search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mettupalayam police investigation"

    மேட்டுப்பாளையத்தில் கணவருடன் சுற்றுலா வந்த மலேசிய பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மலேசியா சங்கைப்பட்டாணிகெடா, தாமன்டேசா ஜெயா பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன்(34). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனா(34). அங்குள்ள கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரகதி(9) ஜனனி (6) என்ற 2 மகள்கள் உள்ளார்கள்.

    இந்த நிலையில் கணவன் மனைவி 2 பேரும் தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த 2-ந்தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னையில் தங்கியிருந்த அவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று விட்டு கடந்த 8-ந்தேதி ஊட்டி செல்வதற்காக இரவு 11.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து காரமடை ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

    இதனையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு சிவனேசன் எழுந்து பார்த்த போது தனது மனைவி புவனாவைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விடுதி மற்றும் அக்கம்பக்கம் விசாரித்தும், தேடியும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. அவர் விடுதியில் இருந்து கைப்பை, பாஸ்போர்ட், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து சிவனேசன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய பெண் மாயமான சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே கணவனின் மதுபழக்கத்தால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுபாளையம் அருகே காந்திதிருநல்லூர் காந்தி வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், பாண்லே ஊழியர். இவரது மனைவி சங்கீதா (வயது33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் மாத சம்பளத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனால் சங்கீதா குடும்பம் நடத்த சிரமபட்டு வந்தார். மதுபழக்கத்தை சங்கீதா கண்டிக்கும் போது கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த சங்கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மேட்டுப்பாளையத்தில் நோய் கொடுமை அதிகமானதால் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    மேட்டுப்பாளையம் தர்மாபுரி கவிமணிய தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவரது மனைவி திரிபுரசுந்தரி (வயது 77).

    இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகன் ரவி (52) பாதுகாப்பில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று திரிபுர சுந்தரிக்கு நோய் கொடுமை அதிகமாகி உள்ளது. ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த திரிபுரசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை ரவி வீட்டுக்குவந்து பார்த்த போது தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ரவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஏட்டு சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    மேட்டுப்பாளையம் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிடத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது38.) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர்களுக்கு ஒருமகன். ஒரு மகள் உள்ளனர். வடிவேலுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். சம்பத்தன்று இரவும் வடிவேலு குடித்துவிட்டு வந்தார். அதனை ராஜேஸ்வரி கண்டித்த போதும் அவர் வீட்டிற்குள் தூங்கச் சென்று விட்டார். இந்த நிலையில் காலை 7 மணிக்கு ராஜேஸ்வரி தனது கணவரை எழுப்பி இப்படி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் மகன்களுடன் எங்கோ சென்று விடுவேன் என்று கூறிவிட்டு மகன்களுடன் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வடிவேல் மின்விசிறியில் தூக்குப்போட்டார்.

    சிறிது நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு ராம்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×