search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election check"

    சேலத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்றிரவு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் சந்தைப்பேட்டை பகுதியில் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய ரோந்து போலீசார் இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசுகாரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது காரில் கட்டு கட்டாக ரூ.49 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் இருந்த செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவவை சேர்ந்த சித்தாராம் (வயது 40) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சேலம் வடக்கு தொகுதி தேர்தல் உதவி அதிகாரியான முத்திரை தாள் விற்பனை தாசில்தார் மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து வந்த தாசில்தார் மாதேஸ்வரன் காரில் இருந்த பணம் குறித்து வியாபாரி சித்தாராமிடம் விசாரணை நடத்தினர்.செவ்வாய்ப்பேட்டையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளதாகவும், சோப்புத்தூள், காப்பித்தூள் மற்றும் சிகெரட் மொத்த வியாபாரம் செய்து வருவதால் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்ய ஆந்திராவுக்கு செல்வதாகவும் அவர் கூறினார்.

    ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.49 லட்சத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை சேலம் வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், சேலம் ஆர்.டி.ஓ.வுமான செழியனிடம் இன்று காலை ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி சித்தாராம் பணத்தை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறினார்.

    சங்கராபுரத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ரிஷிவந்தியம்:

    தேர்தல் நிலையகண் காணிப்பு குழு அலுவலர் தனபால் தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே புதுபேட்டை கிராமத்தில் வாகன சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த புதுபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன், என்பவர் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் ரிஷிவந்தியம் பறக்கும்படை அலுவலர் சாமிதுரை தலைமையில் மணலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் அதிரடிபடையினர் வாகன சோதனை நடத்தினர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மாணிக்கம், வெங்கடேசன் ஆகியோரிடம் சோதனை செய்தனர். அவர்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

    பண்ருட்டி தொகுதி பறக்கும் படை தேர்தல் அலுவலர் கல்யாணசுந்தரம் தலைமையில் பறக்கும் படை போலீசார் ஜெயக்குமார், வெங்கடேசன் ஆகியோர் வானமாதேவி அணைக்கட்டு பகுதியில் தீவிர வாகன சோதனை செய்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளில் எந்தவித ஆவணமின்றி 1 லட்சத்து 19 ஆயிரம் 980 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை பறக்கும்படையினர் பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.

    தஞ்சையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அலுவலர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒருமினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அதனை ஓட்டி சென்ற தஞ்சை முனிசிபல் காலனியை சேர்ந்த கோபி (வயது 33) உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பணத்தை தொண்டு வந்த கோபியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்க பணத்தை கொண்டு சென்றதாக கூறினார். அவரிடம் அதற்கான ஆவணத்தை காட்டி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று பறக்கும் படையினர் தெரிவித்தனர். #LokSabhaElections2019

    காலாப்பட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 3/4 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. #LokSabhaElections2019

    சேதராப்பட்டு:

    புதுவை பாராளுமன்ற மற்றும் தட்டாஞ்சாவடி சட்ட சபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட் களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுவை மாநில எல்லையான காலாப்பட்டு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரின் உள்ளே அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.

    இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (வயது 45) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு ஜவுளிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் இவைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வணிக வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  #LokSabhaElections2019

    பூந்தமல்லி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LoksabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்-பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ரூ.6.5 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில் இந்த பணம் டாஸ்மாக் கடையில் வசூலானது என்பது தெரிந்தது.

    இதற்கான ஆவணம் காரில் இருந்தவர்களிடம் இல்லை. பணத்தை பறிமுதல் செய்து காரில் இருந்த இந்திரஜித், கார்த்தி ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #LoksabhaElections2019

    கீழ்ப்பாக்கம்-சூளைமேட்டில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 55 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெகதீஸ் என்பவரிடம் 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டது.

    பூங்காநகரை சேர்ந்த மெய்லி என்பவரிடம் 15 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் பிடிபட்டது. இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சூளைமேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1 கோடியே 32 லட்சம் பணம் பிடிபட்டது. விசாரனையில் அந்த பணம் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி யதை தொடர்ந்து ½ மணி நேரத்துக்கு பிறகு அந்த பணத்தை போலீசார் திருப்பி அளித்தனர்.

    திருவிடைமருதூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே எஸ். புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லோடு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் லோடு ஆட்டோவில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரித்தனர்.

    பின்னர் லோடு ஆட்டோவில் வந்த நபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் நாயுடு என்பவரது மகன் ஜெயராமன் (வயது 43) என்பது தெரிய வந்தது.

    அப்போது அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பிக்காததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருவிடைமருதூர் தாலுகா அலுவலதத்தில் உதவி அலுவலர் ஜெயபாரதியிடம் பறக்கும் படையினர் ஓப்படைத்தனர். #LokSabhaElections2019

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.3.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 74 ஆயிரத்து 717 பெண் வாக்காளர்களும் 152 இதரர் என மொத்தம் 15 லட்சத்து 18 ஆயிரத்து 385 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    இதே போல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 508 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 204 பெண்கள், இதரர் 4 என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 716 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் இது வரையில் 13 ஆயிரத்து 620 மாற்று திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பறக்கும்படைகள், 8 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 34 குழுக்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இக்குழுக்கள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு ரூ. 52 லட்சத்து 81 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு குழுக்களால் பணமோ, பொருளோ கைப்பற்றப்பட்டதில் ஆட்சேபணை இருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

    வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மீறல் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கலாம். இதில் புகார் அளிப்பவர் தனது பெயர் விபரங்களை விரும்பினால் அளிக்கலாம். இல்லையென்றாலும் புகார் பதிவு செய்து கொள்ள இந்த செயலியில் வசதி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு 1,829 வாக்குச்சாவடிகளும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 265 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மாற்று திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls

    ×