search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய் - அஞ்சலி செலுத்திய பின் வைகோ பேட்டி
    X

    மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய் - அஞ்சலி செலுத்திய பின் வைகோ பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ நிருபர்களிடம் பேசுகையில், மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய் என குறிப்பிட்டார். #AtalBihariVajpayee #RIPVajpayee #Vaiko
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் வாஜ்பாய் குறித்த நினைவலைகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:-

    என் மீதும் தமிழ் மீதும் அதிக பாசம் வைத்திருந்தவர்  வாஜ்பாய். தந்தை போன்று என் மீது அன்பு வைத்திருந்தவர். நான் டெல்லி  செல்லும்போதெல்லாம் அவரது வீட்டிற்குச் செல்வேன்.



    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய்.  கூட்டணி ஆட்சி எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.

    இவ்வாறு வைகோ கூறினார். #AtalBihariVajpayee #RIPVajpayee #Vaiko
    Next Story
    ×