search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding"

    • சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும்.
    • 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார்.

    சமூக வலைத்தளங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்கள் ஏராளமாக பரவும். ஆனால் உணர்ச்சிகரமான வீடியோக்கள் அரிதாகவே காணக்கிடைக்கும். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ருத்விக் பாண்டே என்பவர் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில் 95 வயது முதியவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் எல்லோர் முன்னிலையிலும் தப்பட்டை வாசிக்கிறார். சில சமயம் அவர் தரையில் அமர்ந்து இருக்கிறார். 95 வயதிலும் தனக்கும், தன் குடும்பத்திற்காகவும் அயராது உழைக்கும் இந்த முதியவரின் வீடியோவை பார்த்த வலைதள வாசிகள் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிடுவதோடு அவருக்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். இந்த வீடியோ 1.7 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

    • அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை.
    • உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் கோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் யாதவ். இவரது மகன் பிரதாப் யாதவுக்கும் (22), அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா தேவி (20), என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

    மறுநாளான மே 31-ம் தேதி புதுமண தம்பதி வீட்டிற்கு வந்தனர். அன்றிரவு தம்பதியரை மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

    அடுத்த நாள் காலை விடிந்து நீண்ட நேரம் ஆகியும் புதிய ஜோடி வெளியே வரவில்லை. உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்து திறக்கவில்லை என்றதும் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர்.

    உள்ளே பிரதாப் மற்றும் அவரது மனைவி புஷ்பா இருவரும் சடலமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், இருவரும் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    தம்பதியின் உடலில் எந்தக் காயமும் இல்லாத நிலையில் பிரதேச பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிய தம்பதி மாரடைப்பால் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

    விசாரணையில், முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய ஜோடிக்கு இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், புதிய தம்பதி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண நாளில் புதிய தம்பதியினர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
    • சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.

    மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.

    தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

    அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. மாவட்ட பொருளாளர் இல்ல திருமண விழா நடக்கிறது.
    • இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர், கார்த்திக் ஹவுஸிங் பிரை வேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் சோமசுந்தரபாண்டியன்- எஸ்.அன்புசெல்வி தம்பதிய ரின் மகனும், பொறியாளரு மான எஸ்.கார்த்திக் பாண்டியனுக்கும், ஸ்ரீராம் டிசைனர் அண்ட் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் ஏ.கணேசன்-பத்மா தம்ப தியரின் மகளும், மருத்துவரு மான ஜி.சுபாஷினிக்கும் நாளை (27-ந் தேதி) காலை 9 மணிக்கு மேல 10.30 மணிக்குள் மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத் தில் திருமணம் நடக்கிறது.

    இந்த திருமணத்தை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரு மான பி.மூர்த்தி தலைமை யேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்து கிறார்.

    திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலா ளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், எம்.எல்.ஏ.க் கள் பூமிநாதன், ஆ.வெங்க டேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த விழாவில் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகி கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக இன்று (26-ந்தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    • முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சாலைமுத்து இல்ல திருமணம் நடக்கிறது.
    • குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல முன்னாள் தலைவர் சாலைமுத்து. இவரது இல்ல திருமணம் பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை(27-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    மணமக்கள் பிரேம்குமார் என்ற சுமன்-ஜனனி ஆகியோரது திருமணத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாங்கி நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவிற்கு ஐகோர்ட்டு நீதிபதி அரு. ராமலிங்கம் தலைமை தாங்குகிறார். முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சாலைமுத்து வரவேற்று பேசுகிறார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், டாக்டர் சரவணன் மற்றும் அனைத்து கட்சி பிரமு கர்கள், முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை பழங்காநத்தம் வளர்மதி ராஜசேகர், கருப்பு துரை-தெய்வானை, ஜெயலலிதா பேரவை

    மாநிலத்துணை செயலாளர் வெற்றிவேல்-வெற்றி செல்வி, வைரமுத்து- கோவர்தனா, ரவிச்சந்திரன்-ரேவதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

    • திருமண வரம் அருளும் உத்வாகநாதர் கோவிலில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • திருமாங்கல்யம், ஆடைகள், மாலைகள் ஆகியவற்றை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    குத்தாலம்:

    இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் இந்து சமயத்தை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமண வரம் அருளும் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் 4 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜம்புகென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்ப்பை மீறி காதலர்கள் பதிவு திருமணம்
    • மகள் வேண்டாம் என்று பெற்றோர் கூறியதால் காதல் கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி தாலுகா பல்லவ–ராயன்பத்தை ஊராட்சி கொண்டையன்தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் சுப்பிர–மணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித் துள்ள இவரும் ரோஷ்னே–சும் கடந்த 5 ஆண்டு–களாக காதலித்து வந்துள்ளனர்.இதற்கிடையே சுகன்யா–வின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்து–கொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத் துச்சென்றனர்.இந்நிலையில் ரோஷ் னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டு–களாக காதலித்து வந்த–தா–கவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்ட–தாகவும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி–வித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். 

    • மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ப.சிதம்பரம் வாழ்த்தினார்.
    • திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி- தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம். மதுமிதாவிற்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழி லதிபர் சத்குரு தேவனின் மைத்துனருமாகிய பொறி யாளர் கே.மெய்யப்பனிற்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி பேலஸில் விமரிசையாக நடந்தது.

    முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

    திருமணவிழாவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசின் முதன்மை செயலர்கள், அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மதுரையில் அக்ரி.கணேசன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • ஐடா ஸ்கட்டர் அரங்கம்-2ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரையை சேர்ந்த அக்ரி.கணேசன்-ருக்மணி கணேசன், ராஜேந்திரன்-வசந்தி, பொன்னையா ஐ.ஏ.எஸ்.,-சினேகலதா ஆகியோர்களின் சகோதரர் தேவர் என்ற ஜெய பெருமாள்-ஜெயாவின் மகன் பாலகார்த்திக்குக்கும், பழனிச்சாமி-நாகலட்சுமி மகள் சுவாதிக்கும் ராம நாதபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

    இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரையில் நாளை(12-ந்தேதி) நடக்கிறது. காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை-தூத்துக்குடி ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கம்-2ல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், தொழி லதிபர்கள் மற்றும் உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். விழா ஏற்பாடுகளை இருவீட்டார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.
    • வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் 24 வயதான நரேஷ் குமார்.

    இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு திருவாரூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா வயது 21 என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா இளங்கலை வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார்.

    இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுஷ்மிதா நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள செய்துள்ளனர். தொடர்ந்து பிப்ரவரி 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவா ரூருக்கு சென்றுள்ளனர்.

    அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் அழுது கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவை மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

    அதனை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது கொலையா அல்லது தற்கொ லையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மூன்று நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் பெண்ணின் பெற்றோர் கதறி அழுததும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
    • 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி பகுதியை சோ்ந்தவா் நவீன்குமாா் (வயது 22). இவா் 16 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி, கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னா் மாவட்ட சமூக நல அலுவலா் சிவகாமி, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடா்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார், அவரை திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எம்.சி.சண்முகையா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் தலைநிமிர முடியாது என்று சொல்லும் அளவுக்கு உழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு வழங்கி உள்ளார். கலைஞர் பிறந்தநாள் விழாவை மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கொண்டாடினோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 

    மாவட்ட கழகம் சார்பில் 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேதி கொடுத்த உடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதே போன்று இளைஞர் அணி ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 300 பேருக்கு உணவு மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

    மேலும் இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, எந்த வகையில், கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்பது தெரியாத நிலை உள்ளது. ஆகையால் இளைஞர்கள் இயக்கத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து மாணவர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி, இளைஞர் அணிக்கு விளக்கி கூற உள்ளோம். 

    கொடி கட்டுவது, ஊர்வலம் செல்வது மட்டும் இயக்கம் அல்ல. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் நலனுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மக்கள் பணி மூலம் தி.மு.க.வை எவராலும் வெல்ல முடியாது என்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் கழக உடன்பிறப்புகளிடமும் நன்மதிப்பை பெற்று மக்கள் தொண்டாற்றி வரும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி முறை பற்றிய பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, ஜெயக்குமார் ரூபன், மாவட்்ட துணை செயலாளர்கள் ஆறுமுக பெருமாள், முகமது அப்துல்காதர், பொருளாளர் ராமநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், மாணவர் அணி அருண் குமார், மகளிர் அணி ஜெசி பொன்ராணி, விவசாய அணி ஆஸ்கர், ஆதிதிராவிடர் நலக்குழு டி.டி.சி.ராஜேந்திரன்,ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×