search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shops shutters"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee

    திருப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் - தாராபுரம் ரோடு, திருப்பூர் - அவினாசி ரோடு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. டீக்கடை, பேக்கரி கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பின்னலாடை நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் எப்போதும் தொழிலாளர்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் பகுதிகள் வெறிச்சோடியது. தொழிலாளர்கள் விடுமுறை காரணமாக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    பல்லடத்தில் என்.ஜி.ஆர். சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூரில் பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் வாஜ்பாய் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

     


    இதையொட்டி இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், கவுண்டம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், ஆலாந்துறை, மாதம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

    சூலூர் உள்ளிட்ட சில இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், ஆவின் பூத்கள் வழக்கம்போல திறந்திருந்தன.

    மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில இடங்களில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கபட்டு இருந்தன. ஒரு சில பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    புதுக்கோட்டை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளாக கீழராஜவீதி, மேலராஜவீதி போன்றவை வெறிச்சோடி காணப்பட்டது.



    இந்நிலையில் காலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன்அரசு தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஒவ்வொரு வீதிகள் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று மூடி இருந்த கடைகளை பார்வையிட்டனர். மேலும் அறந்தாங்கி மற்றும் ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் மாவட்டத்தில் பிறபகுதிகளில் உள்ள ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இ தற்கு ரகுபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் தி.மு.க.வினர் 35 பேரை கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முகமதுகனி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முகமதுசுல்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கந்தர்வகோட்டை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேரையும், ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 28 பேரையும், கீரனூர் கடைவீதியில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப் பாளர் செல்லபாண்டியன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் விராலிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்குமரன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தை பழுது நீக்குவோர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடியை கையில் ஏந்திவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் ஆவுடையார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உதயம்சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. 
    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.

    இந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப் படுவதாகவும் கூறி இதை நிரந்தரமாக மூடக்கோரி கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூடு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டது.


    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கவும், அந்த ஆலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

    அந்த ஆலையில் அடுத்த கட்ட உற்பத்திக்கு தயாராக இருந்தது தெரிந்த பிறகே மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூடும் உத்தரவை பிறப்பித்தாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து வேதாந்தா - ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் கூறியதாவது:-

    நாங்கள் சட்ட ரீதியிலான உதவியை நாட உள்ளோம். எங்களுக்கு இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு எங்களுக்கு வியாழக்கிழமை கிடைத்தது. எனவே நாங்கள் எங்கள் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    கோவை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், சிவானந்தாகாலனி, 100 அடி ரோடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பெரியநாயக்கன்பாளையம், பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகே ஓட்டல்கள், மருந்தகங்கள், தள்ளுவண்டி கடைகள் மட்டும் திறந்திருந்தன. எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் மார்க்கெட்டுகளில் கடைகள் திறந்திருந்தன.

    முழுஅடைப்பு போராட்டத்துக்கு கோவை பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் ஊரக தொழில் முனைவோர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.

    முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. காலை 8 மணி நிலவரப்பட்டி கோவை மாநகரில் 543 பஸ்களும், புறநகர் பகுதிகளில் 464 பஸ்களும் வழக்கம் போல ஓடின.

    கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. கேரளாவில் இருந்தும் கோவைக்கு பஸ்கள் வந்தன. 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி ஆதரவு தெரிவித்திருந்தன. கோவையில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதேபோல வேன்களும் இயக்கப்படவில்லை.#tamilnews
    ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடின.
    ஈரோடு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மீதி 50 சதவீத கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஈரோடு கடை வீதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் பழ வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர்.

    அதே சமயம் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடியது. பஸ்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. மேலும் ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மாவட்டத்தில் முக்கிய ஊர்களான கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் போன்ற அனைத்து ஊர்களிலும் 50 சதவீத கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதே சமயம் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை வழக்கம் போல் ஓடியது.

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். மாவட்டம் முழுவதும் 1500 வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.



    திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் நடந்த மறியல் போராட்டத்தையடுத்து ஐ.பெரியசாமி உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    திண்டுக்கல்:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.

    மேலும் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் பஷீர்அகமது, பட்டிமன்ற நடுவர் லியோனி, துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ம.திமு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh 

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டத்தில் இன்று 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இன்று 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு, சிறு பெட்டி கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. கோட்டார் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

    நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தது. வடசேரி, செட்டிக்குளம், கிருஷ்ணன் கோவில், பார்வதிபுரம் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்டா மார்க்கெட், வடசேரி சந்தையில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டன.

    அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஒரு சில ஆட்டோக்கள், வேன்கள் மட்டும் ஓடின.

    இதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

    தக்கலை, மேட்டுக்கடை, அழகியமண்டபம் ஆகிய இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேக்காமண்டபம், குமாரபுரம் பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன.

    குளச்சல் பஸ் நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இன்று மாலை 3 மணிக்கு குளச்சல் நகர பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அமைதி பேரணி நடத்துகிறார்கள்.

    தோவாளையில் பூக்கடைகள் அனைத்தும் திறந்து செயல்பட்டன. கன்னியாகுமரியில் கடைகள் திறந்திருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    குலசேகரம், திருவட்டார், அருமனை பகுதியில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன.

    போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் முழு கடை போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பஸ் நிலையம், சந்தூர் மெயின்ரோடு, கல்லாவி மெயின்ரோடு, தருமபுரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான அரசம்பட்டி, புளியூர், பாரூர், கண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் டீக்கடை, பூக்கடை, மருந்து கடை, பாத்திரம் கடை உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. ஆட்டோகளும் வழக்கம்போல் இயங்கின.

    இதுபோன்று போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்களும், ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடின. அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    எதிர்கட்சிகள் அறிவித்த போராட்டத்தால் திண்டுக்கல்லில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல்லில் இன்று காலை குறைந்த அளவு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    நேரம் செல்ல செல்ல அடைக்கப்பட்டு இருந்த ஒரு சில கடைகளும் மீண்டும் திறக்க ஆரம்பித்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ்நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பழனியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக் கோவிலிலும் திருமண குழுவினர் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் முழு அடைப்பு போராட்டம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    சுற்றுலா நகரமான கொடைக்கானலில் பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்கள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்ததால் பாதிப்பு இல்லை.

    ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரள வியாபாரிகளும் வந்திருந்தனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 16 அரசு பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து தினசரி 922 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் இந்த பஸ்கள் இன்றும் இயங்கியது. போராட்டம் காரணமாக அனைத்து போக்குவரத்து கழக பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதே போல் ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    ராமேசுவரம்:

    தூத்துக்குடி போலீசாரின் அத்துமீறல், தமிழக அரசை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.

    அதன்படி இன்று ராமேசுவரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சில அமைப்பினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    ×