search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Care"

    பெண்கள் பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
    ‘மீ டூ’ விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததில், ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே கலங்கித்தான் போயிருக்கிறார்கள். அனைவரும், ஜென்டில்மேனாக நினைத்த பல பிரபலங்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது. நல்லவர்போல பழகிக் கொண்டிருக்கும் ஒருவர், பாலியல் தொந்தரவில் ஈடுபடும்போது அந்த இடமே நரகம்போலத் தோன்றும்.

    அது அலுவலகமாக இருந்தால், வாழ்வுக்கு அடிப்படையான வேலையைவிடாமல் இந்தத் தொந்தரவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பெண்கள் சிந்திப்பார்கள். உறவினரோ, நம்பிக்கையுடன் பேசிய நண்பரோ அப்படி தொந்தரவு செய்தால் அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று மனம் குழம்புவார்கள். பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

    பேஸ்புக்கில் நட்பு பாராட்டுபவர் உரையாடலை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம். ‘எப்போது உங்களைப் பார்ப்பேன்’, ‘ஐ மிஸ் யூ’, ‘ஐ லைக் யூ ’ என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி போடுபவர், எப்போதும் உரையாடலுக்கு அழைப்பவர், போன் எண்ணைக் கேட்பவர், உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை அறிந்து கொண்டு அதைச் செய்து உங்களை கவர நினைப்பவர்கள்.. போன்றவர்களிடம் மிக கவனமாக இருக்கவேண்டும். அவர் உங்களிடம் மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் அப்படி பேசுகிறாரா? என்பதை அறிந்து கொண்டு அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

    “உங்கள் உடை அழகு, உங்கள் கண்கள் அழகோ அழகு, நன்றாகப் பேசுகிறீர்கள்? அழகாக எழுதுகிறீர்கள், உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை” என்று எதற்கெடுத்தாலும் உங்களை பாராட்டிக் கொண்டிருப்பவர்களிடம் தேவை கவனம்.

    உங்களை மற்றொரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைப்பவர், அவருக்கு போன் செய்வதற்காக உங்கள் எண்ணை டயல் செய்துவிட்டேன் என்று பேச்சை ஆரம்பிப்பவர், உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று உஷாராகிவிடுங்கள்.



    நீங்கள் தனிமையிலும், கவலையிலும் இருப்பதை சிலர் சரியாக மோப்பம் பிடித்து பின் தொடருவார்கள். அவர்கள் அந்த சமயத்திற்காகத்தான் காத்திருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உங்களை நெருங்கும் அவர்கள், தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல, “உங்களால் முடியும்” என்றும், “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றும், “நாம் ஒன்று சேர்ந்தால் சாதித்துவிடுவோம்” என்றும் நம்பிக்கை வலைவிரிப்பார்கள். அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

    தொடர்ந்து மெசேஜ் வருகிறதா?

    தவறாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்புபவர்கள் எதிர்காலத்தில் பாலியல் தொந்தரவு தருவதற்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து விடைபெற்றாலும், தொடர்ந்து உங்கள் எண்ணை தேடிப்பிடித்து மெசேஜ் பறக்கவிடுவார்கள் அவர்கள். யாராவது ஒருவர் சிக்குவார் என்று நினைத்து, பலரிடம் இப்படி வாலை ஆட்டிக்கொண்டிருப்பார்கள்.

    செல்லப்பெயர் சூட்டுகிறார்களா?


    இந்த ஆசாமிகளில் சிலர், கொஞ்சிப் பேசி கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சுவீட்டி, பேபி, ஹனி, டார்லிங் என்று செல்லமாக அழைப்பதுடன் உங்களுக்குப் பிடித்தமானதையெல்லாம் செய்யத் தவறமாட்டார்கள். அவர்களிடம் தேவை எச்சரிக்கை.

    போனை மறைப்பவர்களா?

    இந்த ஆசாமிகள் பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை கவனிக்கிறார்களா? என்பதை தீவிரமாக கவனிப்பார்கள். நீங்கள் அவர் மீது சந்தேகத்துடன் திரும்பினால் அவர் வேறு எங்கோ பார்ப்பதுபோல திரும்பிக் கொள்வார்கள். போனைப் பார்க்க முயன்றால் மறைத்துக் கொள்வார்கள். அதுபோல பல்வேறு விஷயங்களை ஒளிவுமறைவாக செய்வார்கள், எதிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    உண்மையை மறைக்கிறார்களா?

    அவர்களது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயரை சொல்பவர்கள், பெயரை மாற்றிச் சொல்லிப் பழகுவார்கள் அல்லது உங்கள் பெயரை மாற்றி செல் போனில் சேமிப்பது, தெரிந்தவர்களிடம் வேறுபெயரை சொல்லிவைப்பது என ஆங்காங்கே உண்மைகளை மறைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். முடிந்தால் உங்களையும் அப்படியே பின்பற்றச் சொல்வார்கள். அவர்களின் தவறுகளுக்கு அடிபணிந்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கவனம் தேவை.
    உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.
    உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.

    கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

    பெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.

    இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

    குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

    தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.



    சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.

    வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.

    ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

    பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.

    மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.

    வழக்கறிஞர் நல்லினி

    சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது.

    சமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல பெருந்தலைகளின் பொய் முகங்கள் இந்த புயலில் அடித்து செல்லப்பட்டு உண்மை முகம் வெளிப்பட்டன. ஆணாதிக்க சமூகத்துக்கு சவுக்கடி கொடுத்தது மட்டுமின்றி, மங்கையர் அனுபவித்து வரும் துயர்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ‘மீ டூ’ இயக்கம் பாராட்டு பெற்றது.

    ஏராளமான பெண் பிரபலங்கள் பகிரங்கமாக பாலியல் புகார் கூறிய போது, உலகறிந்த மகளிருக்கே இந்த நிலை என்றால், ஊரறியா பெண்டிரின் நிலைமை எப்படியிருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. பெண்களுக்கு வெளியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணமும் தோன்றியது.

    ஆனால் வெளியிடங்களை விட பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய வீட்டில்தான் அவர்களுக்கு அதிக பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்திய 2 நிகழ்வுகளை கூற முடியும்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கடீரா என்ற இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளாக தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இடையில் சிலமுறை கருக்கலைப்பும் செய்திருக்கும் அவர், தற்போது தந்தையின் கொடூரத்தை உலகறியச்செய்து தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டுகளின் படியேறி வருகிறார்.

    அடுத்ததாக மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியின் நிலை இன்னும் மோசமானது. இரவில் குடிபோதையில் வரும் அவளது தந்தை பெல்ட்டால் அடிப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது என தனது பாலியல் வக்கிரங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார். மாதர் சங்கத்தினரின் தலையீட்டால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    மேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போலத்தான். ஏனெனில் சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவொன்று இதைத்தான் உறுதி செய்திருக்கிறது.



    அதாவது பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களது சொந்த வீடே இருப்பதாக ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி உலக அளவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் தனது துணைவராலும், 24 சதவீதம் பேர் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உறவுகளாலும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு 6 பெண்கள் என நாளொன்றுக்கு சராசரியாக 137 பெண்கள் குடும்ப அங்கத்தினரால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவிலும் இத்தகைய குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 27 சதவீதம் பேர் குடும்பத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

    தேசிய குடும்ப நல ஆய்வு என்ற பெயரில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 3-ல் ஒருவர் இத்தகைய வன்முறையில் சிக்கியிருக்கிறார். இந்த வன்முறை சம்பவங்கள் நகர்ப்புறங்களை விட (23 சதவீதம்) கிராமங்களிலேயே அதிகமாக (29 சதவீதம்) இருக்கிறது.

    திருமணமான பெண்களில் 31 சதவீதத்தினர் உடல், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக தங்கள் துணையால் (கணவர் மற்றும் முன்னாள் கணவர்) துயர்களை அடைகின்றனர். இதில் 27 சதவீதத்தினர் உடல் ரீதியாகவும், 13 சதவீதத்தினர் உணர்வு ரீதியாகவும் துன்பங்களை அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தங்கள் வாழ்க்கை துணையால் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3-ல் ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் உண்டாகிறது.

    திருமணமாகாத பெண்களை பொறுத்தவரை தாய் அல்லது மாற்றாந்தாய் மூலம் 56 சதவீதத்தினரும், தந்தை அல்லது சித்தப்பா மூலம் 33 சதவீதம் பேரும், சகோதர-சகோதரிகள் மூலம் 27 சதவீதம் பேரும் துயர்களை சந்திக்கின்றனர். மேலும் உறவினர் (27 சதவீதம்), முன்னாள் அல்லது இந்நாள் ஆண் நண்பர் (18 சதவீதம்), நண்பர் அல்லது அறிமுகமானவர் (17 சதவீதம்) மற்றும் குடும்ப நண்பர் (11 சதவீதம்) போன்றவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

    இப்படி வீட்டில் அரங்கேறும் வன்முறையை சந்திக்கும் இந்திய பெண்களின் துயரப்பட்டியல் நீளுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வரதட்சணை பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களால் வீட்டுக்குள்ளே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வியறிவு இல்லாத பாமரர்கள் முதல் கற்றறிந்த அறிஞர்கள் வரை பெண்களை இரண்டாம் தர மக்களாகத்தான் பார்க்கின்றனர். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் வெளியே வந்து வியத்தகு சாதனைகள் பல புரிந்த போதும், அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

    சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். நாகரிகமும், கலாசாரமும் எவ்வளவுதான் உலகை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தினாலும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் என்னவோ மனிதகுலம், இன்னும் பின்தங்கி இருப்பதாகவே கூற முடியும். இதில் வீட்டு அங்கத்தினர்களாலும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.

    அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, நட்பு போன்ற பண்பு நலன்களால் உருவாக்கப்பட்டது தான் வீடு. அதை விடுத்து வெறும் நான்கு சுவர்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாளிகையை வீடு என்று கூற முடியாது. அது வெறும் உயிரற்ற கட்டிடமாகவே இருக்க முடியும்.

    - வினி ஜெசிகா, விரிகோடு.
    இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.
    * வீட்டின் வரவேற்பறையைக் கண்டு உங்கள் உறவினர், தோழிகள் வியக்கிறார்களா? அல்லது முகம் சுழிக்கிறார்களா?

    * மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது?

    * தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா? வைத்த இடம் தெரியவில்லையா?

    * வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம் அடைகிறீர்களா?

    எல்லாவற்றுக்கும் ஒரே வழி அழகாக அடுக்கிவைப்பதுதான். ஆம்... வீட்டில் உள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதன் மூலம் ஆனந்தம் அடையலாம். செல்வம் செழிக்க வைக்கலாம். நிம்மதியைக் கொண்டு வரலாம். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

    வீட்டை அழகுற வடிவமைத்து கட்டுவது பொறியாளரின் வேலையாக இருக்கலாம். ஆனால் அழகுடன் வைத்துக் கொள்வது நாம்தான். வரவேற்பறை அலமாரி முதல் படுக்கை அறை பரண் வரை எல்லாவற்றையும் தேவைக்கேற்ப அழகுபடுத்தி பயன்படுத்துவது ஒரு கலை.

    வரவேற்பறை அலமாரியை அழகிய பொம்மைகள் கொண்டுதான் அலங்கரிக்க வேண்டும் என்பதில்லை. புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்தாலே போதும். இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் வீடு நிச்சயம் சுபிட்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் வீடுகளில் பொருட்கள், அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பது, மூலை முடுக்குகளில் எல்லாம் அழுக்கும், வேண்டாத பொருட்களும் அடைந்து கிடப்பது, பிள்ளைகள் ஓடி விளையாடும் இடத்தில் பூச்சிகள் ஓடி விளையாடுவது, ஆங்காங்கே ஒட்டடை தோன்றுவது போன்ற வீடுகளில் நிம்மதிக்கு பஞ்சம் ஏற்படும். செல்வமும் தங்காது என்ற கருத்து உண்டு.

    அடுக்கிவைக்கும் கலைக்கு ஜப்பானில் மதிப்பு அதிகம். அதை அவர்கள் ‘5 -எஸ் ஒழுங்குமுறை’ என்கிறார்கள். அங்கே பள்ளிகள், வீடுகள், அலுவலகங்கள் எல்லாவற்றிலும் இந்த 5-எஸ் ஒழுங்குமுறையை கட்டாய மாக கடைப்பிடிக்கிறார்கள். அதுதான் அந்த நாட்டின் பெயருக்கும், புகழுக்கும் காரணம். அதன் வளர்ச்சியும் வியக்கும் விதத்தில் இருக்கிறது.

    ‘5-எஸ்’ என்பது, பொருட்களுக்கு ஏற்ற இடம் ஒதுக்குதல்- தேவையற்றதை களைதல்- குறைகளை நிவர்த்திசெய்தல்- உற்பத்தியை பெருக்குதல்- வளர்ச்சியை அதிகரித்தல் என்பதாகும். இதை வீடுகளிலும் நடைமுறைப்படுத்தலாம். செல்போனில் இருந்து அதை தொடங்குவோம். நமது அடிப்படைத் தேவையான செல்போனை எங்கே வைக்கிறோம்? உங்கள் சட்டைப்பையிலா, பேண்ட் பையிலா? அல்லது கைப்பையிலா எங்கே இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். கைப்பையில்கூட செல் போனுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

    குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்த ரெயின்கோட், மப்ளர் குல்லா அடுத்த குளிர்காலம் வரும்போது எங்கே கிடக்கிறதென்று தெரியாது அல்லது பத்திரப்படுத்தாததால் பாசாணம் பிடித்தும், நைந்தும் போயிருக்கும். அதுபோலவே எமெர்ஜென்சி விளக்கு, டார்ச் விளக்கு, கொசுமட்டை எல்லாம் தேவையான நேரத்தில் எடுக்கும்போது (சார்ஜ் ஏற்றாமல் வைத்திருப்பதால்) வீணாகிப் போயிருக்கும். இதுபோல அவசரத் தேவைக்கு, எப்போதோ தேவைப்படும் என்று வாங்கி வைத்த பொருட்கள் பல பராமரிப்பின்றி வீணாகப் போகவும், காணாமல்போகவும் கூடும். இவையெல்லாம் உங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.



    முதலில் எதை எங்கே வைக்க வேண்டும், எதை முன்னே வைக்க வேண்டும், எதைப் பின்னே வைக்க வேண்டும், எதை உயரத்தில் வைக்க வேண்டும், எதை கீழே வைக்க வேண்டும். மூலையில் எதை வைக்க வேண்டும், மூட்டைக்குள் எதை வைக்க வேண்டும் என்று முடிவு செய் வதுதான் இந்த அடுக்கி வைத்தல் முறையின் முதல் படி.

    அதன்படி பொருட்களின் நீளம், உயரம், அகலத்திற்கு ஏற்பவும், பயன்பாட்டைப் பொருத்தும் அதை அடுக்கத் தீர்மானிக்க வேண்டும். தினசரி பயன்படுத்தும் பொருட்களை கைவாக்கிலும், குறைவாக பயன் படுத்தும் பொருட்களை அருகிலும், எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களை உயரத்திலும் அல்லது அடியிலும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தும் பொருட்களை சேமிப்பு அறையில் அல்லது பரணிலும் பத்திரப்படுத்த வேண்டும்.

    உடையாத பொருட்களை மட்டுமே ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க வேண்டும்.

    ஊசி, பாசி, நூல், பசை, டேப் என்று ஒவ்வொரு சின்னப் பொருட்களும் நமக்கு அவசியமானவைதான். ஆனால் அவற்றை தேவைக்கேற்ப பிரித்து தனித்தனி பெட்டியில் போட்டு அடைத்து வைத்து, அடுக்கி யும் வைத்துவிட வேண்டும். இவற்றைத் தேடித் தீர்ப்பதில்தான் உங்கள் நேரம் வீணாவதுடன், எரிச்சலும் தொற்றிக் கொள்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

    கத்தரிக்கோல், கத்தி, சுத்தி போன்ற கருவிகளையும் தனியே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அவற்றை மூட்டைகட்டி மூலையில் போடுவதைவிட ஒரு ஆணி அடித்த ஸ்டாண்டில் வைத்துப் பராமரித்தால், அவை தொலைந்துபோவதைத் தடுக்கலாம். அவசியமான நேரத்தில் உடனடியாக எடுத்து பயன் படுத்தவும் செய்யலாம்.

    எடை அதிகமான பொருட்களை உயரத்தில் வைக்கக்கூடாது. அது கையாளுவதற்கு சிரமத்தைத் தருவதுடன், கவனக்குறைவாக செயல்பட்டால் உடையவும், காயம் ஏற்படுத்தவும் கூடும்.

    மருந்துப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும். அவற்றை கண்பார்வையில் வைத்து கெட்டுப்போகும் முன் பயன்படுத்தவும், குழந்தைகளுக்கும் அதன் ஆபத்தை உணர்த்தவும் வேண்டும்.

    பொருட்களை அடுக்கி வைக்கும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்து காகிதம் அல்லது பிளாஸ்டிக் விரிப்பு விரித்துவிட்டு அடுக்கி வைக்கலாம். இது எளிதில் தூசுபடிவதைத் தடுக்கும்.

    பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது மட்டுமல்லாமல், மற்ற இடத்தில் வைக்காமல் இருப்பதையும் வழக்கமாக்கவேண்டும். காணாமல்போன பல பொருட்களை நிறைய வீடுகளில் மேஜை டிராயர் எனும் புதையல் கிடங்கில் இருந்துதான் தோண்டி எடுக்கிறார்கள். அல்லது அலமாரியை அலசி ஆராய்கிறார்கள். அடுக்கி வைத்தால் இதற்கு அவசியமில்லை.

    இப்படி பொருட்களை அதனதன் இடத்தில் வைப்பதால் வீடே அழகாக மாறிவிடும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு பொருளைத் தேடுவதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் போதுமென்றால் உங்களுக்கு வீணான எரிச்சல் வரப்போவதில்லை. அதுவே பெரிய நிம்மதியைக் கொண்டு வரும். ஒருபொருளை எடுக்கும்போது அது அடுத்த பொருளை தள்ளிவிடத் தேவையில்லை என்றால் உங்களுக்கு பணம் மிச்சமாகும், சேதம் குறையும். பயன் படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தினால் இடம் மிச்சமாகும், குப்பையால் உண்டாகும் சீரழிவும், ஆரோக்கிய குறைபாடும், அதனால் ஏற்படும் வீண் பணச் செலவும் தடுக்கப்படும்.

    எல்லாம் சரிதான், “அடுக்கி வைப்பது என் ஒருத்தியால் ஆகுமா?” என்று இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் கேட்கலாம். உங்களுக்கு சில வார்த்தை. சிறு குழந்தைகள்தான் சில நேரங்களில் சேட்டை செய்வார்கள். மற்றபடி அவர்கள் உங்கள் வார்ப்பு போலவே வளர்ந்து வருவார்கள். சிறு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், வளர்ந்த பிள்ளைகள் எளிதில் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.
    பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.
    கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை 6 கோடியை தொட்டுவிட்டது என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல். 2014-ம் ஆண்டு வெளியான ‘இந்தியா டிஸ்கானர்‘ என்ற தனது புத்தகத்தில் இதை அம்பலப்படுத்தி உள்ளார்.

    இது இங்கிலாந்து மொத்த மக்கள்தொகை அளவுக்கு நிகரானது. பெண்கள் இனம் அழிந்து கொண்டிருப்பதை முதலில் பதிவு செய்தவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென். 1990-ம் ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடி பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக அவர் முதன்முதலில் குறிப்பிட்டார்.

    இன்று, அது இந்தியாவில் மட்டும் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்? நமது மக்கள் தொகை கணக்கெடுப்பை புரட்டிப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் 1.2 கோடி பெண் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணம் அடைகின்றனர்.

    பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. இன்றைக்கும் பெண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும், ஆண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது நமது வழக்கத்தில் இருக்கிறது. முந்தைய தலைமுறை வரை இந்த பாகுபாடு வெளிப்படையாகவே இருந்து வந்தது.



    பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமைப்பு உலகிலேயே அதிக அளவிலான பாலினப் பாகுபாடு இந்தியாவில் இருப்பதாக சொல்கிறது. பெண் குழந்தைகள் இறப்புக்கான மற்றொரு காரணம் சிசுக்கொலை.

    ஸ்கேன் சோதனை செய்து ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என்று சொல்வது குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கருக்கலைப்பு செய்வது இப்போதும் நடந்து வருகிறது. ஆண் குழந்தை மோகத்தால், பிறந்த பிறகும் பெண் குழந்தைகளைக் கொல்வது நடக்கிறது. இந்த விகிதாசார குறைபாடுகளை வெறும் எண்களாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது.

    இது நேரடியாக பல விதத்தில் பெண்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. கலாசாரம், பண்பாடு என்ற பெயர்களில் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை தடுக்க ஆக்கபூர்வமான எந்த செயல்பாட்டையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உலக வங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்கள் சிறுபான்மையினராக மாறும்போது நாட்டின் திட்டங்களிலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.

    பொறுப்புணர்வு, வியாபார உத்தி, வாடிக்கையாளர்களிடம் சமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.
    அறிவியல் வளர்ச்சி இளைய தலைமுறையினரை சோம்பேறியாக மாற்றிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. விவசாய பணிகள், தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளை தான் இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர். தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பத்தோடு, பதினொன்றாக கிடைக்கும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

    எல்லோரும் அலுவலக பணியை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் தான் சாதாரண வேலைக்கு கூட அதிக போட்டி நிலவுகிறது. இதனால் தான் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றியோசித்தால் வாழ்க்கையில் ஜெயிக்க ஆயிரம் வாய்ப்புகள் உங்கள் முன்பு இருப்பது புரியும். ஆம், சுய தொழில் தொடங்கியும் சாதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஜெயிக்க நாணயம் மட்டும் இருந்தால் போதாது. தொழில் முன்னேற்றத்தில் அக்கறையும், சிறந்த நிர்வாகத்திறமையும் அவசியம் ஆகும். இதற்காக எம்.பி.ஏ. படித்து விட்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்லை.

    ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தொழில் சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைப்பிடித்தம் வராமல் லாபம் பார்த்து விட்டால், நிர்வாகத்திறமை வந்து விட்டது என்று அர்த்தம். பின்னர் காலத்தை கணித்து படிப்படியாக உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.



    சிறந்த தொழில் அதிபராக நீங்கள் பிரகாசிக்க வேண்டும் என்றால், சந்தை நிலவரத்தை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். காரணம், போட்டியாளர், உங்களைவிட திறமைசாலியாக இருந்தால், நீங்கள் எளிதில் வீழ்ந்து விடுவீர்கள். தொழில் தொடங்க மூலதனமே பிரதானம். அதற்கு வங்கிகள் கடன் வசதி செய்து கொடுத்து ஊக்குவிக்கின்றன. இவை தவிர பின்வரும் குணாதிசயங்களையும் தொழில் தொடங்குபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    அதாவது தொழில் தொடர்பாக நடைமுறைக்கு வரும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம், தொழில் தொடங்குபவர்களிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பாகும். தொழிலில் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படும் போது இடையூறுகள் வரலாம். அந்த நேரத்தில் மன உறுதியுடன் சமாளிக்கும் மனப்பக்குவமும் வேண்டும். பொறுப்புணர்வு, வியாபார உத்தி, விற்பனை முன்னேற்றம், வாடிக்கையாளர்களிடம் சமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
    ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.

    இனி பெண்களுக்கு ஏற்ற தொழில்களை பற்றி பார்ப்போம்...

    உணவு பொருட்கள்:- பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்ய லாம்.

    வீட்டு உபயோக பொருட்கள்:- பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல் பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.

    ஸ்டேசனரி பொருட்கள்:- பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.

    துணி வகைகள்:- பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டைலரிங் தொழில் செய்யலாம். துணி யில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப் ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம்.

    இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இது போன்ற தேவைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது. 
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.

    அதனால் ஆணுறையைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்போர் இந்த விஷயங்களைப் பின்பற்றினால், உங்கள் கவலைக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஆணுறையைப் பயன்படுத்தாமல், எப்படி கருத்தரிப்பை தள்ளிப் போடுவது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு வழிகள் உண்டு. இவை நூறு சதவீதம் பயன்தராது என்றாலும் 90 சதவிதம் கைக்கொடுக்கும்.

    சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்து உறவு கொள்ளுதல். அதாவது மாதவிலக்கு ஆரம்பிக்கப் போகும் முன் நான்கு நாட்களுக்குள்ளும், மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் வரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். இந்த காலகட்டங்களில் கரு பலவீனமுடையதாக இருக்கும். அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

    காப்பர் - டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. மருத்துவரின் உதவியுடன் இதைப் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும்.

    உடலுறவின் போது, ஆண்கள் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். உறவு கொள்ளும் போது, விந்தை பெண்ணுடைய உடலுக்குள் செலுத்தாமல், விந்து வெளியேறும் முன், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட வேண்டும். இந்த முறைப்படி, 80 சதவீதம் வரை கருத்தரிப்பை தடுக்க முடியும்.

    குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தால், குழந்தை போதும் என்று நினைத்தால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், ஆணுறையைப் பயன்படுத்தாமலே கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

    திருமணமான புதிதில் தம்பதிகளின் மத்தியில் இருக்கும் பொதுவான பயம் இந்த கருத்தரிப்பு விஷயம் தான். ஏனெனில் அவர்கள் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்க்கை அனுபவிக்க வேண்டுமென நினைப்பதுண்டு.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் தெரியாமல் செய்யும் செயலால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலை என்று இருந்தால் அதில் விபத்துக்கள் நடக்க கூடும். விபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதுபோல் தான் பேஸ்புக்கில் நம்மை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லை என்றால் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும். பேஸ்புக்கில் பெண்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்ப்போம்.

    பேஸ்புக்கில் இன்று பெண்கள் செய்யும் மிக பெரிய தவறில் ஒன்று தங்களுடைய புகைப்படங்களை பகிர்வது. அந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கே செல்கிறது எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று பெண்களுக்கு தெரிவது இல்லை. பெண்கள் சர்வசாதாரணமாக புகைப்படங்களை பகிர்கின்றனர். நீங்கள் பகிரும் புகைப்படங்களை விஷமிகள் எடுத்து மார்பிங் செய்து ஆபாச இணையதளத்திற்கு விற்று விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். சற்று தெளிவான பெண்கள் பேஸ்புக் டைம் லைனில் புகைபடங்களை பகிர்வதில்லை.

    பேஸ்புக்கில் பெண்கள் அவர்களின் உறவினர்களுடன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் போது அவர்களின் புகைப்படங்களை பகிர்வார்கள். நம் உறவினர் மற்றும் நம் நண்பர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது அப்படி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பல பெண்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தான் இல்லை. நீங்கள் பேஸ்புக்கை எப்போது தொடங்கினீர்களோ அப்போதிலிருந்து நீங்கள் பேசிய உரையாடல், புகைப்படங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கையும் பேஸ்புக் சர்வரில் சேமித்து வைத்து இருக்கும்.

    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் நீங்கள் அழித்தவற்றையும் பேஸ்புக் சேமித்து வைத்து இருக்கும். இதனால் எனக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம் உங்கள் பேஸ்புக் கணக்குஹேக்கர்ஸ் அல்லது விஷ கிருமியிடம் கிடைத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து அதை எந்த வழிகளிலும் பயன்படுத்த முடியும். ஆகையால் பெண்கள் பேஸ்புக்கில் உரையாடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பேஸ்புக்கில் நமக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரும் நட்பு வேண்டுதல் கொடுத்தால் அதை ஏற்காதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் நட்பு வைத்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். பேஸ்புக்கில் போலி கணக்குகளும் இருக்கின்றன. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடவேண்டாம்.

    எந்த புரொபைலையும்(சுய விவர குறிப்பு) பார்த்ததும் நட்பு வேண்டுதல் செய்து விடாமல், அந்த கணக்கை பற்றி முழு விவரம் தெரிந்த பின்னர் நட்பு வேண்டுதலை தெரிவியுங்கள். பெண்கள் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது தங்களின் தொலைபேசி எண் வைத்து கணக்கை தொடங்குவார்கள். அவ்வாறு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை.

    நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை தொலைபேசி எண்ணை வைத்து உருவாக்கினால் உங்கள் தொலைபேசி எண் பேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பக்கத்தில் தோன்றும் அதை எல்லாராலும் பார்க்க முடியும். இதனால் அந்த எண்ணுக்கு தேவையில்லாத அழைப்புகள் வரக் கூடும். பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது பெண்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்குங்கள் அது பாதுகாப்பானது. அந்த மின்னஞ்சலை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் பேஸ்புக் கணக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

    ஒரு சில நேரம் பெண்கள் சிலரை நல்லவர் என்று நினைத்து அவர்களின் நட்பு வேண்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஏற்றுகொண்ட பிறகு அவர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர்களை முதலிலே தவிர்த்து விடுவது நல்லது. பேஸ்புக்கில் அவர்களை எப்படி பிளாக் செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற ப்ளாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் இருக்கும் ப்ளாக் யூசர்ஸில் நீங்கள் ப்ளாக் செய்ய விரும்புவோரின் பெயர், மின்னஞ்சல் அல்லது அவரின் புரொபைல் யூ. ஆர். எல் . இதில் ஏதேனும் ஒன்றை அந்த இடத்தில் கொடுத்து ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இனி அவர் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.

    நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் ஓர் பதிவிற்கு நீங்கள் கருத்துகள் தெரிவிக்கும் போது அந்த கருத்துகள் மற்றும் புரொபைல் அதே பக்கத்தில் இருக்கும். இதனால் வெளியாட்கள் அந்த பக்கத்திற்கு வரும் போது உங்கள் புரொபைலுக்கு நட்பு வேண்டுதல் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்கள் அறியாமல் செய்யும் மிக பெரிய தவறு இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால் அதில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள் மற்றும் ஒரு லிங்கை அனுப்பி இந்த லிங்கில் நீங்கள் சென்று லாகின் செய்தால் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு வெறும் 1200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினால் செல்லாதீர்கள்.

    ஏனென்றால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய நினைப்பார்கள். “பிஷிங்” என்ற முறையில் உங்கள் பேஸ்புக்கை மற்றும் இதர கணக்குகளை ஹேக் செய்து விடுவார்கள். பிஷிங் என்றால் பேஸ்புக் லாகின் பக்கம் மாதிரியே உருவாக்கி அதை உங்களுக்கு அனுப்புவார்கள். அதை நீங்களும் கிளிக் செய்து உங்கள் கணக்கை லாகின் செய்தால் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்பட்டுவிடும். மேலே கூறப்பட்டுள்ள வழிகளை பெண்கள் பின்பற்றினால் பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருக்கலாம்.

    ப.பொன்விக்னேஸ், கல்லூரி மாணவர்
    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.
    உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், நாம் அவற்றை காட்டி மருத்துவரிடம் பரிசோதிப்போம். அதற்கான மருந்துகளை உபயோகிப்போம். ஆனால், அந்தரங்க பகுதியில் ஏற்படும் நோய் தொற்றை பற்றி மற்றவரிடமோ அல்லது மருத்துவரிடமோ கூற தயக்கம் ஏற்படும். பெண்கள் தங்களின் பிறப்புறுப்பை பகுதியை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அந்தரங்க பகுதியில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டால், அது இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து, பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால் எளிதில் கிருமிகளால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் அழகை மேம்படுத்த பலவற்றை செய்யும் பெண்கள், அவர்களின் அந்தரங்க பகுதி சுத்தத்தை மறந்துவிடுகிறார்கள்.

    பிறப்புறுப்பு பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால், நோய் தொற்றுகளால் மலட்டு தன்மை மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்படும். அந்தரங்க பகுதியில் நோய் தொற்றை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

    முழு தானியங்களில் உள்ள சத்துக்கள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.



    எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்திருப்பதால் நோய் தொற்றை தவிர்க்கும். எலுமிச்சை டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்திற்குத் அவசியமான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கின்றன.

    தயிரில் உள்ள புரோபயோடிக்குகள், யோனியின் சுவர்களில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும். உடலை குளிச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.

    சால்மன் மீனில், உடலுறவின் போது யோனியின் சுவர்கள் வறட்சியடையாமல் ஈரப்பசையுடன் இருக்கத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும், இது மூளை வளர்ச்சிக்கும், அறிவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

    முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி சத்து உள்ளது. இது பிறப்புறுப்பில் ஏற்படும் பல நோய்த்தொற்றுகளைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

    அவகேடோ பழத்திலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதுவும் அந்தரங்க உறுப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கவும், வளர்ச்சி அடையாமல் தவிர்க்கவும் உதவுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரியில் அந்தரங்க உறுப்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை மைக்ரோபியல் தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் மற்றும் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் வறட்சியை தவிர்க்க உதவுகிறது. 
    சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய பெண்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.
    இன்றைய மனித வாழ்க்கையில், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என எல்லோருடைய பொன்னான நேரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது இணைய தளம் என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தான்.

    அதன் விளைவு நம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

    பத்திரிகைகள் மிகச் சிறந்த ஊடகம்! அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த கூடிய சக்தி வாய்ந்தவை. பத்திரிகைகளுக்கு எல்லா ஊர்களிலும் நிருபர்கள் இருப்பார்கள். அவர்கள் சேகரித்துக் கொடுக்கும் செய்திகளை நன்கு ஆய்வு செய்து, அதை வெளியிட்டால் சமுதாயத்தில் எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை எல்லாம் யோசித்து, படிப்பும் உலக அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் வெளியிடுவார்கள். அப்படித்தான் நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ பத்திரிகைகளில் வெளிவரும்.

    அதனால் அவை சமுதாயத்தில் தேவைக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடாது. நியாயமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

    இணைய தளம் வந்த பிறகு மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒரு விலை உயர்ந்த இணையதள வசதி உள்ள செல்போனை பயன்படுத்த தெரிந்தால் போதும்! படிப்பு, அறிவு, அனுபவம் எதுவுமே வேண்டாம். எல்லோருமே பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமல்ல, என்ஜினீயர்கள், டாக்டர்கள் தான். கண்ணதாசன்கள், ஜெயகாந்தன்கள் தான்!

    தமிழில் எழுத்துகள் தெரிந்தால் போதும், எல்லோரும் மேதைகள் தான். வல்லினம், இடையினம் தெரியாத, உயர்நிலை பள்ளி கூட தாண்டாத இந்த மேதைகள் பல அவதாரம் எடுத்து, இணைய தளத்தில் போடும் பதிவுகள் கோடிக் கணக்கான இளைஞர்களின் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு பல ரூபங்களில் போய் சேருகிறது.

    பத்திரிகை செய்திகள் கூட குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். இவர்கள் போடும் பதிவுகள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருக்கிறது.

    8-ம் வகுப்பு படித்த டாக்டர், 5-ம் வகுப்பை தாண்டாத என்ஜினீயர்கள் போடும் பதிவுகளை எல்லாம் உண்மை என்று நம்பி செயல்படும் மக்கள் நம்மிடம் நிறைய இருக்கிறார்கள். ஒழுங்காக கையெழுத்துக் கூடப் போடத் தெரியாதவன் சொல்வதை எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சொல்வதாக நினைத்துக் கொண்டு அந்த வைத்தியத்தை செய்து பார்க்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணம், வீட்டிலேயே ஆண் பிரசவம் பார்த்தது.

    இணையதளத்தில் வரும் பதிவுகளில் 90 சதவீதம் அபத்தம். இந்த அபத்தங்களை உண்மை என்று நம்பி அதை ஆதரித்து பதிவிடுபவர்கள் 50 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது.



    சரியோ, தப்போ எப்படி மனிதர்கள் போதைக்கு அடிமையானார்களோ அதே போல் இன்றைய இளைஞர்கள் இணையதளத்துக்கு அடிமையாகி விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் போதைக்கு அடிமையானவர்களால், அவர்களின் குடும்பம் மட்டுமே கெடும். ஆனால் இந்த இணையதள போதையர்கள் அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு எதிர்படும், அவர்களுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத பலர் வாழ்க்கை வீணாகி விடுகிறது.

    இணையதளத்தில் நன்மை இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது...! அதை உணர்ந்து செயல்படுத்த அறிவும், பக்குவமும் வேண்டும். இப்போது இளைஞர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவது எல்லாம் பொழுது போக்குக்கு தான்.

    ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர் வீட்டில் இருக்கும் இளைஞனோடு நட்பு பாராட்ட நேரம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கண்ணால் ஒரு முறை கூட பார்க்காத நல்லவர்களா? கெட்டவர்களா? என்று தெரியாத நண்பர்கள் தான் பல நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இதில் ஆண்-பெண் நட்புகள் ஏராளம். இதனால் பல பெண்கள் வாழ்க்கை நாசமாவது தாராளம்.

    தெருவில் நடப்பதைப் பார்ப்பது, கண்ட புத்தகங்களைப் படிப்பது, பிறர் சொல்வதை கேட்பது இவைகளால் மட்டும் யாரும் டாக்டரோ, என்ஜினீயரோ ஆகி விட முடியாது.

    முறையான படிப்பு, பயிற்சி, அனுபவம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவன் முன்னுக்கு வர முடியும். அப்படிப்பட்டவர்கள் தங்களின் அனுபவத்தை பதிவாகப் போட்டால் தான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.

    இப்படிப் பட்ட பதிவுகள் இணைய தளங்களில் 10 சதவீதம்தான் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் பக்குவம் நம் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வரும்வரை இணையதளங்களால் பாதிப்புகள் தான் அதிகம். இதை சொல்வதால் அறிவியலை எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை.

    அறிவியல் நல்ல பாதையையும் காட்டும். தீயப்பாதையையும் காட்டும். அதில் நீங்கள் எந்த பாதையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நல்ல பாதையை காட்டுவதற்கு பெற்றோர் எப்போதும் துணை நிற்க வேண்டும். தங்களின் பிள்ளைகள் எப்போதும் செல்போனும் கையுமாக இருக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமையாகும்!

    எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன்

    ஆண்கள் அவர்கள் நடந்துகொள்ளும் தோரணையை பெண்கள் அதிகம் ரசிக்கின்றனர். ஆண்களின் எந்த விஷயங்களை பார்த்து பெண்கள் அவர்களை மதிப்பிடுகிறார்கள் என்று பார்க்கலாம்.
    உருவம் எப்படி இருந்தாலும், உடை பக்காவாக இருந்தால் ஆண்கள் செம ஹாட் என்கின்றனர் பெண்கள்!

    தலை முடி, தாடியை சரியாக வெட்டி, ஷேவ் செய்து வைத்திருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

    அதிகம் பேசி மொக்கை போடாமல் அளவாக பேசும் ஆண்களை தான் பெண்கள் அழகு என்கின்றனர்.

    எதிலும் தனித்துவமான ஆண்கள் ஹாட் என்பது பெண்களின் கருத்து!

    மாடலிங், டான்ஸ் என்று சகலகலா வல்லவர்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

    அதே போல் நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஆண்களை பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

    ஆண்கள் அவர்கள் நடந்துகொள்ளும் தோரணையை பெண்கள் அதிகம் ரசிக்கின்றனர். மிகவும் ஷார்ப்பாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் ஹாட் என்கின்றனர்.

    ×