search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrorists"

    வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களை ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவற்கு தடையாக இருப்பது அரசியல் கட்சியினர் அல்ல. வன்முறை, கலவரம் போன்றவற்றை உருவாக்க வேண்டும், அதன்மூலம் திட்டத்தை தடுக்க வேண்டும் என செயல்பட்டு வருபவர்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.

    ஏற்கனவே தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் அமைத்து செயல்படுவதாக நான் கூறி வந்தேன். இதுதொடர்பாக தமிழக அரசை பலமுறை எச்சரித்தும் தீவிரவாதத்தை தடுக்க அரசு தவறி விட்டது. இதனால் தீவிரவாதிகளின் செயல்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

    மீத்தேன் திட்டம், நியூட்ரின் திட்டம், கெய்ல் எரிவாயு திட்டம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூட பயங்கரவாதிகள் ஊடுருவி தான் பிரச்சினை ஏற்படுத்தி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முன்பே அதற்கு எதிராக நான் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது என்னை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். தற்போது ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க போலீஸ் அதிகாரி தேவாரத்துக்கு முழு அதிகாரம் கொடுத்தார். அதன் விளைவாக நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டனர். இங்கிருந்து ஓடி ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சென்றனர்.

    ஆனால் இன்று அந்த நிலை வேறு. வேறு மாநிலங்களில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்துள்ளனர். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் அதை பயன்படுத்தி இளைஞர்களை தீவிரவாதிகள் மூளைச்சலவை செய்கிறார்கள். தீவிரவாதிகள் விவகாரத்தில் வேடிக்கை பார்க்காமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    விவசாயத்தை அழிப்பது மத்திய அரசின் இலக்கல்ல. ஏனெனில், எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வங்கி கடனாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையையும் பலமடங்கு உயர்த்தி உள்ளது. விவசாயிகளை உயர்த்தவேண்டும் என்றால் அவர்களின் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அதை மனதில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. 150 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு தந்தது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுதான்.

    இதுதவிர ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு கொண்டுவரவும் திட்டம் வகுத்துள்ளது. இதற்கான கூட்டம் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்று நீரை தமிழகத்துக்கு தரவேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது ‘தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை‘ என்றே கூறினார். இதில் இருந்தே தமிழக விவசாயிகளின் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை அறிந்துகொள்ளமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளித்தபோது ‘முட்டை வினியோக ஊழல் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்‘ என்று கூறினேன்.

    ‘தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்‘ என்பதைத்தான் ‘மொட்டை அடிக்கப்படுகிறார்கள்‘ என்றேன். எனவே நான் பேசியதன் கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும். தமிழகம் ஊழல் மயமாக மாறிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #Anantnag #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 1 பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

    மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Anantnag #JammuAndKashmir
    ஜம்முவிலுள்ள பந்திபோரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார்.  #JKEncounter
    தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு ரஜினிகாந்த் அடையாளம் காட்டவேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று ரஜினிகாந்த் கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

    நானும் அதை தொலைக்காட்சியில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையிலும், அது அவருடைய சொந்த குரலா? என்பது ஒரு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற்கனவே பா.ஜ.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக்கொண்டிருக்கிறது.

    எனவே, அந்த குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே தீவிரவாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத்தால், அந்த தீவிரவாதிகள் யார்? என்பதை நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    அதுமட்டுமல்ல வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திர போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி எல்லாமே போராட்டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #thoothukudifiring

    கடலூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு கடலூர் வந்தேன்.

    விழுப்புரத்தில் இன்று பாரதீய ஜனதா சார்பில் சமதர்ம எழுச்சி மாநாடு நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே:- ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

    ப:- மாநில அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது. அதன் பிறகு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

    கே:- தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதே?

    ப:- கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பலமுறை தெரிவித்து விட்டேன்.

    இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் எந்தஒரு முன்னேற்றமும் இருக்கக்கூடாது என பயங்கரவாதிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆரம்பத்திலேயே மாநில அரசு தடுத்து நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும்.

    ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடந்து வருவது என கூறி வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் கம்பெனி தொடங்குவதற்கு தி.மு.க.தான் காரணம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிதான் தொடங்கி வைத்தார்.


    மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மத்திய மந்திரி ஆ.ராசா இதற்கு அனுமதி கொடுத்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக மாநில அரசு கொடுக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    உலக அளவில் உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாட்டின் மதிப்பு கூடி இருக்கிறது. இதில் விவசாயத்தில் இந்தியா சாதனை புரிந்துள்ளது. மேலும் எல்லா வகையிலும் இந்திய அரசு முன்னேற்ற பாதையில் செல்கிறது.

    கே:- தமிழகத்தில் 400 விவசாயிகள் இறந்துள்ளனரே?

    ப:- தமிழக அரசு இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு சொல்கிற எண்ணிக்கையும், மக்கள் சொல்கின்ற எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #thoothukudifiring

    ×