என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனிருத்"
- நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், நடன இயக்குனர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது:- என்னுடைய சகோதரர் இயக்குனர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குனர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல சவாலானது. பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.
ஷாருக்கான் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கிங் கான் ஷாருக்... நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவில் பேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன். ஷாருக்கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்து கொண்டு எனக்காக பிரத்தியேகமான ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தி திரைப்படமாக பார்க்காமல் இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க திரைப்பிரபலங்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதில், "தலைவர் நிரந்தரம் நெல்சா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Thalaivar Nirandharam ???
— Anirudh Ravichander (@anirudhofficial) August 10, 2023
Nelsaaa ???
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.
- ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் சென்னை திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு என்ற வரிகளை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"Pattattha Parikka Nooru Paeru
— An angry commoner ?? ?? (@AnCommoner) August 10, 2023
Kuttich Chevuttha Ettip Paatthaa
Usura kodukka Kodi Paeru" #JAILER #JailerFDFS #Rajinikanth? #Superstar #AnirudhRavichander Is there potential for Vijay and his team to reconcile and work together again with #Anirudh ??? #Vijay #Leo pic.twitter.com/D5XWzjswFh
- அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரம்பொருள்.
- இப்படத்தின் மூலம் முதல் முறையாக அனிருத் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார்.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் பரம்பொருள்.
- இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பரம்பொருள். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான அடியாத்தி பாடல் இன்று வெளியாகும் என்று தெரிவித்து அந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
So kicked to share this with you all tomorrow. Here's a glimpse of what we've been working on. #Adiyaathi from #ParamporulMovie releasing tomorrow. @anirudhofficial@realsarathkumar @amitashpradhan @aravind275 @kashmira_9 @KavingarSnekan @u1records @onlynikil @gobeatroute pic.twitter.com/6qKm5hdlUa
— Raja yuvan (@thisisysr) August 7, 2023
- யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு, நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
- இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரை பதிவிட்டு வந்தனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி மற்றும் பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில், எனது அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசை அமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பெயரை கீழே பதிவிடுங்கள், அதைச் செய்வோம்! என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் பெயர்களை பதிவிட்டு வந்தனர். மேலும் பலரும் அனிருத் என்று தங்களின் விருப்பத்தை பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, அவர்களின் விருப்பத்திற்கு இனங்க அனிருத்துடன் இணையவுள்ளதாக வித்யாசமான முறையில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
We heard you.@anirudhofficial pic.twitter.com/NWhFvxXTnw
— Raja yuvan (@thisisysr) August 1, 2023
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசியதாவது, இது என்னுடைய 4வது படம் ஆனால் இது என்னுடைய முதல் ஆடியோ லாஞ்ச். தலைவர் பாராட்டும்போது கிண்டலாக பேசுகிறாரா அல்லது உண்மையாக இருக்கிறாரா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.
படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் போன்ற கட்டுப்பாடு மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஒரு பக்கம். மறுப்பக்கம் விடிவி கணேஷ் போன்ற கட்டுப்பாடு இல்லாத நடிகர்கள். இரண்டையும் நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ரஜினிகாந்த் சார் எனக்கு உதவினார்.. நன்றி சார். என்று பேசினார்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' மற்றும் 'இது டைகரின் கட்டளை' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் 'ஹுக்கும்' பாடலை பாடி ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அனிருத் இந்த பாடலை இரண்டாவது முறை பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் நாளை (6-ஆம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 'காவாலா' பாடல் புரோமோ யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Kaavaalaa fever starts❤️?Promo Trending No.1 on Youtube!
— Sun Pictures (@sunpictures) July 5, 2023
▶️ https://t.co/Jd1vmd0F0i@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer pic.twitter.com/aML9cMhP6h
- இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு காமெடியான புரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் கவின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டினார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் சில விஷயங்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், லியோ படத்தின் காட்சிகளை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், இந்த படம் எந்த லெவல் போகும்னு தெரியாது. அந்த மாதிரி இருக்கு. நீங்க கண்ண மூடிட்டு எவ்வளோ பெரிய ப்ளாக் பஸ்டர் ஆகும்னு யோசிக்கலாம் என்று தயாரிப்பாளர் லலித் குமாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்