search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi thiruvizha"

    • விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

    வைகாசி மாதம் முழுவதும், எவர் ஒருவர் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றாரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பவுர்ணமி நாளிலாவது இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • நாளை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று நடந்தது.

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் இன்று விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வருகிறது. இந்த விசாக திருவிழாவில் கலந்து கொண்டு ஒருநாள் சாமி தரிசனம் செய்வதால் ஒரு வருடத்தில் 12 மாதம் வெள்ளிக்கிழமை தரிசனத்துக்கு சமம் என்பது ஜதீகம்.

    அந்த வகையில் பக்தர்கள் நேற்றில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களில் வந்து இன்று காலையில் இருந்தே கடல் மற்றும் நாலி கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, அலகு குத்தியும், அங்க பிரதட்சணம் செய்தும், பால் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து கோவிலை வலம் வந்து கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷம் விண்னண பிளக்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெரும் இவ்விழா கடந்த மே 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்தல் நடைபெற்றது.

    கடற்கரையில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டம்.

    கடற்கரையில் புனிதநீராடிய பக்தர்கள் கூட்டம்.


    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், அதைத் தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலமாக வந்து கோவில் சேர்கிறார்.

    இதே போல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான நேற்று பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் நாளையும் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    பக்தர்கள் வசதிக்காக கோவில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • இன்று முருகனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடக்கும்.
    • எந்த அபிஷேகத்தை பார்த்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    விசாக நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.

    பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

    பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்டகடன்கள் தீரும்.

    பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்துபார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகும்.

    சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர்.

    இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும்.

    எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.

    மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும்.

    திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும்.

    சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும்.

    பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும்.

    தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகல வித பாக்கியமும் நமக்கு கிடைக்கும்.

    • இன்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
    • அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக பெருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான விசாக திருவிழா, கடந்த மே 24-ந் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகன்-தெய்வானையுடன் உற்சவர் சன்னதியில் இருந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து அங்கு நீர் நிரப்ப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார். 9-ம் நாளான நேற்று வசந்த உற்சவத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. 6 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினர்.

    அங்கு காலை முதல் மாலை வரை, பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வைகாசி விசாகத்தையொட்டி மதுரை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


    விசாகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு அதிக அளவு வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு மற்றும் கோவில் வாசல் பகுதியில் முழுவதும் தேங்காய் நார் விரிப்புகள் போடப்பட்டிருந்தது.

    மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை, சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு தனி வரிசை என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.

    கோவிலுக்குள் கூடுதலாக மின்விசிறி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிகாலை 6 மணி முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முருகனின் 6-வது படை வீடான அழகர்மலையில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலிலும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையடிவாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பல்வேறு காவடிகள் எடுத்து மலைமேல் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் நீராடி பின்னர் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் மற்றும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

    இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி கோவில், பூங்கா முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.

    • மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று முருகனை வழிபட உகந்த நாள்.
    • முருகனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி இது.

    ஓம் அப்பா போற்றி

    ஓம் அரனே போற்றி

    ஓம் அழகா போற்றி

    ஓம் அருவே போற்றி

    ஓம் உருவே போற்றி

    ஓம் அபயா போற்றி

    ஓம் அதிகா போற்றி

    ஓம் அறுபடையோய் போற்றி

    ஓம் ஆறுமுகத்தரசே போற்றி

    ஓம் ஆதி போற்றி

    ஓம் அனாதி போற்றி

    ஓம் இச்சை போற்றி

    ஓம் கிரியை போற்றி

    ஓம் இறைவா போற்றி

    ஓம் இளையோய் போற்றி

    ஓம் ஈசா போற்றி

    ஓம் நேசா போற்றி

    ஒம் உத்தமா போற்றி

    ஓம் உயிரே போற்றி

    ஓம் உணர்வே போற்றி

    ஓம் உமைபாலா போற்றி

    ஓம் எளியோய் போற்றி

    ஓம் எண்குணா போற்றி

    ஓம் ஏகா போற்றி

    ஓம் அனேகா போற்றி

    ஓம் ஒலியே போற்றி

    ஓம் சுடரொளியே போற்றி

    ஓம் கந்தா போற்றி

    ஓம் கடம்பா போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் காவலா போற்றி

    ஓம் கார்த்திகேயா போற்றி

    ஓம் குகனே போற்றி

    ஓம் குமரா போற்றி

    ஓம் குறவா போற்றி

    ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி

    ஓம் சரவணா போற்றி

    ஓம் சண்முகா போற்றி

    ஓம் சத்தியசீலா போற்றி

    ஓம் சிட்டானே போற்றி

    ஓம் சிவக்குமரா போற்றி

    ஓம் சிவக்கொழுந்தே போற்றி

    ஓம் சித்தி போற்றி

    ஓம் முத்தி போற்றி

    ஓம் தலைவா போற்றி

    ஓம் தவப்புதல்வா போற்றி

    ஓம் தணிகைமுருகா போற்றி

    ஓம் சூரா போற்றி

    ஓம் வீரா போற்றி

    ஓம் சுப்ரமண்யா போற்றி

    ஓம் செந்தமிழா போற்றி

    ஓம் செங்கல்வராயா போற்றி

    ஓம் சேவலா போற்றி

    ஓம் சேனாதிபதியே போற்றி

    ஓம் ஞானபண்டிதா போற்றி

    ஓம் தூயோய் போற்றி

    ஓம் துறையே போற்றி

    ஓம் நடுவா போற்றி

    ஓம் நல்லோய் போற்றி

    ஓம் நாதா போற்றி

    ஓம் போதா போற்றி

    ஓம் நாவலா போற்றி

    ஓம் பாவலா போற்றி

    ஓம் நித்தியா போற்றி

    ஓம் நிமலா போற்றி

    ஓம் பொன்னே போற்றி

    ஓம் பொருளே போற்றி

    ஓம் புலவா போற்றி

    ஓம் பூரணா போற்றி

    ஓம் மன்னா போற்றி

    ஓம் மயிலோய் போற்றி

    ஓம் மறையே போற்றி

    ஓம் மணக்கோலா போற்றி

    ஓம் மாசிலாய் போற்றி

    ஓம் மால்முருகா போற்றி

    ஓம் முருகா போற்றி

    ஓம் முதல்வா போற்றி

    ஓம் முத்தையா போற்றி

    ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி

    ஓம் வரதா போற்றி

    ஓம் விரதா போற்றி

    ஓம் விவேகா போற்றி

    ஓம் விசாகா போற்றி

    ஓம் விதியே போற்றி

    ஓம் கதியே போற்றி

    ஓம் விண்ணோர் தொழும் விமலா போற்றி

    ஓம் குஞ்சரிமணாளா போற்றி

    ஓம் பரங்குன்றின் பரமா போற்றி

    ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி

    ஓம் செந்தில் செவ்வேலா போற்றி

    ஓம் ஆண்டியாய் நின்றாய் போற்றி

    ஓம் ஆவினன் குடியோய் போற்றி

    ஓம் ஏரகப் பெருமான் போற்றி

    ஓம் எம்பிரான் குருவே போற்றி

    ஓம் வள்ளி மணாளா போற்றி

    ஓம் வளர் தணிகேசா போற்றி

    ஓம் சோலையில் செல்வா போற்றி

    ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி

    ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

    ஓம் உடல் நலம் தருவாய் போற்றி

    ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி

    ஓம் சினம் காமம் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் அனைத்தும் நீயே போற்றி

    ஓம் அருள்வாய் வள்ளி

    மணாளா போற்றி

    ஓம் தேவசேனா சண்முகா

    போற்றி போற்றி போற்றியே.

    • சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறும்.
    • நாளை 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 24-ந் தேதி காப்புகட்டுதலுடன் வைகாசி விசாகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கடந்த 8 நாட்களாக தினமும் இரவு 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக விசாக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி மதுரை நகர் பகுதியில் இருந்தும், திருப்பரங்குன்றத்தை சுற்றில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், மயில்காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சண்முகர் சன்னதியில் இருந்து விசாக கொறடு மண்டபத்திற்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் இடம் பெயருகிறார். இதனையடுத்து அதிகாலை 5.30 மணியிலிருந்து பக்தர்கள் நேர்த்திக்காக கொண்டு வரும் பாலில் சண்முகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை 3-ந்தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.

    விசாக திருவிழாவையொட்டி பால் குடங்கள், காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் தங்களது பாதம் சுடமால் கோவிலுக்குள் செல்வதற்கு வசதியாக இந்த ஆண்டு முதல் முறையாக கோவில் நிர்வாகத்தின் கீழ் ஒரு உபயதாரர் மூலமாக சோழவந்தானில் இருந்து தென்னைநார்கள் வரவழைக்கப்பட்டு கோவில் வாசலில் இருந்து சன்னதி தெரு நெடுகிலுமாக தென்னை நார் விரிப்பான் வசதி செய்யப்பட்டுள்ளது.

    • இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருணபூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், வாத்திய பூஜை நடைபெற்றது.

    அப்போது திருமணமேடையில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மணமேடை முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை, கன்னிகாதானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதையடுத்து பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மலர்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகா தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமணம், பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ், கோவில் கண்காணிப்பாளர் அழகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 7-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக பகல் 9 மணிக்கு மேல் திருத்தேரேற்றம் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • வைகாசி விசாகம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • மாம்பழத்தை வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சுமரில் அஞ்சேலென வேல் தோன்றும்-நெஞ்சில்

    ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்

    முருகா என்றோதுவோர் முன்.

    -திருமுறை

    ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.

    வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனி ரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டால் பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். 'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகன். சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்ப சிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    விசாகம் தினமான இன்று செய்யுங்கள். முருகன் அருள் நிரம்ப கிடைக்கும்.

    • விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
    • இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !

    -அருணகிரிநாதர்

    அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடு மையை களைந்து அவர்களைத் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளை தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

    புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் போற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார்.

    முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களும் முற்றறிவு, அளவற்ற இன்பம், வரம்பில்லாத ஆற்றல், தன் வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்னும் ஆறு குணங்களாகின. இவை தவிர இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன.

    ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். ஐம்பூதமும் உயிருமாகிய ஆறினையும் திருமுகங்களாக உருவகித்துக் கூறி, எங்கும் நிறைந்த கடவுள் தன்மையை மக்களுக்கு நினைவூட்டக் கருதிய பண்டைப் பெரியோர் இறைவனை ஆறுமுகப் பெருமான் என்றனர்.

    எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவமக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோவில்கள் வசந்தோற்சவமும், பிரம்மோற்சவமும் நடைபெறும். இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.

    • நாளை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
    • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்து கொண்டு இருக்கின்றனர். சாலையின் இடது புறமாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதே பக்கத்தில் பாதயாத்திரை பக்தர்களும் செல்லும் போது, வாகனங்கள் வருவதை கவனிக்க முடிவது இல்லை.

    ஆகையால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    அதே போன்று பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரம் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாதயாத்திரை மேற்கொள்ளலாம்.

    இரவு நேர பாதயாத்திரையை தவிர்க்குமாறும், ஒருவேளை இரவு நேர பாதயாத்திரை மேற்கொண்டால் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும்.

    மேலும் கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளை கொண்டு வரவோ கூடாது.

    கோவிலுக்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்தும் வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விழாவில் கலந்து கொள்வதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், தொடர்ந்து முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன்,செந்தில் முருகன்,கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு சுகாதார வசதி, குடிநீர், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

    ×