாக குழாய் அமைத்து கழிவுநீரை கொண்டு செல்ல மாநாகராட்சி மூலம் முடிவு செய்து அதற்கான பணிகளும் நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலமாக குழாய் பதிக்க குழி தோண்டிய போது இதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நடுவே நிறுத்தினார்கள். இதனால் பணி நிறுத்தப்பட்டது.இதனால் அப்பகுதி பொதுமக்களும் 54வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் தலைமையில் முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இடையூறாக நிறுத்திய வாகனங்களை எடுத்து செல்லமுடியாத அளவிற்கு பொதுமக்களும் தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்களிடம் உடனடியாக வாகனங்களை எடுத்து பணி செய்யவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.இதனை தொடர்ந்து வாகனங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக எடுத்தார்கள். பின்பு பணி தொடங்கியது.

    முதுகுளத்தூர் பஜார் பகுதியில் சரக்கு, வாடகை வாகனங்களை நிறுத்துவதால், வாகனங்கள் இயக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரில் உள்ள கடைகளுக்கு வெளியூர்களில் இருந்து பொருட்களை இறக்க வரும் சரக்கு வாகனங்கள், பஜார், தேரிருவேலி விலக்கு சாலை யோரங்களில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், குறுகலாக உள்ள பஜார் ரோட்டில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் நடு ரோட்டில் நிறுத்தபடும் அபாயம் உள்ளது.

    ஆகவே ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வெளியூர் சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ×