search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth death"

    • நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.
    • நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி வி.ஐ.பி. நகர் தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது 30) மார்க்கெட்டிங் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

    அந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    தென்னரசு வீட்டில் உள்ள காலிங்பெல்லை அழுத்தினார். பலமுறை அழுத்தி சத்தம் கேட்டும் அவரது மனைவி கண் விழிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்போதும் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் தென்னரசு 2-வது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சுவர் வழியாக ஏற முயன்றார். அப்போது தவறி வீட்டுக்கு பின்புறம் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதற்கிடையே நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவரது உறவினர் அங்கு வந்து தென்னரசுக்கு போன் செய்தார்.

    அப்போது வீட்டின் பின்புறம் இருந்து தென்னரசுவின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது தென்னரசு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது.
    • பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

    ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது. அந்தப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்காமல் எச்சரிக்கை டேப் மட்டும் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் அந்தப்பகுதியில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருப்பதாலும், நள்ளிரவு மற்றும் தற்போது அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிரே உள்ள மேடு, பள்ளங்களை பார்த்து வாகனங்களை இயக்க முடிவதில்லை.

    இந்நிலையில் அங்கிருந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அம்பலப்புளி பஜார் பகுதியை சேர்ந்த பொன் இருளப்பன்(வயது32) என்பதும் ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர்.
    • உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் மேல்வாழை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவரது மகன் ராஜி (வயது 34). இவர் ஊரில் வேலை இல்லாமல் இருந்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடநெமிலி பகுதியை சேர்ந்த சங்கர் என்ற மேஸ்திரி மூலம் மும்பையில் வேலை பார்த்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று கடந்த 2 மாதம் முன்பு ராஜி மற்றும் ராஜுயுடன் சேர்ந்து 10 பேர் டெலிபோன் கேபிள் பதிக்கும் கூலி வேலைக்கு சென்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று ராஜி மும்பை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ெரயிலில் அடிபட்டு இறந்தார் என்று பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பின்னர்இறந்த ராஜியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் போலீசார் ராஜி உடலை ராஜி ஊரான மேல்வாழைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த ராஜி உடல் இன்று காலை மேல்வாழைக்கு வந்தது. இதை அறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டுராஜி சாவில் மர்மம் உள்ளது. ராஜியை மும்பையில் வேலையில் சேர்த்த மேஸ்திரி சங்கர் நேரடியாக இங்கு வர வேண்டும் என்று கூறி அவர்கள் இறந்த ராஜி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார், போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி அளி க்கபட்டது. அதனை தொட ர்ந்து போராட்டம் விலக்கி கொ ள்ள ப்பட்டது.

    • அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
    • மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.

    இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

    நேற்று அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கனகராஜ் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்
    • கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகு(வயது 45). இவரது மகன் கனகராஜ்(22). இவர் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கனகராஜ் கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கம்புளி சாலையில் வந்து கொண்டிந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வயலுக்கு போடப்பட்டு இருந்த வேலிக்கான கல்லில் மோதியது.

    இந்த விபத்தில் கனகராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த கனகராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கங்கா கர்த்தி பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பா, இவருடைய மகன் சென்னப்பா (வயது 30).
    • அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வந்த ஆட்டோ, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    கர்நாடகா மாநிலம் மைசூர் லிங்கரஹள்ளி கங்கா கர்த்தி பகுதியை சேர்ந்தவர் சங்கரப்பா, இவருடைய மகன் சென்னப்பா (வயது 30). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர்வீதிக்கு வந்தார். இங்கு அவர் கிடைக்கும் வேலை செய்து, இரவு நேரத்தில் கடைகள் பூட்டிய பிறகு துளசி மளிகை கடையின் அருகே படுத்துக்கொள்வார்.

    கடந்த மாதம் 23-ந்தேதி மாலை 6 மணி அளவில் துளிசி மளிகை கடை அருகில் சென்னப்பா நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வந்த ஆட்டோ, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சென்னப்பாவுக்கு கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அன்று சிகிச்சை பலனளிக்காமல் சென்னப்பா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னப்பா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கர்நா டகா மாநிலத்தில் உள்ள மேற்கண்ட முகவரிக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அந்த முகவரியில் சென்னப்பா வின் உறவினர்கள் யாரும் இல்லை. அவர் கொடுத்த முகவரி தவறாக உள்ளது என தெரியவந்தது. இத னால் உடலை ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது. எனவே இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அது குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதனிடையே போலீசார் விபத்துக்கு காரணமான ஆட்டோவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25).
    • மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25). இவர் சம்பவத்தன்று அரியலூருக்கு சென்றுவிட்டு, பின்னர் வி.களத்தூர் வழியாக அரும்பாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ராகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்.
    • கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 5-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் விஜயன் (வயது 23), டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையத்தில் உள்ள பேச்சாயி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • நல்லசாமி நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கீரனூர் அருகே வடக்குபட்டியை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 39). தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கீரனூர் வந்து விட்டு திருச்சி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நல்லசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையறிந்த கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் அரசு பஸ் டிரைவர் கரியாபட்டியை சேர்ந்த அழகர் (55) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    பேராவூரணி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாயி. இவரது மகன் மணிகண்டன் வயது (28), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, வேலை முடிந்து பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் திருக்கோவில் குளத்தில் குளிப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது கால் தவறி குளத்திற்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

    இந்நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மணிகண்டன் தண்ணீரில் இறந்து மிதப்பது கண்டு கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

    மேலும், தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ரஜினி, சுப்பையன், மகேந்திரன் ஆகியோர் மணிகண்டன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி அருகே பஸ் நிறுத்தம் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்அரசன் (வயது28). திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி புத்தகரம் கிராமத்திற்கு வந்த அவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனது ஆலை உரிமையாளரின் வீட்டிற்கு கடந்த 3-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    மன்னார்குடி அருகே கீழதிருபாலக்குடி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள பஸ் நிறுத்த கட்டிடத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜய்அரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் விஜய்அரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த வாலிபர் விபத்தில் உயிரிழந்தது புத்தகரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கந்தர்வக்கோட்டையில் இன்று குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோ ட்டை, பெரிய கோட்டை ஊராட்சி, கொத்தகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது 30). திருமணமாகாத இவர், திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த வாரம், திருப்பூரிலிருந்து கொத்தக பட்டிக்கு வந்தார். நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடினார்.

    இந்நிலையில் நேற்று மாலை குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கல்லுக்குளத்திற்கு சென்று, கரையில் துணிகளை வைத்துவிட்டு, குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், காப்பாற்ற முயற்சி மேற்கொண்டும் முடியாததால், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கிய சாமி தலைமையிலான வீரர்கள், குளத்தில் இறங்கி பாலசுப்பிரமணியம் உடலை மீட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×