search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி ஆய்வு"

    • இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா?
    • முதல்- அமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து எடுத்துரைத்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகள் சரிவர செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் மற்றும் நிலுவையில் உள்ள தணிக்கைகள் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து என டாக்டர்களிடம் எடுத்துரைத்தார்.

    அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.

    • மாணவர்களுக்கு வழங்கும் உணவுகள் சோதனை
    • வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தர வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 சிறிய கிராமங்களை கொண்டு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மலையில் அத்தனாவூர் அடுத்த பழதோட்டம் அருகில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது.

    ஏலகிரி மலையில் ஒரே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஏலகிரி மலையில் உள்ள மாணவ, மாணவிகளும், ஜவ்வாது மலை, ஆலங்காயம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மற்ற பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. மாணவிகளுக்கு விடுதிகள் இல்லாமல் இருந்தது. பின்பு 2 வருடங்களுக்கு முன் தாட்கோ நிதியின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது.

    இந்நிலையில் நேற்று பழங்குடியினர் நலம் மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ்குமார் அரசு பழங்குடியினர் விடுதிகளை திடிரென ஆய்வு செய்தார்.

    மேலும் இங்குள்ள மாணவர்கள் தங்கும் இடத்தையும், கழிப்பிடங்களையும், குடிநீர், சமையலறைகளையும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை சமையலறையில் எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில் உடனடியாக இணைப்பை வழங்க உத்தரவிட்டார்.

    மேலும் புதிதாக கட்டி உள்ள மாணவிகளின் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பின்னர் வரும் கல்வியாண்டில் அதனை திறந்து சேர்க்கை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவர்கள் தங்கும் விடுதி விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஏலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுத்து வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.

    மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட பழங்குடியினர் அலுவலர் கலைச்செல்வி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் திருமால் மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது.
    • மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி-பனமரத்துப்பட்டி-சேசன்சாவடி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டது. மேலும், வளைவுகளில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஒருங்கிணைந்த சாலை உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தில் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்தது.

    அந்த நிதியின் மூலம் அச்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் நிறைந்த இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்தும், பல்வேறு இடங்களில் பழுது நீக்கியும் சீரமைத்தனர்.இப்பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், சாலையை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவர், சாலையை அகலப்படுத்திய இடத்தை பார்வையிட்டு அதன் தரத்தையும், தளத்தின் அளவுகளையும் பார்வை யிட்டார்.

    தொடர்ந்து, சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, சேலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

    • தனியார் உரக்கடைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
    • இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி  பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதில்லை. தரமற்ற போலியான உயிர் நுண்ணூட்ட இடுபொருட்களை விற்பனை செய்வ தாகவும், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படுமென, சேலம் மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்க செயலாளர் முருகன் தெரிவித்தார்.

    இதன் எதிரொலியாக, வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகலாதேவி தலைமையில், வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், வேளாண்மைத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது யூரியா, உரம் உள்ளிட்ட இடுபொருட்க ளின் இருப்பு நிலை சரி பார்த்ததோடு, பயோ பூச்சிக்கொல்லி மருந்துகளின் மாதிரிகளின் உண்மை த்தன்மையை அறிய மாதிரி கள் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய க்கூடாது. விவசாயிகள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். யூரியா, உரம் வாங்க வரும் விவசாயிகளிடம், இந்த தயாரிப்பு நிறுவனங்களின் மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்ப டுத்தக்கூடா தென, உரக்கடை விற்பனை யாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறை களை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகள், இடுபொருட்கள் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

    • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு கட்டித்தரப்படுகிறது
    • தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உடன் ெசன்றனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த வேப்பேரி, சிறுநமல்லி, நாகவேடுபோன்ற கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து குடும்பதாரர்களுக்கும் வறுமை கோட்டிற்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

    அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட இடத்தை வருவாய் துறை அதிகாரிகளால் தேர்ந்தேடுக்கப்பட்டு நேற்று அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா நேரில் சென்று இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுந்தரம், விஏஒ தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக அதிகாரி ஆய்வு நடத்தினர்.
    • கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவ மனையை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தேவையான சிகிச்சை முறைகளை கையாண்டு கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க மருத்து வர்கள் கண்காணிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மருச்சுக்கட்டி ஊராட்சி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பொதுமக்களிடம் தனி நபர் கழிவறை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிவறை கட்டிடம் கட்டி வழங்கப்படுகிறது. கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் ஆய்வகம் உட்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    பரமக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு அங்கு விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள தானிய பொருட்களை இருப்பு வைத்துள்ளதை பார்வையிட்டார். அரிய னேந்தல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடுகள் அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் திட்டம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு இதேபோல் மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்க ளுடன் ஆலோசனை நடத்தி னார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமார், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வருகிறது
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சாலையை அகலப்படுத்த அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம் பூர், வாணியம்பாடி பகு திகளில் மழைகாலங்களில் வெள்ள பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களை இணைக்கும் தரை பாலம் சேதமடைந்தால் போக்குவரத்து நடைபெறுவது சிரமமாக இருந்தது.

    அரசு இந்த 22 தரை பாலங்களில் 14 உயர்மட்ட பாலங்களை ரூ.30 கோடியில் மாற்றி அமைக்க அரசு ஆணையிட்டு அதன் படி கந்திலி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சின்னராம்பட்டி, உடையமுத்தூர், ஏழருவி, செலந்தம்பள்ளி, சொர்க யல்நத்தம், பச்சூர், கொத்தூர், அரங்கல்துர்கம், ஆலாங்காயம், பகுதியில் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை திருவண்ணா மலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ேநரில் சென்று பணிகள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

    மேலும் நாட்றம்பள்ளி - புதூர்நாடு செல்லும் 14 கி.மீ. சாலை 40 கிராமங்களுக்கு செல் லும் சாலையாக உள்ளது. தற்போதுரூ 4, கோடியில் இச்சாலையில் 14 கி.மீ. நீளத்திற்கு வனத் துறை அனுமதியுடன் சாலை பணிகள் மற்றும் தடுப்பு சுவர் பணிகள் நடந்து வருகிறது. இப்ப ணிகளில் சாலையின் அகலம், தடுப்புசுவரின் உறுதிதன்மையை ஆய்வு செய்து பணியை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    தர்மபுரி சாலை குனிச்சி பகுதியில் நடை பெறும், சாலை விரிவாக்க பணி, ஏலகிரி மலை சாலையில் போடப்பட்டுள்ள தார் சால ரமாக அகை்கப்படுகிறதா? போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ஆம்பூர் நகரம் மற்றும் பேர்ணாம்பட்டு சாலை பகுதிகளை ஆய்வு செய்து இச்சாலைகளை போக்குவரத்து நெரிசல் ஏற்படதவாறு சாலையை அகலப்படுத்த அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மீ.மணி சுந்தரம், ஜெ.அன்புஎழில், உதவிப்பொறியாளர் வெ.சீனிவாசன் உட்பட பலர் இருந்தனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை
    • விரைவாக பணிகளை முடிக்க அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நேற்று நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி உள்ள மக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடும் 10 மனுக்களின் பணிகளை தனி கவனம் செலுத்தி அவற்றினை நிறைவேற்றிட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் செயல்படுத்தி வரும் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்தும், அப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகள் நிலுவைகள் குறித்தும், நேரடியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநில பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் வி.சம்பத் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பின்னர் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் ஆற்காடு நகராட்சியில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் விவரங்கள் மற்றும் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் உணவின் தரம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களின் கருத்துக்கள் குறித்தும் கிடைக்கப்பெறுகிறதா என கேட்டு அறிந்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை மேலும் பள்ளிகளுக்கு விரிவு படுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆகவே இத்திட்டம் முறையாக செல்வதை கண்காணிக்க வேண்டும்.

    மேலும் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்தும், அதில் புதிதாக சேர்க்கைகள் சேர்ப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை தரிசனம் மேம்பாட்டு திட்டங்கள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். வங்கியின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுவதும் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுவது குறித்தும், நிலுவையில் உள்ள வங்கிகள் அதனை உடனடியாக முடிக்கவும் உத்தரவிட்டார்.

    நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தங்கள் தொகுதியின் முக்கிய பத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்திட அதற்கான திட்ட அறிக்கையினை வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி அதனை நிறைவேற்றிட மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

    இத்திட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளருடன் நேரடியாக விவரங்களை கேட்டு அறிந்து வருகின்றனர். ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ள கோரிக்கைகளை ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்களும் நேரடியாக கண்காணித்து அதற்கான ஆய்வு பணிகளையும் அதனை நிறைவேற்றிட தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இதில் எவ்வித தொய்வு இருக்கக் கூடாது விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, இணை இயக்குநர் வேளாண்மை வடமலை, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விதிமுறைகள் குறித்து ஆலோசனை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டையை அடுத்த கல்நார் சாம்பட்டி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) எருதுவிடும் விழா நடக்கிறது. எருது விடும் விழாவிற்கான முன்னேற்பா டுகள் குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர்லட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழாவில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராமநிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் பொதுப்ப ணித்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர், விழாக் குழுவினர் உடன் இருந்தனர்.

    • வாடிப்பட்டி பகுதியில் பல ஆண்டுகளாக வன சாலைகள் சீர்குலைந்து காணப்படுகின்றன.
    • மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி வழியாக பாலமேடு வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இதில் சாத்தையாறு அணை மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதி யையொட்டி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது.

    அந்த சாலை பல ஆண்டுகளாக சீர்குலைந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவது வாடிக்கையாகி வருகிறது. இது சம்பந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாநில வனத்திட்ட அலுவலர் விசுவநாதன் அந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட வன அலுவலர் குருசாமி தாபாலா, வனச்சரக அலுவலர் வெங்கடேசன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் வந்திருந்தனர்.

    மேலும் பல கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட குட்லாடம்பட்டி அருவி 4 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் சீர்குலைந்ததில் அருவிக்கு செல்லும் பாதைகள் படிக்கட்டுகள் சேதமடைந்து புதர்மண்டி இருப்பதை பார்க்காமலும், விராலிப்பட்டியில் இருந்து சிறுமலை மீனாட்சிபுரத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சாலை தொடங்கும் இடம் பற்றி புரிதல் இல்லாமல் அது பற்றி அறிந்தவர்களிடம் கலந்து ஆலோசிக்காமாலும் அதிகாரிகள் வந்து சென்றது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • பொது மக்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
    • அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியில் தாசில்தார் அலுவலகத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பொது இ- சேவை மையத்தில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் அலுவ லர்கள் அன்னலட்சுமி, கவுரி மண்டல துணை தாசில்தார் அரிதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    சேலம்:

    சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்கா–ணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து சேலம் இரும்பாலை சாலையில் புதுரோடு சந்திப்பை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்படவுள்ள பணிக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டியுள்ளது.

    இதேபோல் சேலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திலுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக அவ்வப்பொழுது மரங்கள் அகற்றப்படுகிறது. அவ்வாறுஅகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரங்களில் நடப்பட்டு வருகிறது.

    இதற்காக, சேலம் இரும்பாலை சாலையில் சோளம்பள்ளம் பகுதி–யில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நாற்றங்காலை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் அவரும் மரக்கன்றுகளை நட்டார்.

    ஆய்வின்போது கண்கா–ணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் துரை, உதவிக்கோட்டப் பொறியா–ளர்கள் சந்தோஷ்குமார், பிரபாகரன் பற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×