என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவனின் மதுபழக்கத்தால் இளம்பெண் விஷம் குடித்து மரணம்
Byமாலை மலர்31 July 2018 11:33 AM GMT (Updated: 31 July 2018 11:33 AM GMT)
மேட்டுப்பாளையம் அருகே கணவனின் மதுபழக்கத்தால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுபாளையம் அருகே காந்திதிருநல்லூர் காந்தி வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், பாண்லே ஊழியர். இவரது மனைவி சங்கீதா (வயது33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் மாத சம்பளத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனால் சங்கீதா குடும்பம் நடத்த சிரமபட்டு வந்தார். மதுபழக்கத்தை சங்கீதா கண்டிக்கும் போது கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த சங்கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை மேட்டுபாளையம் அருகே காந்திதிருநல்லூர் காந்தி வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், பாண்லே ஊழியர். இவரது மனைவி சங்கீதா (வயது33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் மாத சம்பளத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனால் சங்கீதா குடும்பம் நடத்த சிரமபட்டு வந்தார். மதுபழக்கத்தை சங்கீதா கண்டிக்கும் போது கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த சங்கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கீதா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X