search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mannargudi accident"

    மன்னார்குடி அருகே பஸ் நிறுத்தம் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்அரசன் (வயது28). திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி புத்தகரம் கிராமத்திற்கு வந்த அவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனது ஆலை உரிமையாளரின் வீட்டிற்கு கடந்த 3-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    மன்னார்குடி அருகே கீழதிருபாலக்குடி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள பஸ் நிறுத்த கட்டிடத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஜய்அரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் விஜய்அரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த வாலிபர் விபத்தில் உயிரிழந்தது புத்தகரம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×