search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikunta ekadasi"

    • நவதிருப்பதி கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த தலங்களில் சூரியனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், சந்திரனுக்கு அதிபதியாக நத்தம் விஜயாசனப் பெருமாள், புதனுக்கு அதிபதியாக திருப்புளிங்குடி காய்சின வேந்த பெருமாள், கேதுவுக்கு அதிபதியாக இரட்டை திருப்பதி அரவிந்தலோசன பெருமாள், ராகுக்கு அதிபதியாக தேவர்பிரான், சனிக்கு அதிபதியாக பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள், சுக்கிரனுக்கு அதிபதியாக தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், செவ்வாய்க்கு அதிபதியாக திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், குருவுக்கு அதிபதியாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகியோர் சிறப்பு பெற்று விளங்குகின்றனர்.

    இந்த நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று அனைத்து நவத்திருப்பதி தலங்களிலும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர், தேவியருடன் அலங்கரிக்கப்பட்டு சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒரே நாளில் 9 பெருமாளையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே 9 நவத்திருப்பதி தலங்களிலும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் சயனக்கோலம் கலைத்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தில் இரவு 7.30 மணியளவிலும், தென்திருப்பேரை மற்றும் ஆழ்வார்திருநகரியில் இரவு 10 மணியளவிலும் நடந்தது. இதில் ஸ்ரீவைகுண்டம் கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆழ்வார்திருநகரி கோவில் செயல் அலுவலர் அஜித், தென்திருப்பேரை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீவைகுண்டம் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்புக்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப் பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    சொர்க்க வாசல் உருவான கதை

    படைப்பு கடவுளான பிரம்மாவின் படைப்பு காலம் முடிந்து, ஊழிக்காலம் தொடங்கியதும் எல்லா உயிர்களும் இறைவனிடம் ஒடுங்கிவிடும். அப்படி ஊழிக்காலம் தொடங்கியதும். மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் பிரம்மன் அடங்கினான். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும், தாமரை இலை தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க, அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன.

    விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்டினார். அப்போது அவரின் இரு காதுகளில் இருந்து காது அசுத்தத்துடன் அந்த தண்ணீர் வெளியே வர ஒன்று மிருதுவானதாகவும், மற்றொன்று கடினமானதாகவும் மது, கைடபர் என அரக்கர்களாக உருவெடுத்தன. அப்போது பிரம்மனிடம் ஒலி வடிவில் இருந்த வேத ங்களை அந்த இரட்டையர்கள் திருடி சென்றனர். அப்போது ஹயக்ரீவராக அவதரித்த பெருமாள் வேதங்களை திரும்ப கொண்டு வந்தார். பின்னர் உலகில் உள்ள உயிர்களை துன்புறுத்த துவங்கினர். தேவர்கள், முனிவர்கள் என அனைத்து உயிரினங்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவர்களை அடக்க இறைவன் புறப்பட்டார்.

    மது, கைடபருடன் போரிட்ட பெருமாள் அவர்களை அழிக்க முற்பட்டார். அப்போது அந்த சகோதரர்கள் சரணடைந்தனர்.உங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும், நாங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும் வழியை காட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.அவ்வாறே அவர்களுக்கு பெருமாள் அருளினார். மேலும் எங்களைப் போல பலரும் இந்த பாக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக திருமாலிடம் கேட்டுக் கொண்டனர்.

    அதோடு வைகுண்ட ஏகாதசி திருநாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் தாங்கள் வெளியே வரும் போது, தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவத்தை எண்ணி வருந்தி அதை திருத்திக் கொள்பவர்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் என அசுர சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர்.இதன் காரணமாக தான் வைகுண்ட வாசல் உருவானது. அதோடு மது கைடபர் ஆகியோரை அடக்கியதால் மதுசூதன் என்ற பெயர் பெருமாளுக்கு வந்தது.

    • இன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 11-ந்தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். விழாவின் ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    7-ம் திருநாளான வருகிற 8-ந்தேதி மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8-ம் திருநாளான 9-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 9-ம் திருநாளான 10-ந் தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ராப்பத்து நிகழ்ச்சியின் 10-ம் நாளான 11-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். இன்று திறக்கப்படும் சொர்க்கவாசல், மேலும் 8 நாட்களுக்கு தினமும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நாட்களில் மூலவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ராப்பத்து நிகழ்ச்சிகளிலும் நம்பெருமாள் ரத்தின அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    • ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது.
    • 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு. அந்த ஆழ்வார்கள் யார் யாரென்று பார்ப்போமா?

    திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், ராமானுஜர், மதுரகவி ஆழ்வார் என்பவர்களே இந்த பன்னிரு ஆழ்வார்கள் ஆவர். இவர்களில் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுப்பதற்காக ரெங்கநாதரால் உருவாக்கப்பட்டதே வைகுண்ட ஏகாதசி விழா என்பது சிறப்புக்குரியதாகும்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து திருவாய்மொழி திருநாளான வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழாவும் நிறைவு பெறுகிறது.

    • பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும்.
    • ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும்.

    ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவை பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கை யாழ்வாரின் பக்தியிலும், திருப்பணியிலும் மகிழ்ச்சியடைந்த ரெங்கநாதர் அவர் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு திருமங்கையாழ்வார், பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருவிழாவாக கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதனை ரெங்கநாதரும் ஏற்றுக்கொண்டு அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    மற்றொரு தகவலும் உண்டு. என்னவென்றால், கலியுகம் பிறந்ததால் வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனை கண்ட பெருமாள் காவலர்களிடம் வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்? என்று கேட்டார். அதற்கு காவலர்கள் கலியுகம் பிறந்துவிட்டது, இனிமேல் அதர்மம் தலை தூக்கும், தர்மம் நிலைகுலையும், பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்த சூழலில் இருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது.

    அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்றனர். உடனே பெருமாள் சொன்னார், கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில்தான். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும் வைகுண்ட ஏகாதசியன்று சாஸ்திர, சம்பிரதாயப்படி விரதம் கடைபிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவ கோவில்களில் பரமபதவாசல் என்று ஒரு சன்னதி இருக்கும். இந்த வாசல் வடக்கு நோக்கி இருப்பதை காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்த கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    வேணு சீனிவாசன் தலைவர், டி.வி.எஸ். குழுமம்

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    • இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.
    • பஜனை குழுவினர் தேவபாராயணம் பாடினார்கள்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவத் திருத்தலங்களான பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவிந்தா... கோவிந்தா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக நேற்று இரவு 10 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு பிறகு கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் கூடியது.

    சொர்க்க வாசல் திறப்பையொட்டி அதிகாலை 4 மணிக்கே பரமபதவாசலுக்கு வெளியே நம்மாழ்வார் நிறுத்தி வைக்கப்பட்டார். 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் வாசல் வழியாக பெருமாள் வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வெளியே வந்த பெருமாள் அங்கு நின்றிருந்த நம்மாழ்வாரை பார்த்தார். அதன் பிறகு அங்கிருந்த பஜனை குழுவினர் தேவபாராயணம் பாடினார்கள்.

    பின்னர் பெருமாள் கோவிலில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் பரமபத வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புரசைவாக்கத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

    அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

    தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நள்ளிரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினார்கள்.

    அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். அதன் பிறகு பக்தர்கள் தொடர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அப்போது கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை மண்டபத்தில் உற்சவர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.

    திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை கருட சேவை நடைபெற உள்ளது.

    திருத்தணி விஜயலட்சுமி சமேத விஜயராகவா பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி உற்சவர் பிரகலாத வரதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கருட சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூரில் 108 திவ்ய தேசங்களில் 58வது திருத்தலமாக அமைந்துள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனை செய்து சொர்க்க வாசல் வழியே சுவாமி வெளியே வந்ததும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    மூலவர் சன்னதிக்கு பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் ஸ்ரீ வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலையிலேயே காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, பரமபத வாசல் வழியாக சென்று லஷ்மி தேவியுடன் சயன கோலத்தில் காட்சி அளிக்கும் ஸ்ரீ அரங்கநாத பெருமாளையும்,கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் வைகுண்ட பெருமாளையும், பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    பொன்னேரி அடுத்த திரு ஆயர்பாடியில் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக மன்னன் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட ஹரி கிருஷ்ணா பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் விசேஷ பூஜைகள் இன்று அதிகாலை நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • இன்று இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
    • 12-ந்தேதி வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திருத் தலங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகல் பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

    பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 23-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை மற்றும் திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

    பின்னர் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்க வாசலை வந்தடைந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்தனர். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் மணல் வெளியில் உள்ள திருக்கொட்டகையில் 5 மணி வரை காட்சி அளித்தார்.

    இந்த நிகழ்வில் தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி தினமான இன்று காலை 4.45 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய் மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

    ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் திருநாளான வருகிற 8-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11-ந்தேதி தீர்த்த வாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதாசி திருவிழா நிறைவடைகிறது.

    பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் உள்பிரகாரத்தில் 117 சி.சி.டி.வி. கேமராக்களும், கோவிலுக்கு வெளியே 92 சி.சி.டி.வி. கேமராக்களும் என மொத்தம் 209 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    • வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
    • தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் மலர்கள், பல வகையான பழங்கள் கொண்டு கோவில் வெளிப்புறம், உள்புறம் மற்றும் கொடிமரம், பலிபீடம், வைகுண்ட வாசல் உள்ளிட்ட இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையானுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து 12.05 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் சொர்க்க வாசல் திறக்கப்ட்டது.

    அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், எம்.எல்.சி.கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர். இதையடுத்து 5 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    6 மணிக்கு மேல் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.

    வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

    தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பக்தர்களும் 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2000 பக்தர்களும் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட் வழங்கி உள்ளது.

    தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இலவச தரிசன டோக்கன்கள் திருப்பதியில் 9 மையங்களில் 90 கவுண்டர்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை திருப்பதியில் உள்ள ராமா நாயுடு அரசு பள்ளி வளாகத்தில் உள்ள கவுண்டரில் அதிகாலை 2.45 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டது.

    அப்போது தரிசன டிக்கெட் பெற பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாரால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பக்தர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பக்தர்களை ஒழுங்குப்படுத்தி காயமடைந்த பக்தர்கள் மற்றும் போலீசாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதியில் நேற்று 53,101 பேர் தரிசனம் செய்தனர்.23,843 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி கடந்த 23 ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று 1-ந் தேதி பகல்பத்து உற்சவம் முடிவடைந்தது. இன்று 2-ந் தேதி (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் (பரமபத வாசல்) முன்பு மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதைமுன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) வழியாக எழுந்தருளினார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் திரளாக திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷங்களை எழுப்பி தேவநாதசுவாமியை தரிசித்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக, இன்ஸ் பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து தேவநாதசாமி வெளிப் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசிக்க பொதுமக்களை அனுமதித்தனர்.

    பின்னர் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. மேலும் ஜனவரி 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஆரணி பஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று பெருமாள் அலங்கார ஸ்தாபன திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் அதன் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், ஆரணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதன் பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.
    • பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

    இந்துக்களின் மிக முக்கிய விசேஷங்கள், பண்டிகைகளில் ஒன்று தான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம்.

    இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், 'வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது.

    பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ×