search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A wave of people"

    • ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது.
    • இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

    சேலம்:

    ஆயுத பூஜை நாளை மறுநாள் திங்கட் கிழமையும், செவ்வாய்க்கிழமை விஜய தசமியும் வருகிறது. அதற்கு முந்தைய நாட்களான சனிக் கிழமையான இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அலை மோதிய கூட்டம்

    இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதனால் பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் இருந்தது.

    குறிப்பாக சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், புதுச்சேரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.

    இதே போல சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக சென்ற பஸ்களிலும் கூட்டம் அலை மோதியது. இதையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர்.

    போக்குவரத்து நெரிசல்

    அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், தனியார் ஆம்னி பஸ்களும் வெளியூர்களுக்கு அதிக அளவில் இயக்கப்பட்டதாலும் புதிய பஸ் நிலையத்தை சுற்றி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல தென் மாவட்டங்களுக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழி யர்களின் வாகனங்கள் சென்றதால் ஏ.வி.ஆர். ரவுண்டானா, திருவாக்க வுண்டனூர், கந்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அதிக அளவில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.

    ரெயில்கள்

    இேத போல சேலம் வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் கோவைக்கு சென்ற ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது . முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்த படி பயணிகள் ஏறி சென்றனர். இன்றும் அனைத்து ரெயில்களிலும் அதே நிலை நீடித்தது.

    • பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
    • இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.

    இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.

    பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ×