search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalapattu"

    காலாப்பட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 3/4 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. #LokSabhaElections2019

    சேதராப்பட்டு:

    புதுவை பாராளுமன்ற மற்றும் தட்டாஞ்சாவடி சட்ட சபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட் களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுவை மாநில எல்லையான காலாப்பட்டு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரின் உள்ளே அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.

    இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (வயது 45) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு ஜவுளிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் இவைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வணிக வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  #LokSabhaElections2019

    காலாப்பட்டில் வீட்டில் இருந்த பட்டதாரி பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை பெரிய காலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்த குமார். இவர் வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சந்திரலேகா (வயது 20). இவர் பி.எஸ்.சி. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சாந்தகுமார் தனது மனைவியுடன் பெட்டிக் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க மார்க்கெட்டுக்கு சென்றார். வீட்டில் சந்திரலேகா மட்டும் தனியாக இருந்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது சந்திரலேகாவை காணாமல் சாந்தகுமார் திடுக்கிட்டார். உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் சந்திரலேகா இல்லை.

    இதையடுத்து சாந்தகுமார் தனது மகள் மாயமானது குறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்திரலேகாவை தேடி வருகிறார்கள்.

    ×