search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "full bandh"

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. #PetrolPriceHike
    திண்டுக்கல்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    திண்டுக்கல்லில் இன்று காலை முதலே பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இயல்பான நிலை காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.

    பஸ் நிலையத்தில் பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. கடை வீதி, மெயின்ரோடு, நாகல்நகர், பழனிரோடு, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

    அரசியல் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி கடைகளை அடைக்க வலியுறுத்தி இருந்தனர். இருந்தபோதும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

    பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டதால் குறைந்த அளவு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பழனி, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    திண்டுக்கல், தேனி, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 950-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் காலையிலேயே டெப்போவில் இருந்து கிளம்பியது.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கம்பம் நகரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வாகனங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்கிறது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களும் கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    கேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கேரளாவில் இருந்து எந்த வாகனங்களும் தமிழக எல்லைக்குள் வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. #PetrolPriceHike
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் காஞ்சீபுரம், திருவள்ளூரில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    காஞ்சீபுரம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. காஞ்சீபுரத்தில் இருந்து அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கின. தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.

    பிரதான காய்கறி சந்தைகளான ராஜாஜி மார்க்கெட் மற்றும் நேரு மார்க்கெட் வழக்கம் போல் திறந்து இருந்தது. அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்கள் ஓடின. அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்கின.

    செங்கல்பட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன. ராஜாஜி சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவள்ளூரில் காலை முதலே பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    அதேபோல் அனைத்து பஸ்களும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பந்த்தால் மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இலலை. மாமல்லபுரத்தில் அரசு பேருந்துகள், வேன், ஆட்டோக்கள் இயங்கின. சுற்றுலா பயணிகள் பாதிக்காத வண்ணம் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிற்ப பட்டறைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன.

    பெரியபாளையம் பஸ் நிலையம் நோக்கி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூர்த்தி, சத்தியவேல் தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100-க்கு மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திடீரென பெரியபாளையம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. சந்திரதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    காசிமேட்டு சிக்னல் அருகே மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். #PetrolPriceHike
    ×