search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vajpayee"

    எளிமை, நேர்மை, கண்ணியம் போன்றவற்றால் இளைஞர்களுக்கு வாஜ்பாய் ஊக்கசக்தியாக திகழ்ந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #AtalBihariVajpayee #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈடு, இணையற்ற பேச்சாளர், அரிதான நகைச்சுவை உணர்விலிருந்து மிகஉயர்ந்த தொலைநோக்குக்கு எளிதாக மடைமாற்றம் செய்துகொள்பவராகவும், மக்களோடு இயல்பாக தொடர்புகொள்ளும் அரிய திறனோடும், அவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு ஊக்கம் தருபவராகவும், உயரிய கருத்துக்கு கொண்டு செல்பவராகவும் இருந்தார்.

    தமது அரசியல் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்த அவர், மற்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்து மரியாதை தந்து நாடாளுமன்ற விவாதத்திற்கான அளவுகோலை நிர்ணயித்தார். எளிமை, நேர்மை, கண்ணியம், பதவி மீதான தனிப்பட்ட பற்றின்மை ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்களுக்கு வாஜ்பாய் ஒரு ஊக்கசக்தியாக இருந்தார்.

    வாஜ்பாயை பொறுத்தவரை, ‘வளர்ச்சி என்பது பலவீனமானவர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தேசிய நீரோட்டத்திற்குள் இணைப்பது’. இந்த தொலைநோக்கு தான் தொடர்ந்து நமது அரசின் கொள்கையாக உள்ளது.

    21-ம் நூற்றாண்டில் உலக அளவிலான தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா தயாராவதற்கான அடித்தளத்தை அமைத்தார் வாஜ்பாய். எதிர்காலத்துக்கான அவரது பொருளாதார கொள்கைகள் மற்றும் அவரது அரசின் சீர்திருத்தங்கள், பல இந்தியர்களின் வளத்தை உறுதி செய்தது. அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பிற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.

    வாஜ்பாய், உலக அளவில் மாற்றமுடியாத அளவுக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தார். நாட்டின் தயக்கம், உலகின் எதிர்ப்பு தனிமைப்படுத்தப்படும் அச்சம் ஆகியவற்றை கடந்து இந்தியாவை அணு ஆயுத வல்லரசு நாடாக அவர் உருவாக்கினார். இந்த முடிவை அவர் சாதாரணமாக எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகமாகி வருகின்றன என்பதால் அதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார்.

    அடித்தள மக்களும் நமது அண்டை நாட்டினரும் முன்னுரிமையாக கொண்ட மனிதராக வாஜ்பாய் திகழ்ந்தார். அண்டை நாட்டினருக்கு முன்னுரிமை என்ற நமது கொள்கைக்கு அவர் பல வழிகளில் ஆதர்சமாகவும், முன்னோடியாகவும் விளங்கினார். அமைதியைத் தேடி அவர் லாகூருக்கு பயணம் மேற்கொண்டார். இயல்பாகவே நம்பிக்கையும், உறுதியான குணமும் கொண்டவர் வாஜ்பாய்.


    தனிப்பட்ட முறையில் ஒரு சித்தாந்தவாதியாகவும், குருவாகவும், முன்மாதிரியாகவும் என்னை ஆழமாக கவர்ந்தவர் வாஜ்பாய். குஜராத்திலும் அதேபோல் தேசிய அளவிலும் எனது பொறுப்புகள் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஒரு நாள் மாலை என்னை அழைத்த அவர், ‘குஜராத்துக்கு முதல்-மந்திரியாக செல்லுங்கள்’ என்று கூறினார்.

    ‘நான் எப்போதும் அமைப்பில் இருந்துதான் பணி செய்திருக்கிறேன்’ என்று கூறியபோது ‘மக்களின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக’ அவர் தெரிவித்தார். என் மீது வாஜ்பாய் வைத்த நம்பிக்கை மிகவும் பெருமைக்குரியது.

    நமது இளைஞர்களின் சக்தியுடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கிற, மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிற, அதை சாதிக்கின்ற நம்பிக்கையுள்ள, தூய்மையான பொறுப்புமிக்க நிர்வாகத்திற்காக பாடுபடுகின்ற, இந்தியர்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்து, அனைவரையும் உள்ளடக்கிய எதிர் காலத்தை கட்டமைக்கின்ற தற்சார்புள்ள தேசமாக இன்று நாம் விளங்குகிறோம்.

    உலகத்தில் சமத்துவமும், அமைதியும் நிலவ நாம் பாடுபடுவோம். கோட்பாடுகளுக் காக நாம் பேசுகிறோம். மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மை கொண்டுசெல்ல வாஜ்பாய் விரும்பிய பாதையில் நாம் பயணம் செய்கிறோம்.

    ஒரு ஒளி மறையும்போது ஏற்படுகின்ற துயரத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படுவதில்லை. வாழ்ந்த காலத்தில் மக்களின் வாழ்க்கையில் ஒருவரின் தாக்கம் எவ்வளவு நீடித்திருந்தது என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. இந்த காரணத்தால் வாஜ்பாய் உண்மையிலேயே பாரதத்தின் ரத்னாவாக இருந்தார். அவரது கனவுகளுடன் புதிய இந்தியாவை நாம் உருவாக்க, அவரது உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #PMModi #Modi
    உத்தரபிரதேசத்தின் அனைத்து நதிகளில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AtalBihariVajpayee #YogiAdityanath
    லக்னோ:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகளில் கரைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

    இதற்காக, 75 மாவட்டங்களின் பட்டியலையும், அஸ்தி கரைக்கப்பட உள்ள சிறிய மற்றும் பெரிய நதிகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ந்து 5 தடவை வாஜ்பாய் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அந்த அளவுக்கு வாஜ்பாய்க்கு நெருக்கமான உத்தரபிரதேசத்தின் மக்கள், அவரது இறுதி பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அஸ்தி கரைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக யோகி ஆதித்யநாத் கூறினார். #AtalBihariVajpayee #YogiAdityanath
    வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர்.

    மயிலாடுதுறை:

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று காலமானார்.

    வாஜ்பாயின் மறைவுக்கு மத்திய அரசு சார்பில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசு சார்பிலும் இன்று ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்து இரங்கல் தெரிவித்தனர். இதனால் நகரில் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மயிலாடுதுறையில் இன்று மாலை பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மவுன ஊர்வலம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சியினர், வணிக சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இதன்பிறகு கிட்டப்பா அங்காடி முன்பு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இதேபோல் சீர்காழி பகுதிகளிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி புதுவை நகர பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. #AtalBihariVajpayee #RIPVajpayee

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை 5.30 மணியளவில் காலமானார். இந்த தகவல் புதுவை முழுவதும் பரவியது.

    இதனால் வியாபாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்து விடுமோ? என்ற அச்சத்துடன் கடைகளை தொடர்ந்து நடத்தலாமா? அல்லது மூடி விடலாமா? என்ற நிலையில் இருந்தனர்.

    இன்று காலை 10 மணி வரை நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.

    கடை ஊழியர்களும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடை முன்பு காத்து இருந்தனர். அதன் பிறகு ஒருசில கடைகள் திறக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இலங்கையின் நிரந்தரத்தன்மைக்கு பெருந்துணையாக இருந்தவர் என அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    கொலும்பு:

    இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிக மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் தனது 93-வது வயதில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வாஜ்பாயின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் நெடுஞ்சாலை மற்றும் உயர்க்கல்வித்துறை மந்திரி லக்‌ஷ்மன் கிரியெல்லா டெல்லி வந்துள்ளார்.

    வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அவர் பெருந்துணையாக இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாயின் மறைவுக்கு விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நண்பராக விளங்கிய திரு.வாஜ்பாயின் மரண செய்தி அறிந்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.

    2002-2004 ஆண்டுகளில் நான் பிரதமராக இருந்தபோது,  இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.  அந்த உயர்ந்த மனிதருடன் நான் கொண்டிருந்த நட்பை எனது நினைவு கருவூலத்தில் என்றென்றும் பாதுகாத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    ‘மிக உயர்ந்த மனித நேயரும், இலங்கையின் உண்மையான நண்பருமான வாஜ்பாயை நாம் இன்று இழந்துள்ளோம். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கிய முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும் தலைவராக திகழ்ந்தவர்.

    அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாஜ்பாயின் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee  #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    புதுவையில் இருந்து கார்கில் போருக்கு உத்தரவிட்ட பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee
    புதுச்சேரி:

    வாஜ்பாய் 1999-ல் பிரதமராக இருந்த போது, கார்கில் போர் நடந்தது. அந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டியது. இந்தியாவின் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய்.

    இந்தியாவில் காஷ்மீரில் சில பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த மு‌ஷரப் கார்கில் பகுதியில் ரகசியமாக படைகளை ஊடுருவ செய்தார்.

    இது, இந்திய ராணுவத்துக்கு தெரியாது. மே 3-ந் தேதி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஊடுருவி இருப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து விட்டு இந்திய ராணுவத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    மே 5-ந் தேதி இது, உண்மைதானா? என்பதை கண்டறிவதற்காக 5 ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.

    இதன் பின்னர் மேலும் ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் உள்ள டராஸ், காக்சர், முஷ்கோக் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைநகரத்தில் இல்லை. அவர் புதுவைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்தார். இங்கு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார்.

    டெல்லியில் இருந்து அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருப்பதை உறுதி செய்து தகவல் வந்தது.

    உடனே பிரதமர் வாஜ்பாய் உறுதியான நடவடிக்கைகளை தொடங்கினார். எந்த தயக்கத்தையும் காட்டாத அவர், பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று உடனடி முடிவுக்கு வந்தார்.

    அவர் புதுவையில் இருந்தபடியே போர் உத்தரவை பிறப்பித்தார். அடுத்த வினாடி இந்திய விமானப் படைகள் தாக்குதலை தொடங்கின.

    அடுத்து டெல்லிக்கு உடனடியாக சென்ற பிரதமர் போர் நடவடிக்கைகளை தீவிரமாக்கினார்.

    தொடர்ந்து தரைப்படைகளும் நேரடியாக சென்று எதிரிகளை எதிர்கொண்டது. கடுமையான போர் நடந்தது.

    வாஜ்பாய் காட்டிய துணிச்சலால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. இதனால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி ஓடின.



    ஜூலை 26-ந் தேதி போர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. சுமார் 4 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    அன்று பிரதமர் வாஜ்பாய் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரியான பாடம் கற்றுக்கொண்டது. #AtalBihariVajpayee

    டெல்லி பா.ஜ.க. அலுவலத்தில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்குவெளிநாட்டு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டடுள்ளது. அங்கு ஏராளமானோர் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



    பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சக், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய், நேபாள நாட்டு வெளியுறவு துறை மந்திரி கியாவல், இலங்கை வெளியுறவு துறை மந்திரி (பொறுப்பு) லக்‌ஷ்மண் கிரியெல்லா, வங்காளதேசம் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி அப்துல் ஹசன் மஹ்மூத் அலி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சட்டத்துறை மந்திரி அலி சபார் உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee

    திருப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் - தாராபுரம் ரோடு, திருப்பூர் - அவினாசி ரோடு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. டீக்கடை, பேக்கரி கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பின்னலாடை நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் எப்போதும் தொழிலாளர்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் பகுதிகள் வெறிச்சோடியது. தொழிலாளர்கள் விடுமுறை காரணமாக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    பல்லடத்தில் என்.ஜி.ஆர். சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூரில் பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் வாஜ்பாய் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

     


    இதையொட்டி இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், கவுண்டம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், ஆலாந்துறை, மாதம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

    சூலூர் உள்ளிட்ட சில இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், ஆவின் பூத்கள் வழக்கம்போல திறந்திருந்தன.

    மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில இடங்களில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கபட்டு இருந்தன. ஒரு சில பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

    தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    புதுடெல்லி:

    மறைந்த வாஜ்பாய் கட்சி மாறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களிடமும் அன்பாக பழகியதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. வேறு கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த உதவிகளை வாஜ்பாய் ஒரு போதும் மறந்தது இல்லை.

    அவரது சுயசரிதை புத்தகமான “த அன்டோடு வாஜ்பாய்” என்ற புத்தகத்தில் அவர் தனக்கு உதவி செய்த மறக்க முடியாத தலைவர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்திக்கு முதலிடம் கொடுத்துள்ளார்.

    நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறி உள்ளார். ராஜீவ்காந்தியை புகழ்ந்து அந்த புத்தகத்தில் வாஜ்பாய் கூறி இருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. என்னை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரக பாதிப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

    வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால்தான் அந்த சிறுநீரக பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    ஒருநாள் காலை பிரதமர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ராஜீவ்காந்தி பேசினார். அவர் என்னிடம் இந்தியா சார்பில் நியூயார்க் சென்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். என்னுடன் அரசியல் கட்சிகள், அதிகாரிகள் குழுவும் வர உள்ளது. நான் அந்த குழுவில் உங்களது பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.

    நீங்கள் என்னுடன் நியூயார்க் வாருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து உங்களது சிறுநீரக பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றார்.


    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழுவில் இடம் பெற்று நானும் சென்றேன். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போதும் ராஜீவ்காந்தி என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

    “நீங்கள் நன்றாக முழுமையாக குணம் அடைந்த பிறகுதான் இந்தியாவுக்கு திரும்பி வரவேண்டும். நல்ல முறையில் சிகிச்சை பெற்று வாருங்கள்” என்றார். அவர் உதவியால் நான் பெற்ற சிகிச்சைதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

    இவ்வாறு வாஜ்பாய் மறக்காமல் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவித்து எழுதி உள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அவரது வீட்டில் இருந்து பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான அவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

    வாஜ்பாயின் உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



    காலை 10 மணியளவில் வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என சுமார் 60 ஆயிரம் பேர் கட்சி அலுவலகத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின்னர் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  #AtalBihariVajpayee #RIPVajpayee 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ நிருபர்களிடம் பேசுகையில், மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய் என குறிப்பிட்டார். #AtalBihariVajpayee #RIPVajpayee #Vaiko
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் வாஜ்பாய் குறித்த நினைவலைகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:-

    என் மீதும் தமிழ் மீதும் அதிக பாசம் வைத்திருந்தவர்  வாஜ்பாய். தந்தை போன்று என் மீது அன்பு வைத்திருந்தவர். நான் டெல்லி  செல்லும்போதெல்லாம் அவரது வீட்டிற்குச் செல்வேன்.



    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய்.  கூட்டணி ஆட்சி எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.

    இவ்வாறு வைகோ கூறினார். #AtalBihariVajpayee #RIPVajpayee #Vaiko
    வாஜ்பாய் மறைவால் ஆறுதல் பெற முடியாமல் தவிப்பதாக டெல்லியில் அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லி சென்று வாஜ்பாய் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி திட்டங்களின் நாயகன் வாஜ்பாய் என புகழாரம் சூட்டினார்.

    ‘நாட்டை வல்லரசாக்குவதற்கு பிள்ளையர் சுழி போட்டவர் வாஜ்பாய். பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியுமா என தெரியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தியபோதும், ஆறுதல் பெற முடியாமல் தவிக்கிறோம்’ என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #AtalBihariVajpayee #RIPVajpayee
    ×