என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் பாசப்போராட்டம்
- எதிர்ப்பை மீறி காதலர்கள் பதிவு திருமணம்
- மகள் வேண்டாம் என்று பெற்றோர் கூறியதால் காதல் கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி தாலுகா பல்லவ–ராயன்பத்தை ஊராட்சி கொண்டையன்தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் சுப்பிர–மணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித் துள்ள இவரும் ரோஷ்னே–சும் கடந்த 5 ஆண்டு–களாக காதலித்து வந்துள்ளனர்.இதற்கிடையே சுகன்யா–வின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்து–கொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத் துச்சென்றனர்.இந்நிலையில் ரோஷ் னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டு–களாக காதலித்து வந்த–தா–கவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்ட–தாகவும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி–வித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.






