search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhutan King"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றார்.
    • பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    திம்பு:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக பூடான் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர்.

    இந்நிலையில், பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதை அளித்தனர். விருதைப் பெற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    இந்த விருது தரவரிசை மற்றும் முன்னுரிமையின்படி, ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ வாழ்நாள் சாதனைக்கான அலங்காரமாக நிறுவப்பட்டது. பூடானில் உள்ள மரியாதை அமைப்பின் உச்சமாக உள்ளது. இது அனைத்து உத்தரவுகள், அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை விட முதன்மையானது.

    இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • பூடான் மன்னர் வாங்சுக் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பிரதமர் மோடியை பூடான் மன்னர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

    இதற்கிடையே, பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்தார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    • பூடான் மன்னர் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

    புதுடெல்லி:

    பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக வரவேற்றார். அதன்பின் இருவரும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பூடான் மன்னருடன் ஜெய்சங்கர் பேசினார்.

    இந்நிலையில், பூடான் மன்னர் வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    டெல்லி பா.ஜ.க. அலுவலத்தில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்குவெளிநாட்டு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டடுள்ளது. அங்கு ஏராளமானோர் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



    பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சக், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய், நேபாள நாட்டு வெளியுறவு துறை மந்திரி கியாவல், இலங்கை வெளியுறவு துறை மந்திரி (பொறுப்பு) லக்‌ஷ்மண் கிரியெல்லா, வங்காளதேசம் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி அப்துல் ஹசன் மஹ்மூத் அலி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சட்டத்துறை மந்திரி அலி சபார் உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    ×