என் மலர்
நீங்கள் தேடியது "கீழ்பாக்கம்"
- ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- 4 வருடங்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் திவ்யா- ராம்குமார் தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். திவ்யா- ராம்குமார் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். திவ்யா தனது தாய் வீடான கீழ்பாக்கத்திலும் ராம்குமார் பெருங்களத்தூரிலும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திவ்யா, தனது இரு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து விட்டு தானும் கத்தியால் தன்னை தானே குத்தியுள்ளார்.இதில் ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயத்துடன் இருந்த 5 வயது சிறுவனுக்கும் தாய் திவ்யாவுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திவ்யா கணவனை பிரிந்து வாழ்வதாகவும், மன அழுத்ததால் வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
- போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீடியோவில் உள்ள போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக நாங்குநேரி கோர்ட்டுக்கு வந்துவிட்டு சென்றபோது கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிக்கெட் எடுக்க மறுத்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மயங்கி விழுந்த காவலர் ஆறுமுகப்பாண்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கீழ்ப்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெகதீஸ் என்பவரிடம் 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டது.
பூங்காநகரை சேர்ந்த மெய்லி என்பவரிடம் 15 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் பிடிபட்டது. இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சூளைமேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1 கோடியே 32 லட்சம் பணம் பிடிபட்டது. விசாரனையில் அந்த பணம் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.
இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி யதை தொடர்ந்து ½ மணி நேரத்துக்கு பிறகு அந்த பணத்தை போலீசார் திருப்பி அளித்தனர்.