search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூரில் மேம்பாலங்கள், சாலைகளை அதிகாரி ஆய்வு
    X

    திருப்பத்தூரில் மேம்பாலங்கள், சாலைகளை அதிகாரி ஆய்வு

    • ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வருகிறது
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சாலையை அகலப்படுத்த அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம் பூர், வாணியம்பாடி பகு திகளில் மழைகாலங்களில் வெள்ள பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களை இணைக்கும் தரை பாலம் சேதமடைந்தால் போக்குவரத்து நடைபெறுவது சிரமமாக இருந்தது.

    அரசு இந்த 22 தரை பாலங்களில் 14 உயர்மட்ட பாலங்களை ரூ.30 கோடியில் மாற்றி அமைக்க அரசு ஆணையிட்டு அதன் படி கந்திலி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சின்னராம்பட்டி, உடையமுத்தூர், ஏழருவி, செலந்தம்பள்ளி, சொர்க யல்நத்தம், பச்சூர், கொத்தூர், அரங்கல்துர்கம், ஆலாங்காயம், பகுதியில் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை திருவண்ணா மலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ேநரில் சென்று பணிகள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

    மேலும் நாட்றம்பள்ளி - புதூர்நாடு செல்லும் 14 கி.மீ. சாலை 40 கிராமங்களுக்கு செல் லும் சாலையாக உள்ளது. தற்போதுரூ 4, கோடியில் இச்சாலையில் 14 கி.மீ. நீளத்திற்கு வனத் துறை அனுமதியுடன் சாலை பணிகள் மற்றும் தடுப்பு சுவர் பணிகள் நடந்து வருகிறது. இப்ப ணிகளில் சாலையின் அகலம், தடுப்புசுவரின் உறுதிதன்மையை ஆய்வு செய்து பணியை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    தர்மபுரி சாலை குனிச்சி பகுதியில் நடை பெறும், சாலை விரிவாக்க பணி, ஏலகிரி மலை சாலையில் போடப்பட்டுள்ள தார் சால ரமாக அகை்கப்படுகிறதா? போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ஆம்பூர் நகரம் மற்றும் பேர்ணாம்பட்டு சாலை பகுதிகளை ஆய்வு செய்து இச்சாலைகளை போக்குவரத்து நெரிசல் ஏற்படதவாறு சாலையை அகலப்படுத்த அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மீ.மணி சுந்தரம், ஜெ.அன்புஎழில், உதவிப்பொறியாளர் வெ.சீனிவாசன் உட்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×