search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvIND"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்னில் வெளியேறினார்.

    அறிமுக போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும், சஞ்சு சாம்சன் 12 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய், ஹோல்டர், ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2019-ம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

    மேலும் அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டு பிரைன் லாரா தலைமையில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடதக்கது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • முதலில் ஆடிய இந்தியா 351 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்களில் ஆல் அவுட்டானது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:

    இது ஒரு சிறப்பான வெற்றி. உண்மையைச் சொல்வதானால், ஒரு கேப்டனாக இதுபோன்ற விளையாட்டுகளை நான் எதிர்நோக்குகிறேன்.

    இது சர்வதேச விளையாட்டை விட அதிகமாக இருந்தது. ஆபத்தில் இருப்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தோற்றால் நிறைய ஏமாற்றம் இருக்கும். வீரர்கள் சிறந்த குணத்தை வெளிப்படுத்தினர். அவர்களும் அதை ரசித்தார்கள், அழுத்தமான சூழ்நிலைகளில் அதை அனுபவிப்பதும் முக்கியம்.

    விராட் மற்றும் ரோகித் அணியின் ஒருங்கிணைந்த பகுதிகள். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

    ஆட்டத்திற்கு முன் விராட்டுடன் நன்றாக அரட்டையடித்தேன். 50 ஓவர் வடிவத்துடன் பழக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு உண்மையிலேயே நன்றி.

    350 ரன்கள் எடுப்பது எப்போதும் முக்கியமானது. பேட்டர்கள் பந்தை துரத்துகிறார்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் பேட்டர்கள் அதை உறுதி செய்வார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மிகவும் தாமதமாக எழுந்தது, அந்த பார்ட்னர்ஷிப் அதை 36-வது ஓவருக்கு கொண்டு சென்றது. பவர் பிளேயிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை வெஸ்ட் இண்டீசுக்கு வரும்போது விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 351 ரன்களை குவித்தது.
    • இந்திய அணியில் 4 வீரர்கள் அரை சதமடித்து அசத்தினர்.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 85 ரன்னிலும், இஷான் கிஷன் 73 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 51 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி வரை நின்ற ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது.

    அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களைக் கடந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர்.

    இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    அணியின் எண்ணிக்கை 143 ஆக இருந்தபோது இஷான் கிஷன் 73 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார். 41 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின் அசத்தலாக ஆடியது.

    5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது. பாண்ட்யா சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடங்கியது.
    • டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று எதிர்பார்ப்பு.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று தொடங்கியது. டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளன.

    தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள இஷான் கிஷான் மற்றும் ஷூப்மன் கில் விரையாடி வருகின்றனர்.

    • இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • ஷாய்ஹோப், ஹெட் மயர், ஒஷானே தாமஸ் ஆகியோர் 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. அதை தொடர்ந்து இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட்இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஷாய்ஹோப், ஹெட் மயர், ஒஷானே தாமஸ் ஆகியோர் 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

    வெஸ்ட்இண்டீஸ் அணி விவரம்:-

    ரோவ்மேன் பவல்(கேப்டன்), கெய்ல் மேயர்ஸ் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், மெக்காய், ரோமரியோ ஷெப்பர்டு, ஒடியன் சுமித், ஒஷானே தாமஸ்.

    • 3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.
    • சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    3 ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. சஞ்சு சாம்சன், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

    கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவர்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணி கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் நாளையும் விளைாயடி தொடரை வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் அணி இருக்கிறது.

    இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 142-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 141 ஆட்டத்தில் இந்தியா 71-ல், வெஸ்ட் இண்டீஸ் 64-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி 'டை'யில் முடிந்தது. 4 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    • சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார்.
    • சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியே சூர்யகுமார் யாதவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெறுவார். ஆனால் அதுதான் அவரது கடைசி வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்துவிட்டால் சூர்யகுமார் யாதவால் அணியில் நீடிக்க முடியாது.

    ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் அதிக ஆபத்தான வகையில் இருக்கிறது. அவர் ஒவ்வொரு பந்திற்கும் பவுண்டரியை எதிர்நோக்கி விளையாடுகிறார். ஒருநாள் போட்டியில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தால் எளிதாக விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

    50 ஓவர் கிரிக்கெட்டில், நீங்கள் ஆட்டத்தை இறுதி வரை எடுத்து செல்ல வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார். அதன் காரணமாகவே அவர் தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை எளிதாக இழந்து வருகிறார்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    • ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
    • 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து சுயநலமற்ற முடிவை எடுத்தார்.

    அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷான் தேவையான ரன்களை எடுத்த நிலையில் எதிர்ப்புறம் சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போதும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்கள் களமிறங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் தாக்கூரும் 1 ரன்னில் அவுட்டாகினார்.இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்கள் எடுத்த நிலையில் ஒரு வழியாக 7-வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து 12* ரன்களுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

    இந்த போட்டியில் அணியின் நலனுக்காக இஷான் கிசன் போன்ற இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் ரோகித் சர்மா நடந்து கொண்டது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு 7-வது இடத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

    இந்த சுயநலமற்ற முடிவால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 7-வது இடத்தில் களமிறங்கிய 3-வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் 7-வது இடத்தில் விளையாடினார். அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக ராகுல் டிராவிட் 7-வது இடத்தில் களமிறங்கினார். அவர்களது வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் 7-வது களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

    அது என்னவென்றால், இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை மிச்சம் வைத்து ஐந்து விக்கெட் மற்றும் அதற்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக இலங்கை முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடிய இலங்கை அணியானது 30 ஓவர்கள் மிச்சம் இருக்கையில் அதாவது 180 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்று அந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியது.

    அதனை பின்னர் இந்திய அணி தான் இந்த பட்டியலில் இரண்டாவது அணியாக நேற்றைய போட்டியில் 163 பந்துகள் மிச்சம் உள்ள வேளையில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று அதிக பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணியாக இந்திய அணி உள்ளது.

    ×