search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buses running"

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. #PetrolPriceHike
    திண்டுக்கல்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    திண்டுக்கல்லில் இன்று காலை முதலே பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இயல்பான நிலை காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.

    பஸ் நிலையத்தில் பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. கடை வீதி, மெயின்ரோடு, நாகல்நகர், பழனிரோடு, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

    அரசியல் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி கடைகளை அடைக்க வலியுறுத்தி இருந்தனர். இருந்தபோதும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

    பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டதால் குறைந்த அளவு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பழனி, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    திண்டுக்கல், தேனி, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 950-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் காலையிலேயே டெப்போவில் இருந்து கிளம்பியது.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கம்பம் நகரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வாகனங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்கிறது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களும் கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    கேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கேரளாவில் இருந்து எந்த வாகனங்களும் தமிழக எல்லைக்குள் வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. #PetrolPriceHike
    ஈரோடு மாவட்டத்தில் 50 சதவீத கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடின.
    ஈரோடு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மீதி 50 சதவீத கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஈரோடு கடை வீதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் பழ வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர்.

    அதே சமயம் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடியது. பஸ்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. மேலும் ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மாவட்டத்தில் முக்கிய ஊர்களான கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் போன்ற அனைத்து ஊர்களிலும் 50 சதவீத கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதே சமயம் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை வழக்கம் போல் ஓடியது.

    தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். மாவட்டம் முழுவதும் 1500 வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.



    ×