search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikram Prabhu"

    • விக்ரம் பிரபு, விதார்த் இணைந்து தற்போது 'இறுகப்பற்று' படத்தில் நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் 'இறுகப்பற்று' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கியவர் கார்த்திக் அத்வைத்.
    • இவர் தற்போது பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரி இப்படத்தை தயாரிக்கிறார்.



    இந்நிலையில் சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு 'விக்ரம் வேதா' மற்றும் 'கைதி' படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

    அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பாயும் ஒளி நீ எனக்கு

    பாயும் ஒளி நீ எனக்கு


    சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் அதிகபடியான வெளிச்சம் இருந்தா தான் அரவிந்துக்கு கண்ணு தெரியும். உன்ன சமந்தப்பட்ட எல்லோருக்கும் கொடூரமான சாவு காத்திட்டு இருக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த டிரைலர் பலரையும் கவர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

    பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
    • இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    பாயும் ஒளி நீ எனக்கு போஸ்டர்

    'பாயும் ஒளி நீ எனக்கு' திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா, 'பர்மா' படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், 'துப்பாக்கி முனை' மற்றும் 'கபடதாரி' படங்களின் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். 'விக்ரம் வேதா' மற்றும் 'சுழல்' புகழ் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.


    இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெய்டு’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக 'ரெய்டு' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.


    ரெய்டு

    ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    ரெய்டு

    அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ரெய்டு.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. டாணாக்காரனின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.

    இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக நடிக்கும் படம் ரெய்டு.


    ரெய்டு ஃபர்ஸ்ட் லுக்

    இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

    ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ், எம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

    இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
    • இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. டாணாக்காரனின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'.

    இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இவர்களுடன் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    வாணி போஜன் - விக்ரம் பிரபு

    சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முழுவதும் ஆக்‌ஷன் காட்சியாக அமைந்துள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. #Maniratnam
    இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 - வது படைப்பாக "வானம் கொட்டட்டும்" என்ற புதிய படம் உருவாக இருக்கிறது.

    இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.

     

    மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே "படை வீரன்" என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். "96" புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது. 
    மணிரத்னமின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh
    மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

    இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.



    படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh

    சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றியை நடிகர் விக்ரம் பிரபு படக்குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார். #VikramPrabhu
    கலைப்புலி எஸ். தாணு தயாரித்து விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ‘தூப்பாக்கி முனை’. இப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்த 25-வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். 



    மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ எல்லாப் படங்களுக்கும் யாராவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விடுவதாக விக்ரம் பிரபு கூறினார். #ThuppakkiMunai #VikramPrabhu
    துப்பாக்கி முனை படம் வெற்றி அடைந்த உற்சாகத்தில் விக்ரம் பிரபு அளித்த பேட்டி:

    இளம் வயதிலேயே வயதான தோற்றத்தில் நடித்தது எப்படி?

    இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னபோது, கொஞ்சம் யோசித்தேன்.

    பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில்ல ஒரு போட்டோஷூட் பண்ணிமோம். அது பக்காவாக செட் ஆனது. ஏற்கெனவே போலீசாக `சிகரம் தொடு’ படத்துல நடிச்சிருக்கேன்.

    அதுல இளமையான போலீஸ். இந்தப் படத்துல வயதான போலீஸ் அதிகாரி. 33 என்கவுன்டர் பண்ணின போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடித்தேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு.



    எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?

    பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி’, `அக்னி நட்சத்திரம்‘ படங்கள். அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி’ படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச பெயரை தக்க வைத்துக்கொள்ள, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரேமாதிரியான வி‌ஷங்களை திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன். அதனால், வெற்றி தோல்வி ரெண்டுமே என் கேரியர்ல இருக்கு. காமெடி, ஆக்‌‌ஷன், ரொமான்ஸ்னு எல்லா வரையிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு.

    சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?

    யார் என்ன வேலை செய்கிறோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கதை படமாக வந்தால், நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும். #ThuppakkiMunai #VikramPrabhu

    ×