search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thuppakki Munai"

    விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ எல்லாப் படங்களுக்கும் யாராவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விடுவதாக விக்ரம் பிரபு கூறினார். #ThuppakkiMunai #VikramPrabhu
    துப்பாக்கி முனை படம் வெற்றி அடைந்த உற்சாகத்தில் விக்ரம் பிரபு அளித்த பேட்டி:

    இளம் வயதிலேயே வயதான தோற்றத்தில் நடித்தது எப்படி?

    இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னபோது, கொஞ்சம் யோசித்தேன்.

    பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில்ல ஒரு போட்டோஷூட் பண்ணிமோம். அது பக்காவாக செட் ஆனது. ஏற்கெனவே போலீசாக `சிகரம் தொடு’ படத்துல நடிச்சிருக்கேன்.

    அதுல இளமையான போலீஸ். இந்தப் படத்துல வயதான போலீஸ் அதிகாரி. 33 என்கவுன்டர் பண்ணின போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடித்தேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு.



    எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?

    பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி’, `அக்னி நட்சத்திரம்‘ படங்கள். அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி’ படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச பெயரை தக்க வைத்துக்கொள்ள, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரேமாதிரியான வி‌ஷங்களை திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன். அதனால், வெற்றி தோல்வி ரெண்டுமே என் கேரியர்ல இருக்கு. காமெடி, ஆக்‌‌ஷன், ரொமான்ஸ்னு எல்லா வரையிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு.

    சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?

    யார் என்ன வேலை செய்கிறோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கதை படமாக வந்தால், நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும். #ThuppakkiMunai #VikramPrabhu

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் துப்பாக்கி முனை படத்தின் விமர்சனம். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika
    நாயகன் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் இதுவரைக்கும் 30 பேரை என்கவுண்டர் செய்திருக்கிறார். என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு உயிரை கொலை செய்வதை விரும்பாத விக்ரம் பிரபுவின் அம்மா, விக்ரம் பிரபுவை விட்டு பிரிந்து விடுகிறார். விக்ரம் பிரபுவோ அம்மா மீது பாசமாக இருந்தாலும், செய்யும் தொழிலை மிகவும் நேசித்து வருகிறார்.

    இந்நிலையில், ஹன்சிகாவை பார்க்கும் விக்ரம் பிரபு அவர் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பழகி வரும் நிலையில், போலீஸ் வேலையால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். அதே சமயம், தன்னுடைய வேலையில் இருந்து விக்ரம் பிரபு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.



    சில நாட்களில் ராமேஸ்வரம் பகுதியில் எம்.எஸ்.பாஸ்கரின் 14 வயது மகளை கற்பழித்து கொலை செய்த வழக்கில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்லி விக்ரம் பிரபுவுக்கு உத்தரவு வருகிறது.

    இதை விசாரிப்பதற்காக ராமேஸ்வரம் செல்லும் இவர், எம்.எஸ்.பாஸ்கர் மூலம், என்கவுண்டர் செய்ய இருக்கும் நபரை பற்றி தெரிந்துக் கொள்கிறார். இதில் தான் என்கவுண்டர் செய்ய இருக்கும் நபர் நிரபராதி என்றும், அந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்தவர்கள் வேறொருவர் என்பதை தெரிந்து கொள்கிறார்.



    இறுதியில் அந்த சிறுமியை கொலை செய்தவரை விக்ரம் பிரபு என்கவுண்டர் செய்தாரா? காதலி ஹன்சிகாவுடன் இணைந்தாரா? தனது என்கவுண்டர் பணியை தொடர்ந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனான விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். அது சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது என்றே சொல்லலாம். தான் செய்யும் வேலையை மிகவும் நேசிப்பவராக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் ஸ்டைலிஷ் உடைகளில் வந்து கவர்கிறார்.



    கதாநாயகி ஹன்சிகா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். தேவையில்லாத காட்சிகள் என்று இல்லாமல் சரியான இடத்தில் கதையின் தேவைக்கு ஏற்ப வந்து செல்கிறார். விக்ரம் பிரபுவுக்கு அடுத்தபடியாக நம் மனதில் நிற்பது எம்.எஸ்.பாஸ்கர். அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். தன் பெண்ணை இழந்து வாடும் தந்தையாகவும், குற்றவாளிக்கு தண்டனை வழங்க போராடுவதும் என்று நடிப்பில் மிளிர்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    பெண்ணை கற்பழித்து கொலை செய்தவரை போலீஸ் எப்படி கண்டுபிடித்து தண்டனை வழங்குகிறது என்ற வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். தவறு செய்பவன் சரியான நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நிரபராதிக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்பதை படத்தில் உணர்த்தியிருக்கிறார். மெதுவாக திரைக்கதை தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே வேகம் எடுத்து சீட்டிலேயே உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர். கதாபாத்திரங்னளை சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் சொல்லும் மெசேஜ் சிறப்பு.



    முத்துகணேஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து கவனிக்க வைத்திருக்கிறார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘துப்பாக்கி முனை’ ஷார்ப். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika

    தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம். #ThuppakkiMunai #VikramPrabhu
    வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் `துப்பாக்கி முனை’.

    விக்ரம் பிரபு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - எல்.வி.முத்துகணேஷ், ஒளிப்பதிவு - ராசாமாதி, கலை - மாயபாண்டி, படத்தொகுப்பு - புவன் ஸ்ரீனிவாஸ், பாடல்கள் - புலவர் புதுமைப்பித்தன், பா. விஜய், சண்டைபயிற்சி - அன்பறிவ், தயாரிப்பாளர் - கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பு - வி கிரியேஷான்ஸ்,  இயக்கம் - தினேஷ் செல்வராஜ்.



    படம் பற்றி இயக்குநர் கூறும் போது,

    படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu #Hansika

    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், அதன்பின் தான் திருமணம் என்று கூறியிருக்கிறார். #Hansika
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹன்சிகா கையில் இப்போது மூன்றே படங்கள் தான். விக்ரம் பிரபுவுடன் ‘துப்பாக்கி முனை’, அதர்வாவுக்கு ஜோடியாக ஒருபடம். தனி கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    ஆண்டுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவரும் ஹன்சிகா இந்த ஆண்டு பிறந்தநாளில் எந்த குழந்தையையும் தத்தெடுக்கவில்லை.

    இதுபற்றி கூறும்போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு முதியோர் இல்லத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். இதனால் தான் குழந்தையை தத்தெடுக்கவில்லை.

    அதுக்காக பணம் சேர்க்குறது, வேலைகள் பார்க்குறது மாதிரியான வி‌ஷயங்களிலேயே பாதிநேரம் செலவாயிடுது. நான் சினிமாவுல என்ன பண்ண நினைக்கிறேனோ அதுக்கான முழு சுதந்திரமும் சப்போர்ட்டும் என் குடும்பத்துல இருக்கு.



    குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறதுலேயும் அப்படித்தான். நான் இன்னும் ஒரு குழந்தைதான். கல்யாணம்ங்கிறது ரொம்ப தூரத்துல இருக்கு. அதை நோக்கிப் போகும் பாதையில நிறைய சவால்கள் இருக்கு. அதையெல்லாம் சாதிச்சுட்டுதான் கல்யாணம் பண்ணணும். ஸோ, இப்போதைக்கு சினிமாவில் சாதிக்கணும். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்ங்கிற எண்ணம் மட்டும்தான்’ என்று கூறி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், தெலுங்கு பக்க தலைகாட்டிய ஹன்சிகா நிதினுடன் 8 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த்திருக்கிறார். #Hansika
    தமிழில் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த குலேபகாவலி படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஹன்சிகா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை.

    விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள `துப்பாக்கி முனை' திரைப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார். அதுமட்டுமின்றி அதர்வாவுடன் `100' என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் வேறு எதுவும் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் தலைகாட்ட தொடங்கி உள்ளார்.

    நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கவுள்ளார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மூலம் ஹன்சிகா நிதின் கூட்டணி இரண்டாவது முறையாக இணையவுள்ளது.



    ஏற்கெனவே 2010-ஆம் ஆண்டு ஈஸ்வர ரெட்டி இயக்கத்தில் ‘சீதாராமுல கல்யாணம் லங்கலோ’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். #Hansika #Nitin

    ×