search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
    X

    கோப்பு படம்

    செம்பட்டி அருகே சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

    • 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்திச்சென்றார்.
    • போலீசார் வாலிபரை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே ஒட்டுப்பட்டியை சேர்ந்த சடையாண்டி மகன் ராஜபாண்டி(28). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றார்.

    இதுகுறித்து செம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தார்.

    இந்த நிலையில் ராஜபாண்டியை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×