search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wimbledon"

    • நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
    • முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்சுடன் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மோதுகின்றனர். #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மல்லுகட்டுகிறார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள செரீனா, இந்த முறையும் வெற்றிக்கனியை பறித்தால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

    முன்னதாக நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) இடையிலான அரை இறுதி ஆட்டம் 5½ மணி நேரத்திற்கு மேலாகியும் முடிவு கிடைக்காமல் இழுத்து கொண்டே போனது. #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடாலுடன் செர்பியா வீரரான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனும், (தென்ஆப்பிரிக்கா)- 9-ம் நிலை வீரர் ஜான் இஸ்னர் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    இவர்கள் இருவரும் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றதில்லை. இதில் ஆண்டர்சன் கடந்த ஆண்டு அமெரிக்க ஒபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.

    நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை கால் இறுதியில் வீழ்த்திய ஆண்டர்சன் நம்பிக்கையுடன் உள்ளார்.

    இரவு 7.30மணிக்கு மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)- ஜோகோவிச் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள நடால் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு 6-வது முறையாக தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் விம்பிள்டன் பட்டத்தை (2008, 2010) 2 முறை கைப்பற்றி உள்ளார். சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். ஆனாலும் அவருக்கு ஜோகோவிச் கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    12 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு இதுவரை 4 முறை தகுதி பெற்று உள்ளார். அதில் 2011, 2014, 2015-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான அவர் கடந்த ஆண்டு கடும் சறுக்கலை சந்தித்தார். அதில் இருந்து மீண்டும் தற்போது விம்பிள்டன் அரை இறுதியை எட்டி உள்ளார். இருவரும் இதுவரை 51 முறை மோதி உள்ளனர். இதில் ஜோகோவிச் 26 தடவையும், நடால் 25 தடவையும் வெற்றி பெற்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால், பலம் வாய்ந்த ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 2-வது தரவரிசையில் இருப்பவரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோவை (அர்ஜென் டினா) எதிர்கொண்டார்.

    இதில் நடால் 7-5, 6-7 (7-9), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 4 மணி 47 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    நடால் அரை இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார். அவர் கால் இறுதியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை தோற்கடித்து இருந்தார்.

    மற்றொரு கால்இறுதியில் 9-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 6-7 (5-7), 7-6 (9-7), 6-4, 6-3 என்ற கணக்கில் ரோனிக்கை (கனடா) வீழ்த்தினார். இஸ்னெர் அரை இறுதியில் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சந்திக்கிறார்.

    ஆண்டர்சன் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தி இருந்தார். அரை இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கிறது.

    இன்று நடைபெறும் பெண்கள் அரை இறுதி ஆட்டங்களில் கெர்பர் (ஜெர்மனி)- ஒஸ்டா பென்கோ (லாத்வியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) -ஜூலியா ஜார்ஜெஸ் (ஜெர்மனி) மோதுகிறார்கள். #Wimbledon2018 #RafelNadal #NovakDjokovic
    விம்பிள்டனில் அட்டகாசமான ஃபார்வர்டு டிஃபென்ஸ் கிரிக்கெட் ஸ்ட்ரோக் வைத்து ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் பெடரர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.

    இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது.

    பெடரர் செய்த சர்வீஸ் தவறாக சென்றது. வந்த பந்தை வேகத்தில் அட்டிரியன் பெடரரை நோக்கி திருப்பி அடித்தார். அந்த பந்தை கிரிக்கெட் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ஃபார்வர்டு டிஃபென்ஸ் ஸ்ட்ரோக் வைப்பதுபோல், பெடரர் ஸ்ட்ரோக் வைத்தார்.

    இதை கவனித்த விம்பிள்டன் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, பெடரரின் இந்ந்த ஃ.பார்வர்டு டிஃபென்ஸ்-க்கு ஐசிசி என்ன ரேங்க் கொடுக்கும்?’’ என்று கேள்வி கேட்பதுபோன்று டுவிட் செய்திருந்தது.

    இதற்கு பெருமூச்சு விட்டதுபோன்று, ஐசிசி ஓகே என்று சொல்லி நம்பர் ஒன் என்று பதில் டுவிட் செய்திருந்தது.

    இதற்கிடையே சச்சின் தெண்டுல்கரும் விம்பிள்டன் டுவிட்டிற்கு பதில் டுவிட் செய்திருந்தார்.

    சச்சின் டுவிட் செய்ததும். ஜாம்பவான் ஜாம்பவானை ஆதரிக்கும்போது... என படத்தை வெளியிட்டு ஐசிசி அசத்தியுள்ளது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    செம்மண் கோர்ட்டில் அதிக போட்டிகளில் விளையாடியதால் விம்பிள்டன் பயிற்சி தொடரான குயின் கிளப் தொடரில் இருந்து நடால் விலகியுள்ளார். #Wimbledon #Nadal
    டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபெல் நடால் பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனை 11-வது முறையாக கைப்பற்றி சாதனைப் படைத்தார். விரைவில் அடுத்த கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடர் நடக்க இருக்கிறது.

    இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆண்களுக்கான குயின் கிளப் டென்னிஸ் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரான நடால் விலகியுள்ளார். தொடர்ச்சியாக செம்மண் கோர்ட்டில் விளையாடியதன் காரணமாக ஓய்வு தேவைப்படுவதால் விலகியதாக நடால் கூறியுள்ளார்.



    மேலும், நடால் இந்த தொடரில் இருந்து விலகியது குறித்து கூறுகையில் ‘‘குயின் கிளப் தொடர் மிகவும் சிறப்பான தொடர். 2008-ம் ஆண்டு நான் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்வான் நினைவாகும். இந்த வருடம் விளையாட விரும்பினேன். ஆனால் செம்மண் கோர்ட்டில் நீண்ட சீசன் விளையாடியுள்ளேன்’’ என்றார்.
    ×