என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் வாலிபர் பலி
    X

    சாலை விபத்தில் வாலிபர் பலி

    • வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25).
    • மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராகுல்(வயது 25). இவர் சம்பவத்தன்று அரியலூருக்கு சென்றுவிட்டு, பின்னர் வி.களத்தூர் வழியாக அரும்பாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மேட்டுச்சேரி அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ராகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×