search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்இறுதி"

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், இந்திய வீரர்கள் காஷ்யப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார். #SyedModiInternational #SainaNehwal #Kashyap
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-14, 21-9 என்ற நேர்செட்டில் சக வீராங்கனை அமோலிகா சிங் சிசோடியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் காஷ்யப் 9-21, 22-20, 21-8 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் பிர்மான் அப்துல்கோலிக்கையும், சாய் பிரனீத் 21-12, 21-10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரேன் ருஸ்தாவிதோவையும், சமீர் வர்மா 22-20, 21-17 என்ற நேர்செட்டில் சீன வீரர் ஜாவ் ஜன்பெங்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.  #SyedModiInternational #SainaNehwal #Kashyap 
    பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார். #WorldBoxing #Championship #Sonia #Pinki #Simranjeet
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.

    51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

    75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார். 
    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன் (கஜகஸ்தான்) கோதாவில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய மேரிகோம், ஒரு முறை களத்தை சுற்றி இருக்கும் கயிற்றிலும் எதிராளியால் தள்ளப்பட்டார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேரிகோம் கடைசி ரவுண்டில் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததோடு, ஆக்ரோஷமாக சில குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்த்தார். 5 நடுவர்களும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.



    மூன்று குழந்தைகளின் தாயான 35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘இது போன்ற பெரிய போட்டிகளில் எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அது இப்போது எனக்கு பழகி போய் விட்டது. குத்துச்சண்டை களத்திற்குள் புகுந்ததும் எனது நம்பிக்கை அதிகரித்து விடும். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது சந்தோஷம் அளிக்கிறது. ஆனாலும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேரிகோம் கால்இறுதியில் சீனாவின் யு வூவை நாளை சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ‘இளம் புயல்’ இந்தியாவின் மனிஷா மோன் 54 கிலோ பிரிவில் உலக சாம்பியன் டினா ஜோலாமானுடன் (கஜகஸ்தான்) மல்லுக்கட்டினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த மனிஷா 5-0 என்ற புள்ளி கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 29-28) உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். ‘மிகவும் நம்பிக்கையுடன் ஜோலாமானை எதிர்கொண்டேன். களத்திற்குள் வந்ததும் எதிராளி உலக சாம்பியனா அல்லது வெண்கலம் வென்றவரா என்பது எனக்கு ஒரு பிரச்சினையே கிடையாது’ என்று மனிஷா குறிப்பிட்டார்.

    இதே போல் லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) 69 கிலோ பிரிவில் ஏதெய்னா பைலோனையும் (பனாமா), பாக்யபதி கச்சாரி (இந்தியா) 81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்தனர்.

    அதே சமயம் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சரிதா தேவி ஏமாற்றம் அளித்தார். அவர் 60 கிலோ பிரிவில் 2-3 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்தின் கெலி ஹாரிங்கிடம் தோற்று வெளியேறினார். போட்டிக்கு பிறகு 36 வயதான சரிதா தேவி கூறுகையில், ‘நடுவர்களின் தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மூன்று ரவுண்டிலும் எனது கை தான் ஓங்கி இருந்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஆசிய போட்டியின் போது சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தேன். அதனால் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். #ChinaOpen
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 14-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் ஷோ டியான் சென்னிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் கனேபியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். #USOpen #serenawilliams
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கனேபியை (எஸ்டோனியா) எதிர் கொண்டார். இதில் செரீனா 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 3-வது வரிசையில் இருப்பவருமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தினார். அவர் கால் இறுதியில் செவஸ்டோவை (லாத்வியா) சந்திக்கிறார். செவஸ்டோவா 4-வது சுற்றில் 6-3, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் முன்னணி வீராங்கனைகளில் ஒரு வரான சுவிட்டோலினாவை (உக்ரைன்) தோற்கடித்தார். #USOpen #serenawilliams
    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomenHockeyWorldCup #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 17-வது இடத்தில் உள்ள இத்தாலியை எதிர்கொண்டது.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. லால்ரெம்சியாமி இந்த கோலை அடித்தார். 45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நேகா கோயல் 2-வது கோலை திணித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மற்றொரு இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா கோலாக மாற்றி அசத்தினார். பதில் கோல் திருப்ப இத்தாலி அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

    முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். நடப்பு தொடரில் இந்திய அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்துடன் மல்லுகட்டுகிறது. நல்ல பார்மில் இருக்கும் அயர்லாந்து அணி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #WomenHockeyWorldCup #India #Ireland 
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #NovakDjokovic #RafaelNadal
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2 முறை பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் செக்குடியரசை சேர்ந்த வெஸ்லியை எதிர் கொண்டார். இதில் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் 6-வது முறையாக கால் இறுதியில் நுழைந்து உள்ளார். விம்பிள்டனில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளார்.

    நடால் கால்இறுதியில் 5-வது வரிசையில் இருக்கும் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) அல்லது ஷிமோனை (பிரான்ஸ்) சந்திக்கிறார். இருவரும் மோதிய 4-வது சுற்று ஆட்டத்தில் டெல்போட்ரோ 7-6 (7-1), 7-6 (7-5) 5-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் தொடர்ந்து இன்று நடைபெறும்.

    3 முறை சாம்பியனும், 12-வது வரிசையில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த கச்சனோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் நிஷிகோரியை சந்திக்கிறார்.

    மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), இஸ்னர் (அமெரிக்கா), நிஷிகோரி (ஜப்பான்), ரோனிக் (கனடா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), கெர்பர் (ஜெர்மனி), பெர்டன்ஸ் (நெதர்லாந்து), ஒஸ்டா பென்கோ (லாத்வியா), ஜுலியா ஜார்ஜஸ் (ஜெர் மனி), சிபுல்கோவா (சுலோ வாக்கியா), டாரியா கசாட் சினா (ரஷியா), கேமிலா ஜியோர்பி (இத்தாலி) ஆகியோர் 4-வது சுற்றில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்கள். பெண்கள் கால்இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. #NovakDjokovic #RafaelNadal
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #SerenaWilliams #Federer
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-0, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் முன்னாரினோவை தோற்கடித்து 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 7-6 (7-5), 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்டை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 6-4, 7-6 (10-8), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ்சை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கனடா வீரர் மிலோஸ் ரானிச் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவை சேர்ந்த தகுதி சுற்று வீராங்கனை எவ்ஜெனியா ரோடினாவை எளிதில் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    ஏஞ்சலிக் கெர்பர் ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தமிட்ட காட்சி

    மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #SerenaWilliams #Federer
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரும், 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரர்மேக்ஸ்மிலன் மார்ட்ரெரை (ஜெர்மனி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ரபெல் நடால்-டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

    இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனை எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். வெற்றி பெற்ற டாரியா கசட்கினா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை சந்தித்தார். இதில் முகுருஜா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லிசி சுரெங்கோ காயம் காரணமாக விலகினார். இதனால் முகுருஜா வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    இத்தாலி ஓபன் டென்னிசில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



    சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.  #RafaelNadal #SimonaHalep
    ×