என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரியலூர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய ரூ.68 லட்சம் வெள்ளி நகைகள்
செந்துறை, மார்ச். 22-
அரியலூர் அருகே உள்ள நாச்சியார்பேட்டையில் இன்று பகலில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி இலரா தலை மையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீ சார் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழி யாக திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அப் போது காருக்குள் ஏராளமான பொட்டலங்களில் வெள்ளி நகைகள் இருந்தது.
இதுபற்றி காரை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளிநகைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்து கருவூலத் தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அந்த நகை களை முருகன் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு ஆர் டரின் பேரில் திருச்சியில் இருந்து வெள்ளி நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இருப்பினும் உரிய ஆவணங்களை ஒப்ப டைத்தால் வெள்ளி நகை களை பெற்றுச் செல்லலாம் என்று முருகனிடம் அதிகாரி கள் தெரிவித்தனர்.
உரிய ஆவணங்களுடன் தங்கம் உள்ளிட்ட பொருட் களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் வியாபா ரிகள் பலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்று அதிகாரிகளிடம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது. * * * அரியலூர் அருகே நடந்த வாகன சோதனையில் சிக்கிய ரூ.68 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்