search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்-  வாலிபர் கைது செய்தனர்.
    X

    பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்- வாலிபர் கைது செய்தனர்.

    • பள்ளி மாணவியை கடத்தி உல்லாசமாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மகேந்திரனை சிறையில் அடைத்தனர்

    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி வீட்டில் இருந்து மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் திருச்சி கண்டோன்ட்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 21) என்பவர் மாணவியை அழைத்து ெசன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தியதில், மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் மகேந்திரன் தங்கியிருந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் விரைந்து ெசன்று மகேந்திரனை கைது செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் பள்ளி மாணவியை மகேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×