search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை அருகே துரோபதி அம்மன் கோவில் திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

    செந்துறை அருகே துரோபதி அம்மன் கோவில் திருவிழா

    • காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.
    • இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே பெரியூபட்டியில் உள்ள மதுரைவீரன், பட்டாணி, சன்னாசி, துரோபதி, வீரபுத்திரன் ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.

    21-ந் தேதி காப்புகட்டி 8-நாட்கள் விரதம் இருந்தனர். அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28-ந்தேதி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். நேற்று கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மதுரை வீரனுக்கு அசைவ படையல் போட்டு சிறப்பு பூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று 30-ந்தேதி துரோபதியம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×