search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist"

    சுவாச் பாரத் திட்டத்தின் வெற்றியால் இந்திய கிராமங்களில் ஓவியங்களுடன் கூடிய கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat
    சண்டிகர்:

    பிரதமர் மோடி அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தனது உரையினிடையே நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள ஆய்வுக்குழுவினரை குறிப்பிட்டுப் பேசிய மோடி, ‘திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை எப்படி பெற்றது, இதை எப்படியெல்லாம் நைஜீரியா நாட்டில் செயல்படுத்தலாம்? என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள நமது விருந்தினர்களை நான் வரவேற்கிறேன்.

    கடந்த ஒரு வாரமாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார்.



    மேலும், ‘ஐரோப்பாவில் உள்ள ஒரு இடத்தில் வீடுகளின் முகப்பில் அழகிய சுவரோவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துச் செல்கின்றனர்.

    அதேபோல், அநேகமாக இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தின் கழிப்பறைகளின் தூய்மையையும் அவற்றில் உள்ள அழகிய ஓவியங்களையும் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இங்குவரும் ஒரு காலம் ஒருநாள் வரும்’ என மோடி நம்பிக்கை தெரிவித்தார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat 
    கொடைகானலில் சுற்றுலா பயணியிடம் ரூ.2000 லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
    திண்டுக்கல்:

    கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.

    ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.

    இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.

    தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
    ஒகேனக்கல்லில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் லைப்ஜாக்கெட்டு இல்லாமல் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் வழக்கமான பாதையான மாமரத்து கடுவு பகுதியில் உள்ள பரிசல் நிலையத்தில் பரிசல் இயக்க தடை செய்யப்பட்டது. 5 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக நீர்வரத்து இருந்தால் மட்டும் வழக்கமான பாதைகளில் பரிசல் இயக்க தடை நீக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    நீர்வரத்து படிபடியாக குறைந்ததால் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை மட்டுமே மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஒகேனக்கல்லில் உள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 45), அதே பகுதியைச்  சேர்ந்தவர்கள் முருகன் (42), கண்ணையன் (53), வெங்கடேசன் (42), நாடார் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (40) ஆகிய பேரும் சுற்றுலா பயணிகளை பரிசல் அழைத்து செல்லும் பரிசல் ஒட்டி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை பரிசலில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு லைப்ஜாக்கெட் இல்லாமல் அழைத்து சென்றனர். பின்னர் மீண்டும் அவர்களை கரைக்கு கொண்டு வந்து விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்கக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பகுதிகளில் லைப்ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்றதால் நடராஜ், முருகன் உள்பட 5 பரிசல் ஒட்டிகள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
    மேட்டுப்பாளையத்தில் கணவருடன் சுற்றுலா வந்த மலேசிய பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மலேசியா சங்கைப்பட்டாணிகெடா, தாமன்டேசா ஜெயா பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன்(34). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா(34). அங்குள்ள கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரகதி(9) ஜனனி (6) என்ற 2 மகள்கள் உள்ளார்கள்.

    இந்த நிலையில் கணவன் மனைவி 2 பேரும் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த 2-ந்தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னையில் தங்கியிருந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று விட்டு கடந்த 8-ந்தேதி ஊட்டி செல்வதற்காக இரவு 11.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து காரமடை ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

    இதனையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு சிவனேசன் எழுந்து பார்த்த போது தனது மனைவி புவனாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விடுதி மற்றும் அக்கம்பக்கம் விசாரித்தும், தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அவர் விடுதியில் இருந்து கைப்பை, பாஸ்போர்ட், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து சிவனேசன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய பெண் மாயமான சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×