search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழியை நாய் கடித்ததால் ஆத்திரம் டான்ஸ் மாஸ்டரை குத்தி கொன்ற வாலிபர் கைது
    X

    கொலை செய்யப்பட்ட விஷ்ணு மற்றும் கைதான முத்தன்.

    கோழியை நாய் கடித்ததால் ஆத்திரம் டான்ஸ் மாஸ்டரை குத்தி கொன்ற வாலிபர் கைது

    • நாய் கோழியை கடித்து விட்டதால் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மோதலில் ஆத்திரமடைந்த வாலிபர் டான்ஸ்மாஸ்டரை கத்தியால் குத்தினார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த விஜயன் மகன் விஷ்ணு(25). கல்லூரி படிப்பை முடித்த இவர் டான்ஸ் மாஸ்டராக உள்ளார். இவர் தனது வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்தார்.

    இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முத்தன்(38). கூலித்தொழிலாளி. இவர் கோழிகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். விஷ்ணு வளர்த்த நாய் முத்தனுக்கு சொந்தமான கோழியை கடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இன்று காலையிலும் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஷ்ணுவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொலை செய்த முத்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×