search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் இளம்பெண் மாயம்- தந்தை புகார்
    X

    தஞ்சையில் இளம்பெண் மாயம்- தந்தை புகார்

    தஞ்சையில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் தஞ்சை விளார் பகுதியில் குடியிருந்து வருகிறார் . இவரது மகள் ராஜராஜேஸ்வரி (வயது 25 ). இவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஓரத்தூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் ராஜராஜேஸ்வரியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் மூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×