search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry seized"

    மதுரை விமான நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldseized

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலைம் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம், விலை உயர்ந்த பொருட்கள், போன்றவை கடத்தி கொண்டு வருவது அடிக்கடி நடந்து வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேர் ஆசன வாயிலில் வைத்து கடத்தி வந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கடத்தல் அதிகரித்துள்ளதையடுத்து மதுரை விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இலங்கையில் இருந்து மதுரை வரும் ஸ்ரீரங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று இரவு மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த அமிதாபீவி என்பவர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து பெண் அதிகாரிகள் அமிதாபீவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 120 கிராம் தங்கச் செயினை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 ஆகும்.

    அதிகாரிகள் கடத்தல் நகையை பறிமுதல் செய்து அமிதாபீவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கம்-சூளைமேட்டில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 55 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கீழ்ப்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஜெகதீஸ் என்பவரிடம் 40 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டது.

    பூங்காநகரை சேர்ந்த மெய்லி என்பவரிடம் 15 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் பணம் பிடிபட்டது. இவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சூளைமேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1 கோடியே 32 லட்சம் பணம் பிடிபட்டது. விசாரனையில் அந்த பணம் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உரிய ஆவணங்களை காட்டி யதை தொடர்ந்து ½ மணி நேரத்துக்கு பிறகு அந்த பணத்தை போலீசார் திருப்பி அளித்தனர்.

    அரியலூர் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    செந்துறை, மார்ச். 22-

    அரியலூர் அருகே உள்ள நாச்சியார்பேட்டையில் இன்று பகலில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி இலரா தலை மையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீ சார் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழி யாக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அப் போது காருக்குள் ஏராளமான பொட்டலங்களில் வெள்ளி நகைகள் இருந்தது.

    இதுபற்றி காரை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளிநகைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்து கருவூலத் தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அந்த நகை களை முருகன் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு ஆர் டரின் பேரில் திருச்சியில் இருந்து வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்ப டைத்தால் வெள்ளி நகை களை பெற்றுச் செல்லலாம் என்று முருகனிடம் அதிகாரி கள் தெரிவித்தனர்.

    உரிய ஆவணங்களுடன் தங்கம் உள்ளிட்ட பொருட் களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் வியாபா ரிகள் பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று அதிகாரிகளிடம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது. * * * அரியலூர் அருகே நடந்த வாகன சோதனையில் சிக்கிய ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    ×