search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple festival"

    • ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
    • 2 பேர் கைது

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பெரிய வேலி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 35). ஊர் நாட்டாண்மைதாரர்.

    இந்த பகுதியில் ஓசூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடத்துவது குறித்து கடந்த 28-ந் தேதி கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதே பகுதியை சேர்ந்த இளைய குமார் (23) என்பவருடன் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஜெயகாந்தனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென ஜெயகாந்தனை இளைய குமார் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்.

    இதில் ஜெயகாந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை ஜெயகாந்தனின் அண்ணன் ஜெயக்குமார், தந்தை பெருமாள், தாயார் தங்கமணி ஆகியோர் தட்டி கேட்டனர்.

    இளைய குமாருக்கு ஆதரவாக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஜெய காந்தனின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இளைய குமாரின் உறவி னர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடால் ஜெய காந்தனின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    காயமடைந்த ஜெயகாந்தனின் குடும்பத்தி னரை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைய குமார், மற்றும் தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே சின்னாளப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி காளியம்மன், முனியப்பன், ஊர்க்காவல் சாமி கோவிலில் ஆண்டுதோறும் சாமி கும்பிடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    30, 31 ஆகிய தேதிகளில் கரகம், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று இரவு 12 மணிக்கு அழகர் தோப்புக்கு சென்று கரகம் ஜோடித்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    ேகாவில் முன்னால் ஆடு பலியிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். அன்னதானமும் நடைபெற்றது.

    • முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம் பழமை வாய்ந்தது. இந்த தேவாலயத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நவநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனை ெதாடர்ந்து விசேஷ திருப்பலி கோவிலில் நடைபெற்று, அடைக்கலமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது .கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. விழா நிகழ்ச்சிகளுக்கு தேனி மாவட்ட அருள் தந்தை முத்து தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேவா மிஷனரி அருள் சகோதரிகள், தேனி காணிக்கை அருட் சகோதரிகள், கமலவை அருட் சகோதரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 23). இவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னிசியனாக வேலைபார்த்து வந்தார்.

    திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இவரது நண்பர் தீபன் (28). இவர்கள் எதிர் வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50). இந்த நிலையில் கரக ஊர்வலத்தில் மேளம் அடித்து சென்றதாக தெரிகிறது.

    அப்போது இரு தரப்பினரிடையே நடனம் ஆடுவது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கை கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

    இதில் புருஷோத்தமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார்.

    அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது சம்பந்தமாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தேடி வருகின்றனர்.

    கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்திக்குத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • போலீஸ்காரர் கார்த்திக் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலக காலனியில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கார்த்திக்.

    கடந்த 17-ந்தேதி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் பிரவீண் ஆகியோர் தலைமை செயலக காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்த போது திரு.வி.க.நகர் தொகுதி தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் சாமிக் கண்ணு வீட்டு முன்பு இருந்த இரும்பு தடுப்பு வேலியை நகர்த்தி வாகனத்தில் செல்ல முயன்றனர். அப்போது கார்த்திக்கை, சாமிக்கண்ணு மற்றும் அவரது மகன்கள் மைனர் பாபு தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ்காரர் கார்த்திக் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சாமிக்கண்ணு, அவரது மகன்கள் மைனர் பாபு (38), ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா காஞ்சிபுரம் பாவாஜி தெருவில் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் பின்தொடர்ந்து நடந்து சென்றனர். கோவில் விழாவை படம் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த புகைப்படகலைஞர் வெங்கடேசனை (வயது50) ஏற்பாடு செய்து இருந்தனர். அவர் அம்மன் வீதி உலா, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்தபடி சென்றார். அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் புகைப்பட கலைஞர் வெங்கடேசன் மற்றும் சாமி தரிசனம் செய்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், இசைக்கலைஞர்கள் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிலில் ஆடி மாத திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரிந்தது. அவரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே கோவில் திருவிழாவில் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
    • கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள உளுத்தி மடை ஊராட்சிக்கு உட்பட்ட பி.வாகைக்குளம் கிராமத்தில் பிறைவுடைய அய்யனார், சுந்தரவள்ளி அம்மன் கோவில் கும்பாபி ஷேகம் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது.

    48 நாட்கள் மண்டல பூஜை விழாவையொட்டி கோவில் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு அன்ன தானம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிடாய் வெட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அன்னதான விருந்திற்காக போடப் பட்ட பந்தல் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ மள மளவென கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து அன்னதான பந்தலுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, உறியடி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான கிராம இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை காண குழுமியிருந்த இளம் பெண்கள் முன்பு இளை ஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி ஆர்ப்பரித்தனர். இதனை கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். 

    • கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஊதாக்கட்டை (எ) ஆறுமுகம் என்பவரது மகன் அய்யனார் (வயது 22). இவர் வெளியூரில் தங்கி கொத்த–னார் வேலை பார்த்து வரு–கிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த–தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊரான புளியங் குளம் கிராமத்திற்கு அய்ய–னார் வந்திருந்தார். திருவிழா–வையொட்டி கலை நிகழ்ச்சி முடிந்த நிலையில் நேற்று காலை அய்யனார் வெளி–யில் சென்று விட்டார்.

    இதற்கிடையே எம்.புளியங்குளம் அருகேயுள்ள மயிலி ரெயில்வே பாலத் திற்கு அடியில், மதுவில் பூச்சி மருந்தை குடித்த நிலை–யில் அய்யனார் உயிருக்கு போராடி கொண்டிருப்ப–தாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவி–னர்கள் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அதன்பின்னர் அங்கி–ருந்து மேல் சிகிச்சைக்காக அய்யனார் அருப்புக் கோட்டை அரசு மருத்துவ–மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இருப்பினும் உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் வழியி–லேயே அய்யனார் பரிதாப–மாக உயிரிழந்தார். இதனை–யடுத்து அவரது தாய் அழகு மீனாள் கொடுத்த புகா–ரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருச்சுழி போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    வெளியூரில் தங்கி கொத் தனார் வேலை பார்த்து வந்த அய்யனார் சொந்த ஊரில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

    • ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய் கருப்பண சுவாமி கோவிலில் ஆடி உற்சவ திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.இதற்கு சாணார்பட்டி ஒன்றியம் தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார்.இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன்,நத்தம்தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின குமார், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன்,

    வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி,கணவாயப்பட்டி ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகளுடன் பக்தர்களுக்கு பிரமாண்ட விருந்து அளிக்கப்பட்டது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. மேலும் இங்கு சித்தரின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதம் இந்த கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி நேற்று திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதன்பின் ஆடி 18-ம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சர்வ தீப ஆரத்தியுடன் அன்னதான ஏற்பாடுகள் தொடங்கின.

    இதில் 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகள், 4டன் மளிகை பொருட்களுடன் 120 சமையல் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட விருந்து தயாரிக்கப்பட்டது.

    அதன்பின் சுவாமிக்கு படையல் பூஜை நடந்தது. வடித்து கொட்டப்பட்ட பிரம்மாண்ட அன்ன குவியலில் வேல் குத்தி சிவலிங்கம் பிடித்து பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க ஆடி 18 அன்னதான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • திருநங்கைகள் பால்குட ஊர்வலம்
    • தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை காந்திவீதி, ரங்கவிலாஸ் தோட்டத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.

    ஆடி 3-ம் வெள்ளிக்கிழ மையையொட்டி இன்று காலை 6 மணியளவில் பால்குட ஊர்வலம் நடந்தது. பால்குட ஊர்வலத்தை புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் தொடங்கி வைத்தார். தொகுதி செயலாளர் பழனிசாமி, தேசிய இந்து திருக்கோவில்கள் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவி ஷீத்தல்நாயக் தலைமையில் திருநங்கைகள், பெண்கள்என 108 பேர் பங்கேற்று பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    சமூகத்தில் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்ற வேண்டு தலோடு திருநங்கைகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பால்குட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனலட்சுமி செய்திருந்தார்.

    ×