என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "temple festival"
- திருநங்கைகள் பால்குட ஊர்வலம்
- தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை காந்திவீதி, ரங்கவிலாஸ் தோட்டத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
ஆடி 3-ம் வெள்ளிக்கிழ மையையொட்டி இன்று காலை 6 மணியளவில் பால்குட ஊர்வலம் நடந்தது. பால்குட ஊர்வலத்தை புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் பழனிசாமி, தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவி ஷீத்தல்நாயக் தலைமையில் திருநங்கைகள், பெண்கள்என 108 பேர் பங்கேற்று பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
சமூகத்தில் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற வேண்டு தலோடு திருநங்கைகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பால்குட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனலட்சுமி செய்திருந்தார்.
- 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
- 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
கடலூர்:
ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் வழிபாடு, விஷேச பூஜைகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வடக்குதிட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத வழிபாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு வடக்குதிட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் தரப்பை சேர்ந்தவர்களும் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் தரப்பை சேர்ந்தவர்களும் கோவிலுக்கு வந்தனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இதை பார்த்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த மோதல் குறித்து சந்தோஷ் புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சரண்ராஜ், பழனிவேல், காளிதாஸ், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ், சக்திவேல், ஆகாஷ், சுபாஷ் ஆகியோர் மீதும் மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.
- இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே பெரியூபட்டியில் உள்ள மதுரைவீரன், பட்டாணி, சன்னாசி, துரோபதி, வீரபுத்திரன் ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.
21-ந் தேதி காப்புகட்டி 8-நாட்கள் விரதம் இருந்தனர். அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28-ந்தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மதுரை வீரனுக்கு அசைவ படையல் போட்டு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கவுரி ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலுக்கு சென்று வழிபட காரப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுரி (45) என்பவர் ஆனத்தூருக்கு வருவதாக கூறியதால், அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
அரசூர் - பண்ருட்டி சாலையில் ஆனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கதுரை லேசான காயங்களுடன் சாலையில் கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கவுரி இறந்துபோனார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
- 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் இளையராஜா, அசோக், கல்வி, மணிகண்டன், சக்தி, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இளையராஜா, அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கு புகைப்பட்டி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நடைபெற்றது. அப்போது ஐதீகப்படி ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கோவிலுக்கு வந்தார். கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர். இதனை அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், கோவில் அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பிரிவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோவில் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
- தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆர்.கோம்பை கிராமத்தில் வந்தவழி பெரியகருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் ஆடுகள், அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.
பக்தர்கள் சார்பில் 355 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழி, சேவல்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இவற்றை கொண்டு ராட்சத அண்டாக்களில் அசைவ உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. பெரியகருப்பசாமிக்கு படையல் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைதொடர்ந்து தயாரிக்கப்பட்ட அசைவ உணவு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய இந்த விருந்து இரவு வரை நீடித்தது. இந்த விழாவில் ஆர்.கோம்பை மட்டுமின்றி சுற்றுப்புரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கருப்பசாமியை வழிபட்டு சென்றதுடன் விருந்திலும் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.
- தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
- பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 2-வது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- ஒருவர் கைது
- ஜெயிலில் அடை-த்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கெங்கை அம்மன் திருவிழா நடந்துவருகிறது.
இதனையொட்டி சாமி ஊர்வலம் நேற்று நடந்தது. அதே பகுதியை சேர்ந்த தீபக் (வயது 22) என்பவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த செந்தூர ப்பாண்டியன் (31), தீபக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது 2 பேரும் மோதலில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த தீபக் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, செந்தூர ப்பாண்டியனை கைது செய்து ஜெயிலில் அ்டைத்தனர்.
- ஆடிப்பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
- 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும்.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த ஆடிப் பெரும் தேர்த்திருவிழா இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 19-ந் தேதி பூச்சாட்டுடன் பண்டிகை தொடங்க உள்ளது. 26-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி முதல் பூஜையும், 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆடிப்பெரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது.
இதற்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துதல், தற்காலிக கடைகள் புதுப்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி பகுதி வரை அமைப்பதற்கான ஏலம் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலர் ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
இதேபோல் அந்தியூர் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் தண்ணீர் பந்தல் வனப்பிரிவு வரையான பகுதிக்கு கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் மாறன் தலைமையில் ஏலம் நடைபெற உள்ளது.
மேலும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செயல் அலுவலர் மோகனப்பிரியா, மற்றும் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.சாந்தப்பன் ஆகியோர் செய்து வருகின்றார்கள்.
- கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் முகமது இப்ராஹிம், கோவிந்தன், ஸ்ரீதர், மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அலுவல ர்களும் கலந்து கொண்டனர். கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 3 மத தலைவர்கள் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல் டவுன், மூஞ்சிக்கல், அண்ணா நகர், நாயுடுபுரம் பள்ளி வாசல்களை சேர்ந்த ஜமாத்தார்களும், கொடை க்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், உதவி பங்கு தந்தை நிக்கோலஸ், கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவரும் இந்திய பெந்தகோஸ்தே சபையின் நிர்வாகியுமான டாக்டர் குரியன் ஆபிரகாம், கிளாசிக் சலாமத், டி.ஜி. அசோசியேட்ஸ் தனசேகரன், எஸ். ஆர் அசோசியேட்ஸ் ராம் மோகன், கொடைக்கா னல் நகர தி.மு.க. துணைச் செயலாளர்கள் சக்திமோ கன், சுப்பிரமணி, கோமதி சக்திவேல், நகர பொருளா ளர் முகமது நைனார், நகர அவைத் தலைவர் மரிய ஜெயந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுதாகர், இளங்கோவன், அரசு வக்கீல் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாப சாவு
- கோவில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே–யுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி விஜய–லட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையே சாத்தங் குடி பகுதியில் உள்ள சூராயி அம்மன் கோவில் திருவிழா–வுக்கு பாலமுருகனின் தாய் அழகம்மாள் மகள்கள் அபிநயா, நாகலட்சுமி, அக்காள் மகன் சின்னமருது ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் திருவிழாவை முடித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் 4 பேரும் புறப்பட்டனர். வழி–யில் சிவரக்கோட்டை அருகே திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமா–றாக ஓடிய இருசக்கர வா–கனம் சென்டர் மீடியனில் வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனை–யில் அனுமதிக்கப்பட்ட அபி–நயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீ–சார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகி–றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்