search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதணி விழாவில்  நகை திருடியவர் கைது
    X

    கோப்பு படம்

    காதணி விழாவில் நகை திருடியவர் கைது

    • தேனி அருகே காதணி விழாவில் 5 பவுன் நகை திருடுபோனது.
    • நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தே.மல்லிகாபுரம் கிழக்குதெருவை சேர்ந்தவர் சுருளிராஜ்(42). இவர் சம்பவத்தன்று தேவாரத்தில் உள்ள ஒரு திருமணம ண்டபத்தில் நடந்த விஷேச வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது மனைவியின் மணிபர்சை கீழேவைத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.

    திரும்பி வந்து பார்த்தபோது அது திருடுபோயிருந்தது. அதில் 5 பவுன் நகை இருந்துள்ளது. இதுகுறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கிழக்குதெருவை சேர்ந்த பொம்முராஜ்(35) என்பவர்தான் நகையை திருடியது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர். மேலும் பொம்முராஜை கைது செய்து சிறையில் அடைத்னர்.

    Next Story
    ×