search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன விபத்தில் வாலிபர் பலி
    X

    வாகன விபத்தில் வாலிபர் பலி

    • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்.
    • கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் 5-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் விஜயன் (வயது 23), டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையத்தில் உள்ள பேச்சாயி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் அம்மாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விஜயனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×