என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young girl missing"
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே முத்தையாபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது 40). சுமதி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மகள் ரூபா (வயது 25). தனது தாய் சுமதியை ஆஸ்பத்திரியில் பார்த்து விட்டு ஊருக்கு போகிறேன் என்று தாயிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் இதுவரை ரூபா வீட்டுக்கு செல்லவில்லை.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூபாவை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன் கோட்டை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் மகள் மோனிகா (வயது 16). தந்தை இறந்து விட்டதால் தாய் லெட்சுமியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மோனிகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தனர். கிடைக்க வில்லை.
மோனிகாவின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் குமரேசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோனிகாவை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் தஞ்சை விளார் பகுதியில் குடியிருந்து வருகிறார் . இவரது மகள் ராஜராஜேஸ்வரி (வயது 25 ). இவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஓரத்தூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் ராஜராஜேஸ்வரியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் மூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் ஆனந்தி (வயது 19). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக தினமும் அவர் பஸ்சில் சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்ற ஆனந்தி பின்னர் வீடு திரும்பவில்லை. கடையிலும் இல்லை. உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை சந்திரகுமார் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் நாவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சுசிலா. இவர்களது மகள் சுமதி என்ற மேகலா (வயது 25).
இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஓட்டலுக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் மேகலா கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மேகலா இல்லை. இதையடுத்து சுசிலா தனது மகள் மாயமானது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், ஏட்டு சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மேகலாவை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே திருக்கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், இவரது மகள் சந்தியா. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று சந்தியா தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாக விட்டார்.
இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபோட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த கள்ளூர் புதுகுப்பம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவுத்ரா (23). இவர் ஆந்திரா தடா அருகில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் பவுத்ராவின் பெற்றோர்கள் சென்னைக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பவுத்ராவை காணவில்லை.
இது குறித்து திருப்பாலை வனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பெண் காணாமல் போனதால் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டை கோகுல்நகரை சேர்ந்தவர் செந்தில்(வயது42). பன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், திவ்யா உள்பட 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வழக்கம்போல் செந்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். இரவு வீடு திரும்பியபோது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து குடும்ப பிரச்சினையில் இளம்பெண் குழந்தைகளுடன் மாயமானாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனை:
திருபுவனை பாரதியார் வீதியை சேர்ந்தவர் பலராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் திவ்யா (வயது 19).
இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திவ்யா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் திலகவதி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்றும் வீட்டில் திவ்யா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை திலகவதி கண்டித்ததால் திவ்யா மனவருத்தத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது வீட்டில் இருந்த திவ்யாவை திடீரென காணாமல் திலகவதி அதிர்ச்சி அடைந்தார்.
உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யா இல்லை. இதையடுத்து திலகவதி தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியில் வசிப்பவர் ஐயப்பன் (வயது 35). சேலத்தை சேர்ந்தவர். நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை வேலை பார்த்துக் கொண்டு இந்த பகுதிக்கு வந்தபோது கோடியக் காட்டை சேர்ந்த கானேஸ்வரி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவருக்கு தினேஷ் (7) என்ற மகனும், யாழினி (3) என்ற மகளும் உள்ளனர். ஐயப்பன் தற்சமயம் ஆந்திராவில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கோடியக்காடு வந்து பார்த்தபோது கானேஸ்வரி மகள் யாழினியுடன் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்காததால் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சேதராப்பட்டு:
புதுவை பெரிய காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்த குமார். இவர் வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சந்திரலேகா (வயது 20). இவர் பி.எஸ்.சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சாந்தகுமார் தனது மனைவியுடன் பெட்டிக் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்றார். வீட்டில் சந்திரலேகா மட்டும் தனியாக இருந்தார்.
பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது சந்திரலேகாவை காணாமல் சாந்தகுமார் திடுக்கிட்டார். உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் சந்திரலேகா இல்லை.
இதையடுத்து சாந்தகுமார் தனது மகள் மாயமானது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திரலேகாவை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்