என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டான்ஸ் மாஸ்டரை குத்தி கொன்ற வாலிபர் கைது"
- நாய் கோழியை கடித்து விட்டதால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- மோதலில் ஆத்திரமடைந்த வாலிபர் டான்ஸ்மாஸ்டரை கத்தியால் குத்தினார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த விஜயன் மகன் விஷ்ணு(25). கல்லூரி படிப்பை முடித்த இவர் டான்ஸ் மாஸ்டராக உள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தார்.
இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முத்தன்(38). கூலித்தொழிலாளி. இவர் கோழிகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். விஷ்ணு வளர்த்த நாய் முத்தனுக்கு சொந்தமான கோழியை கடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இன்று காலையிலும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொலை செய்த முத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)