search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young man arrested"

    • நள்ளிரவில் வீடுகளை தட்டி திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த பெருமாள் மகன் பிரபு (வயது25). இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளது. இதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளி வந்துள்ளார்.

    நேற்று இரவு வேடசந்தூர் புதுப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டு ஜன்னலை திறந்து எட்டி பார்த்தார். அவர்கள் சுதாரித்து உடனடியாக வெளிேய வந்ததால் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் ராமகவுண்ட ன்பட்டியை சேர்ந்த கந்தவேல் என்பவரது வீட்டிலும் கதவை தட்டி நோட்டமிட்டார். அவர்களும் உடனடியாக கதவை திறந்ததால் அங்கிருந்து ஓடி விட்டார்.

    பின்னர் ரெட்டியார்ச த்திரம் அடுத்துள்ள தாதன்கோட்டையில் திறந்து இருந்த ஒரு வீட்டில் உள்ளே நுழைந்து பணம் அல்லது பொருட்கள் உள்ளதா? என தேடி பார்த்தார். அதற்குள் அவர்கள் விழித்துவிடவே அவர் தப்பி ஓட முயன்றார்.

    இருந்தபோதும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி பிரபுவை பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் கோழியை கடித்து விட்டதால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மோதலில் ஆத்திரமடைந்த வாலிபர் டான்ஸ்மாஸ்டரை கத்தியால் குத்தினார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த விஜயன் மகன் விஷ்ணு(25). கல்லூரி படிப்பை முடித்த இவர் டான்ஸ் மாஸ்டராக உள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தார்.

    இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முத்தன்(38). கூலித்தொழிலாளி. இவர் கோழிகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். விஷ்ணு வளர்த்த நாய் முத்தனுக்கு சொந்தமான கோழியை கடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இன்று காலையிலும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொலை செய்த முத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி அருகே காதணி விழாவில் 5 பவுன் நகை திருடுபோனது.
    • நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தே.மல்லிகாபுரம் கிழக்குதெருவை சேர்ந்தவர் சுருளிராஜ்(42). இவர் சம்பவத்தன்று தேவாரத்தில் உள்ள ஒரு திருமணம ண்டபத்தில் நடந்த விஷேச வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது மனைவியின் மணிபர்சை கீழேவைத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது அது திருடுபோயிருந்தது. அதில் 5 பவுன் நகை இருந்துள்ளது. இதுகுறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கிழக்குதெருவை சேர்ந்த பொம்முராஜ்(35) என்பவர்தான் நகையை திருடியது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர். மேலும் பொம்முராஜை கைது செய்து சிறையில் அடைத்னர்.

    • பிறந்தநாள் விழாவில் நடந்த மோதலில் தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்குணசேவியர்(34). மர விற்பனை செய்து வந்தார். இவரும் லிதியாமேரி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அருள்குணசேவியர் நேற்றிரவு அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது வேடபட்டியை சேர்ந்த மேலும் சில நண்பர்கள் வந்துள்ளனர்.

    பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டியபிறகு அவர்கள் அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அருள்குணசேவியருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் அவரை கத்தியால் தொடையில் குத்தினர். தன்னை குத்தியவரை தாக்குவதற்காக அருள்குணசேவியர் சென்றபோது அவரது நெஞ்சிலும் கத்திக்குத்து விழுந்தது.

    இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு ேமாட்டார் சைக்கிளில் தூக்கி வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் இந்திராகாலனியை சேர்ந்த காந்தி மகன் குட்டிமணி என்ற பரமசிவம்(30) என்பவரை கைது செய்தனர்.

    அவர் போலீசில் தெரிவிக்கையில் குடிபோதையில் தன்னை தரக்குறைவாக பேசியதால் குத்தி கொன்றதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து குட்டிமணியை கைது செய்து இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட குணசேவியர் மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலையாளி குட்டிமணி எப்போதும் தனது பைக்கில் கத்தி அல்லது அரிவாளை பாதுகாப்புக்காக வைத்திருப்பாராம். இதனால் பைக்கில் இருந்த கத்திைய எடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கடந்த மாதம் 20-ந்தேதி தூய்மைப்பணியாளர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
    • தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் அன்னம்மாள்(55). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் 3-வது மகளுடன் தனியாக வசித்து வந்தார். தற்காலிக தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த மாதம் 20-ந்தேதி அதேபகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவரை தலையில் கல்லைபோட்டு மர்மநபர் கொலை செய்து விட்டு தப்பிஓடியது தெரியவந்தது.

    ஒரு மாதமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்தனர். இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஆயக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனகராஜ்(32) என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர். தனியார் மில்லில் வேலை பார்த்துவரும் இவருக்கு திருமணமாகிவிட்டது.

    இருந்தபோதும் அன்னம்மாளின் 3-வது மகளை மணம் முடிக்க பெண்கேட்டுள்ளார். ஆனால் அன்னம்மமாள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அவரது தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் கனகராைஜ கைது செய்தனர்.

    • கள்ளத்தொடர்பு தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • படுகாயமடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (30) இவருக்கு பவித்ரா (25) என்ற மனைவி உள்ளார். கடந்த புதன்கிழமை இரவு கனகராஜ், இவரது மனைவி பவித்ரா மற்றும் கனகராஜ் நண்பர் ஜெய்கணேஷ் (30) இவரது, மனைவி துர்காதேவி (24) ஆகியோர் ஒரே இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    இதையடுத்து, மறுநாள் தன் மனைவி பவித்ராவுக்கும், நண்பர் ஜெய்கணேஷ்க்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த கனகராஜ், பவித்ராவை அடித்து தகராறு செய்து அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர், தன் மனைவி கோபித்து செல்வதற்கு ஜெய்கணேஷ் தான் காரணம் எனக்கூறி பீர் பாட்டிலை உடைத்து ஜெய்கணேஷை மீது பயங்கரமாக குத்தி உள்ளார். இதில், படுகாயமடைந்த ஜெய்கணேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து ஜெய்கணேஷ் மனைவி துர்காதேவி, செம்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடைக்கானல் மேல்மலையில் போதை காளான். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதனை தொடர்ந்து போலீசார் அங்கு நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, போதைகாளான் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் கும்பல் இயங்கி வந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அது கட்டுபடுத்தப்பட்டது.

    தற்போது மலை கிராமங்களில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் பாஸ்டின், சப்-இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் மேல்மலை கிராமங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மன்னவனூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கரு ப்பையா (வயது 38) என்பவர் கைகாட்டி பகுதியில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டு இருந்தார். அவரை விரட்டி பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    • 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்திச்சென்றார்.
    • போலீசார் வாலிபரை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே ஒட்டுப்பட்டியை சேர்ந்த சடையாண்டி மகன் ராஜபாண்டி(28). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றார்.

    இதுகுறித்து செம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.

    இந்த நிலையில் ராஜபாண்டியை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் பிடித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித்(24). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு செய்து அதனை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதேபோல தாடிக்கொம்பு அருகில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த தங்கராஜ்(26) என்பவரும் அந்த மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை செல்போனில் பதிவு செய்தார். இந்த காட்சிகளை காட்டி அடிக்கடி மாணவியை அழைத்து இருவரும் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து மாணவி தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அஜித்தை கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான ஆபாச காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் தலைமறைவான தங்கராஜை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே சொத்து தகராறில் வாலிபர் சகோதரியை சரமாரியாக தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள மதுராபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் மனைவி பரமேஸ்வரி (வயது22). இவர்கள் திருப்பூரில் இருந்து பனியன் துணி வாங்கி வந்து தைத்து கொடுக்கும் வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த 2 வருடத்திற்கு முன்பு பரமேஸ்வரியின் தந்தை பெயரில் இருந்த வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தனது ேதவைக்காக ரூ.50 ஆயிரம் எடுத்துக் கொண்டார்.

    மீதி பணத்தை தனது சகோதரர் பாண்டீஸ்வரனுக்கு தருவதாக கூறி உள்ளார். ஆனால் அந்த பணத்தையும் தராமல் அவர் வைத்துக் கொண்டுள்ளார். இதனால் அண்ணன் தங்கை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பரமேஸ்வரியை கல்லால் சரமாரியாக தாக்கி பாண்டீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவியை கடத்தி உல்லாசமாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மகேந்திரனை சிறையில் அடைத்தனர்

    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி வீட்டில் இருந்து மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் திருச்சி கண்டோன்ட்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 21) என்பவர் மாணவியை அழைத்து ெசன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தியதில், மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் மகேந்திரன் தங்கியிருந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் விரைந்து ெசன்று மகேந்திரனை கைது செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் பள்ளி மாணவியை மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை சிறையில் அடைத்தனர்.

    • அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அப்போது உரிய அனுமதியின்றி 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

    அரியலூர்

    அரியலூர் பகுதியில் அனுமதியின்றி நடை பெறும் மதுபான விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கீரை குடிகாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் நிகோலஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது உரிய அனுமதியின்றி 52 மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த துளசிராமன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×