search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடிதிருவிழா
    X

    பால்குட ஊர்வலத்தை வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்த காட்சி.

    பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடிதிருவிழா

    • திருநங்கைகள் பால்குட ஊர்வலம்
    • தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை காந்திவீதி, ரங்கவிலாஸ் தோட்டத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.

    ஆடி 3-ம் வெள்ளிக்கிழ மையையொட்டி இன்று காலை 6 மணியளவில் பால்குட ஊர்வலம் நடந்தது. பால்குட ஊர்வலத்தை புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் பழனிசாமி, தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவி ஷீத்தல்நாயக் தலைமையில் திருநங்கைகள், பெண்கள்என 108 பேர் பங்கேற்று பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    சமூகத்தில் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற வேண்டு தலோடு திருநங்கைகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பால்குட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனலட்சுமி செய்திருந்தார்.

    Next Story
    ×