search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

    பெரியகுளம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    • தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.
    • பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் ஆனிபெருந்திருவிழா நேற்று தொடங்கியது.

    கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 2-வது நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் அழகு குத்தி தீச்சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கொண்டாடப்படும் திருவிழா என்பதால் இன்று பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×