search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife murder"

    • மனைவியை கொலை செய்து விட்டு சாமியாராக மாறிய ரமேஷ் கைது செய்யப்பட்டார்.
    • சாமியாராக மாறிய பிறகு பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தேன்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கி புரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது காதல் மனைவி வாணியை 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

    இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளி ரமேஷ் போலீசில் பிடிபடாத நிலையில் தற்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமறைவான ரமேசை தேடி வந்தார். மனைவியை கொலை செய்து விட்டு சாமியாராக மாறிய ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியுள்ள ரமேஷ் மனைவி வாணியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும், சாமியாராக மாறியது குறித்தும் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நானும், வாணியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். 2 மகன்கள் பிறந்த நிலையில் வாணி வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வீடு திரும்பி வந்தாள். இது எனக்கு அவள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி நான் அடிக்கடி கேட்டு வந்தேன்.

    அப்போது வாணி என்னை திட்டுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தாமதமாக வந்த வாணியிடம் அதுபற்றி கேட்டேன்.

    அப்போது நீ என்ன ஒழுங்கா? என்று கூறி வாணி என்னிடம் சண்டை போட்டாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் எரிச்சல் அடைந்த நான் வாணியை சரமாரியாக தாக்கினேன். இதில பலத்த காயம் அடைந்த அவள் உயிரிழந்தாள். இதனால் என்ன செய்வது? என்று தெரியாமல் உடலை மூட்டை கட்டி கட்டிலுக்கு கீழே வீசிவிட்டு தப்பிச் சென்றேன்.

    மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்துக்கு சென்று விட்டால் அடையாளம் காண்பது சிரமம் என்று நினைத்து திருவண்ணாமலைக்கு சென்றேன். அங்கு சில நாட்கள் சுற்றி திரிந்து விட்டு திருப்பூருக்கு சென்று அங்கு வேலை செய்தேன்.

    அப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அங்கிருந்து வடலூர் ஆசிரமத்துக்கு சென்றேன். அங்கு வைத்து சாப்பாடுகூட கிடைக்காமல் திண்டாடினேன். பின்னர்தான் சாமியாராக மாறினால் என்ன? என்கிற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று அங்கிருந்த சாமியார் ஒருவரிடம் தீட்சை எடுத்து ருத்திராட்ச மாலையை அணிந்து கொண்டு காவி உடையை உடுத்தினேன். பின்னர் அப்படியே பல ஊர்களுக்கு சென்றேன். மனைவியை கொலை செய்த பாவம்தான் தன்னை துரத்துகிறது என்று எண்ணி பாவத்துக்கு பரிகாரம் தேடுவதாக நினைத்து காசி உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு சென்றேன்.

    ரிஷிகேஷ், பூரி ஜெகநாதர் கோவில், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சென்று விட்டு தமிழகத்துக்கு திரும்பினேன். சாமியாராக மாறிய பிறகு பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தேன். அதன் மூலம் கிடைக்கும் சிறிய தொகையை வேறு ஒரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து ஜி.பே. மூலமாக மகன்களுக்கு பணம் அனுப்பி வந்தேன்.

    போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக செல்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தேன். இந்த நிலையில்தான் சென்னைக்கு வந்த இடத்தில் போலீசில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு ரமேஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார்.
    • தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், செமுடு குண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மானேயம்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஸ்ரீனிவாசுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என கூறி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த மானேயம்மா தனது குழந்தைகளுடன் லிங்கைய்ய பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தி மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

    இந்த நிலையில் மானேயம்மா கூலி வேலை செய்து குங்கப்பூடி கிராமத்தில் ஏல சீட்டு கட்டி வந்தார். நேற்று இரவு மானேயம்மா ஏல சீட்டு எடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார். தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் சிறிது நேரத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர்.
    • அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

    திருத்தணி:

    திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் விநாயகம் (42). இவருக்கும் கிரிஜா (34) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவா என்கிற மகன் உள்ளார். இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 14 வருடங்களாக பெங்களூரில் கூலி வேலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருத்தணியில் வந்து நரசிம்ம சுவாமி கோவில் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர். அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விநாயகம் நள்ளிரவில் கத்தியை எடுத்து தலை, கை, கால், மார்பு என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் விநாயகம் வீட்டில் உள்பக்கமாக பூட்டு போட்ட காரணத்தால் யாரும் உள்ளே சென்று காப்பாற்ற முடியவில்லை.

    இதற்கிடையே வெட்டப்பட்ட கிரிஜா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விநாயகத்தை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இறந்து போன கிரிஜாவின் உடலை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்ததுடன் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக்கொலை செய்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மனைவியை கொன்றதற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    குழந்தை இல்லாததால் மணிகண்டன் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பவித்ராவை திருமணம் செய்தார். பவித்ராவும் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பவித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் அவரது நடத்தையில் மணிகண்டன் சந்தேகமடைந்தார்.

    மேலும் பவித்ராவின் தாய் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. எனவே பவித்ராவை தாயுடன் பேச வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று தகராறு ஏற்படவே மணிகண்டன் தனது குழந்தையை அக்கா வீட்டில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். ஆத்திரத்தில் இருந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பவித்ராவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் தீராத மணிகண்டன் பவித்ராவின் தலையை துண்டித்தார். தலையில் மட்டும் 22 இடங்களில் வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையை ஒரு கூடையில் வைத்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டார். அதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்து விட்டனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு வந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20).

    இவர் கோவை பேரூரில் உள்ள தமிழ்க்கல்லூரியில் பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

    2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ந்தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவருடன் அவரது வீட்டில் ரமணி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் 29-ந்தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காருண்யா நகர் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இதற்கிடையே பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி. ராஜ பாண்டியன் பெண்ணின் கணவர் சஞ்சய், அவரது தந்தை, தாய், ரமணியின் தந்தையிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    சஞ்சயிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதையும், தனக்கு தாய், தந்தை உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் சஞ்சய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும் போதே, என்னுடன் படித்த மற்றொரு மாணவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ரமணியை காதலித்த போதே, அந்த பெண்ணுடனும் பேசி வந்தேன். இந்த பழக்கம் திருமணத்திற்கும் பிறகும் நீடித்தது. அடிக்கடி அவருடன் நான் செல்போனில் பேசி வந்தேன்.

    இது முதலில் ரமணிக்கு தெரியாமல் இருந்தது. திருமணம் முடிந்த பின்னர் நான் செல்போனில் அடிக்கடி பேசுவதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் நான் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவருக்கு தெரிந்து விட்டது. இதனை அவர் கண்டித்தார்.

    ஆனாலும் நான் தொடர்ந்து பேசி கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்கு திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நான், அந்த பெண்ணிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இதனை எனது மனைவி ரமணி பார்த்து விட்டார்.

    இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், ரமணியை அடித்து உதைத்து, கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினேன்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத நான், வீட்டில் இருந்த அவரது துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை கட்டி இறுக்கினேன்.

    இதில் சிறிது நேரத்தில் ரமணி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து எனது தாய், தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினேன்.

    அவர்கள் வந்த பின்னர் இதில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து ரமணி தற்கொலை செய்து கொண்டது போல காண்பிக்க திட்டமிட்டோம்.

    உடனே அவரை தூக்கி வைத்து துணிகளை கழற்றி விட்டு, வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த மஞ்சள் பொடியை எடுத்து ரமணியின் உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்தோம். பின்னர் மாற்று துணியை கட்டி விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து வாயில் ஊற்றினோம். இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தோம்.

    அவர்களும் ஓடி வந்து, புளியை வாயில் கரைத்து ஊற்றினர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ரமணியை கொண்டு சென்றோம். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்ற போது, ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இறந்து விட்டது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டோம்.

    போலீசார் விசாரித்த போதும், சாணிப்பவுடர் குடித்து விட்டார் என்றே தெரிவித்தோம். காயம் குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலேயே தெரிவித்து வந்தோம்.

    இருந்த போதிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் நான் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகம் ஆடிய அவரது கணவர் சஞ்சய் மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சயின் தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.
    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (வயது 71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்த பின்பு அந்த பெண் குப்தாவின் மகனை கவனிக்க மறுத்தார். மேலும் குடும்பத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தினார். இதனால் குப்தா மனம் உடைந்தார். அவர் 2-வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக 2-வது மனைவியிடம் பேச்சு நடத்திய போது அவர் குப்தாவுக்கு விவாகரத்து கொடுக்க தனக்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றார். இதனை கேட்ட குப்தா ஆத்திரம் அடைந்தார்.

    இதையடுத்து குப்தா மனைவியை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையை அமர்த்த ஏற்பாடு செய்தார். அதன்படி டெல்லியை சேர்ந்த விபின், ஹிமாண்டி ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்கள் குப்தாவின் மனைவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் கேட்டனர். அவர்களுக்கு முன்பணமாக ரூ. 2.40 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், குப்தாவின் 2- வது மனைவியை கொலை செய்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குப்தாவை கைது செய்தனர். அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் விபின், ஹிமாண்டி ஆகியோரும் பிடிப்பட்டனர். அவரகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
    • யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டங்கா குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் ஷரவன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா.

    இந்த நிலையில் ஷரவன் தனது மனைவி உஷாவை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அலிகாரில் வசித்து வந்த உஷாவின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் உஷாவை ஷரவன் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி உள்ளனர்.

    இதையடுத்து போலீசார் ஷரவனை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மனைவி உஷாவை கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை போட்டு கல்லை கட்டி யமுனை ஆற்றில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தனது மனைவிக்கும் கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அதனால் மனைவி உஷா தினமும் தன்னிடம் சண்டை போட்டதால் அவரை கொன்றேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    • பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.

    பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.

    அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.

    பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.

    மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயந்தி (50), இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.

    முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அதிகாலையில் முருகன் கண்விழித்தார். அவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினார். இதில் ஜெயந்தி துடிதுடித்து இறந்தார்.

    இதனையடுத்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

    இது சம்பந்தமாக தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரணடைந்துள்ள முருகனிடம் கடலாடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் மகாதேஸ்வரா பெட்டாவை அடுத்த நாகமலைப்பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.

    கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து முனிராஜ், மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை பார்க்க வந்த முனிராஜ் சமரசம் பேசுவதற்காக அங்குள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்றார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்திரம் தீராத முனிராஜ் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்தார். வீடியோவாக படம் பிடித்த அவர் அந்த காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இந்த காட்சியை அவரது உறவினர்கள் பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக முனிராஜை போனில் தொடர்பு கொண்டனர். இந்த விவரம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கும் தெரியவந்தது. போலீசார் முனிராஜை தொடர்பு கொண்டனர்.

    இதனால் பதறிய முனிராஜ் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகாதேஸ்வரன் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43), கட்டிட மேஸ்திரி மற்றும் அதே கிராமத்தில் கடப்பா கல் விற்கும் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

    ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஜெய்சங்கருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் புனிதா, ஜெய்சங்கரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். பின்னர் குழந்தைகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இருப்பினும் ஜெய்சங்கருக்கு புனிதா நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் ஷூ கம்பெனிக்கு செல்ல பஸ்சிலிருந்து இறங்கி அழிஞ்சிக்குப்பம் மெயின் ரோட்டில் புனிதா நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மதுபோதையில் வந்த ஜெய்சங்கர் புனிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புனிதா மயங்கி விழுந்தார்.

    இதில் உயிருக்கு போராடிய புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்சங்கர் அவரது மனைவியை கத்தியால் குத்தும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நேற்று இரவு மது போதையில் வந்த வேலாயுதம் மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார்.
    • ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். வேலாயுதத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரேவதி சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வேலாயுதம் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் வேலாயுதம் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறிவந்தார்.

    நேற்று இரவும் மது போதையில் வந்த வேலாயுதம் இதுதொடர்பாக மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேவதி அங்கேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரேவதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபோதையில் இருந்த வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×