search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று கனு தீர்த்தவாரி நடைபெறுகிறது
    X

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று கனு தீர்த்தவாரி நடைபெறுகிறது

    • திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது.
    • தீர்த்தவாரி கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை ஆண்டாள் திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, நேற்று பெருமாள் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க பல்லக்கில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று விஸ்வரூப தரிசனமும், ஆராதனையும் நடைபெறுகிறது. நேற்று காலை செங்கமலத்தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பெருமாள் மற்றும் தாயார் வீதி உலா மாலையில் நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கணு தீர்த்தவாரி, பாரிவேட்டை விழா கோவில் அருகே கெடிலம் ஆற்றில் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×