search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில்"

    • ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள்.
    • கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று 3-வது சனிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவந்திபுரத்திற்கு வந்தனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்று, சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் தேவநாதசாமி கோவிலில் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷம் தொடர்ந்து எழுப்பியவண்ணம் இருந்ததை காண முடிந்தது. நேற்று முன்தினம் முதல் இன்று மதியம் வரை திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பைதோப்பில் அமைந்துள்ள மொட்டை அடிக்கும் கூடாரத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடைன செலுத்தும் வகையில் மொட்டை அடித்து சாமி கும்பிட்டு சென்றனர்.

    ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று நள்ளிரவு முதல் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் தங்கி காலை சாமி தரிசனம் செய்து சென்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த காரணத்தினால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
    • யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி, திருப்பணிகளை தொடங்கிடும் வகையில், பாலாலயம் பூஜை கோவிலில் கடந்த 5-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    அன்றைய தினம் பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், யாகம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நேற்று முன்தினம் காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாகம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகா சாந்தி திருமஞ்சன யாகம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது.

    நேற்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து, கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 2012-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    • நாளை புண்ணியாவாஜனம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாக உள்ள இந்த கோவிலில், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் தொடங்கும் முன்பு, கோவிலில் பாலாலயம் நடைபெறும். இதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு நேற்று மாலை யாக சாலை பூஜையுடன் பாலாலயம் தொடங்கியது. அதன்பின்னர் பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகாசாந்தி திருமஞ்சனம், யாகம் நடைபெற உள்ளது. பின்னர் நாளை (புதன்கிழமை) புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளது. இதனால், கோவிலில் சாமி புறப்பாடு மற்றும் உற்சவங்கள் நடைபெறாது. திருப்பணிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருப்பணிகள் தொடங்கும் முன்பு, கோவிலில் பாலாலயம் நடைபெறும்.
    • கோவிலில் சாமி புறப்பாடு மற்றும் உற்சவங்கள் நடைபெறாது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாக உள்ள இந்த கோவிலில், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

    இதற்கான திருப்பணிகள் தொடங்கும் முன்பு, கோவிலில் பாலாலயம் நடைபெறும். அதன்படி, தேவநாதசாமி கோவிலில் வருகிற 5-ந்தேதி(திங்கட்கிழமை) பாலாலயம் தொடங்கி, 7-ந்தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதில் 5-ந்தேதி மாலையில் பகவத் பிரார்த்தனை, புண்ணியாவாஜனம், பூர்ணாகுதி நடைபெறுகிறது. 6-ந்தேதி காலையில் புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகாசாந்தி திருமஞ்சனம், யாகம் நடைபெற உள்ளது. பின்னர் 7-ந்தேதி புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து திருப்பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளது. இதனால், கோவிலில் சாமி புறப்பாடு மற்றும் உற்சவங்கள் நடைபெறாது. தொடர்ந்து கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, திருப்பணிகள் முடியும் நிலையில் தான் அதுபற்றிய விவரம் தெரியவரும் என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3.45 மணிக்கு மேல் 4.40 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து தினசரி கோவிலில் சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

    மே 1-ந் தேதி இரவு கருட மகா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி காலை 5 மணி அளவில் நடக்கிறது. 6-ந்தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும், 7-ந்தேதி காலை துவாதச ஆராதனமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ராமநவமி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
    • தினந்தோறும் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்று முறை நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் ராம நவமியை முன்னிட்டு 9 நாள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான ராமநவமி உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு காலையில் திருமஞ்சனம் மற்றும் மாலை சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்று முறை நடைபெறுகிறது. முக்கிய விழாவான ராமநவமி விழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு காலையில் சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மதியம் சேவை காலம், மாலை சாற்றுமுறை நடைபெற்று சாமி வீதிஉலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நாளை அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
    • சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமகம் அன்று, தேவநாத சாமி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக செல்வது வழக்கம். அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி தங்க பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு செல்கிறார்.

    பின்னர் காலை 7:30 மணியளவில் கடற்கரையில் தேவநாத சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலுக்கு சாமி செல்கிறது. அங்கு விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, தேவநாத சாமி மாலை 3 மணியளவில் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மீண்டும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாசாமி கோவிலை வந்தடைகிறார்.

    முன்னதாக நாளை காலை தேவநாதசாமி கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சாமி புறப்பட்ட பின்னர், கோவில் நடை சாத்தப்பட்டு, மாலையில் சாமி திரும்ப வந்த பின்னர் கோவில் நடை திறக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 28-ந்தேதி ரதசப்தமி நடைபெற உள்ளது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் தாயார் உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கடந்த 14- ந்தேதி தாயார் உற்சவம் தொடங்கியது. அதனை தொடர்ந்து தேவநாதசுவாமி மற்றும் தாயாருக்கு தினந்தோறும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி வீதிஉலாநடைபெற்றது. நேற்று தாயார் உற்சவம் நிறைவு விழா நடைபெற்றது.

    இதையொட்டி செங்கமலதாயாருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி கோவிலில் ரதசப்தமி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். பின்னர் கோவில் முன்புள்ள அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி தேவநாதசுவாமி எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது.
    • தீர்த்தவாரி கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, நேற்று பெருமாள் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க பல்லக்கில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று விஸ்வரூப தரிசனமும், ஆராதனையும் நடைபெறுகிறது. நேற்று காலை செங்கமலத்தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பெருமாள் மற்றும் தாயார் வீதி உலா மாலையில் நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கணு தீர்த்தவாரி, பாரிவேட்டை விழா கோவில் அருகே கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தைலக்காப்பு அலங்காரம் வருகிற சித்திரை மாதம் வரை நடைபெற உள்ளது.
    • தைலக்காப்பு எடுத்துவிட்டு மீண்டும் பெருமாளுக்கு ஆபரண தங்கம் அணிவிக்கபடும்.

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தலமாகும். இந்த கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது.

    இதையடுத்து அன்று இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 7-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராப்பத்து மண்டபத்திற்கு கொண்டு சென்று திருமஞ்சனம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேவநாதசுவாமி மூலவருக்கு ஆபரண தங்கம் அகற்றி தைல காப்பு உற்சவம் தொடங்கியது. இதையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் மூலவர் தேவநாத சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து ராஜ அலங்காரத்துடன் இருந்த தேவநாதசுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இந்த தைலக்காப்பு அலங்காரம் வருகிற சித்திரை மாதம் வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் தைலக்காப்பு எடுத்துவிட்டு மீண்டும் பெருமாளுக்கு ஆபரண தங்கம் அணிவிக்கபடும். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இன்று மாலை தேவநாதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.
    • தைலக்காப்பு சித்திரை மாதம் வரை சாமிக்கு சாற்றப்படும்.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 23-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை, சாற்றுமுறை நடைபெற்று வருகிறது. விழாவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மூலவர் தேவநாதசாமிக்கு தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று(சனிக் கிழமை) மாலை தேவநாதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் நாளை ராஜ அலங்காரம் கலைக்கப்பட்டு மூலவர் தேவநாதசாமிக்கு தைலக்காப்பு சாற்றப்படும். இந்த தைலக்காப்பு சித்திரை மாதம் வரை சாமிக்கு சாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி கடந்த 23 ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று 1-ந் தேதி பகல்பத்து உற்சவம் முடிவடைந்தது. இன்று 2-ந் தேதி (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் (பரமபத வாசல்) முன்பு மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதைமுன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) வழியாக எழுந்தருளினார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் திரளாக திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷங்களை எழுப்பி தேவநாதசுவாமியை தரிசித்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக, இன்ஸ் பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து தேவநாதசாமி வெளிப் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசிக்க பொதுமக்களை அனுமதித்தனர்.

    பின்னர் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. மேலும் ஜனவரி 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    ×